கீற்றில் தேட...
அறிவியல் ஆயிரம்
- விவரங்கள்
- ரஞ்சித் லால்
- பிரிவு: புவி அறிவியல்
இந்த ஆண்டிலும் அந்த நேரம் வந்துவிட்டது. இந்தியாவின் பரந்த வானத்தில் எண்ணில்அடங்காத பறவைகள் பறக்கப் போகின்றன. சில ‘ங' வடிவத்தில். சில சிதறிய கூட்டமாக, சில பகலில், சில இரவில். ஆனால் அந்தப் பறவைகளுக்குத் தெரியும் எங்கே போக வேண்டும் என. பறவைகள் வலசை போகும் (இடம் பெயரும்) காலம் தொடங்கி விட்டது. இனி சீக்கிரம் ஏரிகளும், நீர்நிலைகளும், பூங்காக்களும், தோட்டங்களும், இந்தியாவில் உள்ள காடுகளும் வெளிநாட்டிலிருந்து வரும் இந்த சிறகு பயணிகளால் நிறைந்து விடும்.வலசை போதல் ஆச்சரியம் தரக்கூடிய ஒன்று ஆகும். நாம் கொஞ்சமாகத்தான் அதைப்பற்றி அறிந்து இருக்கிறோம். நம்மால் மிகச்சரியாக ஒரு மனிதனை நிலாவில் தரையிறக்கிவிட முடியும். ஆனால் ஒரு பறவை சைபீரியாவின் ஏதோ ஒரு ஏரியிலிருந்து கிளம்பி பறந்து வந்து இந்தியாவின் ஏதோ ஒரு கிராமத்து ஏரியில் தரையிறங்குவதை அறிய முடிவதில்லை. ஆமாம். பறவைகள் சூரியனையும், விண்மீன்களையும், பூமியினுடைய காந்தப் புலத்தையும், புவியீர்ப்பு விசையையும் இடம் பெயர்வதற்கு பயன்படுத்துகின்றன. மலைகளும், ஆறுகளும், கடற்கரைப் பகுதிகளும் கூட அடையாளமாக இருந்து வழிகாட்டுகின்றன. ஆனால் அந்த சின்ன மூளையில் இத்தனை விசயங்களும் எப்படி பதிந்து இருக்கின்றன என்பதுதான் வியப்பளிக்கிற ஒன்றாக இருக்கிறது.
இன்னொரு கேள்வியும் இருக்கிறது. ஏன் சில பறவைகள் மட்டுமே இடம் பெயர்கின்றன. சில பறவைகள் இடம்பெயர்வதில்லை? ஏன் ஊசி வால் வாத்தும், கட்வால் பறவையும், மச்சவாய் வாத்தும் வலசை போவதில்லை? நம்ம ஊர் காகமோ, குருவியோ வலசை போகிறதா? பறவையியல் அறிஞர்கள் என்ன சொல்கிறார்கள் என்றால், பறவைகள் நல்ல வாழிடத்தை தேடியே வலசை போகின்றன என்று சொல்கிறார்கள்! முக்கியமாக அவைகளுக்கு போதிய அளவு உணவு கிடைக்க வேண்டும்.
குளிர்காலங்களில் வட அய்ரோப்பாவும், மத்திய ஆசியாவும், சைபீரியாவும் பறவைகள் வாழ்வதற்கு ஏற்றதாக இருப்பதில்லை. அதனால் வெப்பமான இந்தியாவுக்கு அவை பறந்து வருகின்றன. பறவையியல் அறிஞர்கள் மேலும் சொல்கிறார்கள், புவியின் வடபகுதி கோடை காலங்களில் பறவைகளின் சொர்க்கமாகத் திகழ்கிறது என்று! எனவே அப்பகுதியே பறவைகள் தங்களின் குடும்பத்தைப் பெருக்க வசதியாக இருக்கிறது. அதனால்தான் அவை வருகின்றன. ஆனால் மச்சவாய் வாத்து மட்டும் இந்தியாவிலேயே தங்கிவிடுகிறதே அது ஏன்? அது தெரியவில்லை. சில பறவைகள் மட்டுமே திரும்பிப்போகின்றன. காரணங்களை ஊகிக்கவே முடியும்.
பெரு நாரைகளோ, கழுகுகளோ, ஒரு வாழ்த்து அட்டையின் எடையளவே இருக்கும் வார்பிலர் பறவையோ எல்லாமே தான் பறந்து வருகின்றன. கொக்குகளும், நாரைகளும், வாத்துகளும் இமய மலைக்கும் மேலே (உயிர் வளி குடுவை இல்லாமல்!) பறக்கும் வல்லமை படைத்தவைகளாகும். இவை பகலில் பறப்பவை.
இதைவிட வியப்பு என்னவென்றால் குட்டிப் பறவைகளான வார்பிலரோ, வாலாட்டிக் குருவியோ, நீலத்தாண்டை பறவையோ எப்படி பறக்கின்றன என்பது தான். இது போன்ற ஒரு பறவையை கையில் வைத்துக் கொண்டு, இது தனியாக சைபீரியாவிலிருந்து விண்மீன்களை வழி கேட்டபடியே இரவு நேரத்தில் மட்டுமே பறந்து, இங்கே எப்படி வந்து சேர்ந்தது என்று நம்மால் ஆனால் அவை அப்படித்தான் வருகின்றன. கற்பனை செய்ய முடியுமா? நிச்சயம் அது கடினம்தான்.
இந்தப் பறவைகளின் மூளைகள் பட்டாணி அளவேதான் இருக்கும்! ஆனாலும் அவை வழிதவறாமல் பறந்து வந்து விடுகின்றன. மூளை அளவுக்கும் திறனுக்கும் தொடர்பில்லை! சோகமான செய்தி என்னவென்றால் இப்பறவைகளில் பல இந்தியாவுக்கு வந்து சேர்ந்ததும் சுட்டு வீழ்த்தப்படுகின்றன. அத்தகைய பெரிய கடலை சாகசம் செய்வது போல பறந்து தாண்டி வந்து தரையிறங்கியதும் இப்படி கொல்லப்பட்டு விடுகின்றன. இது தவறு இல்லையா, நம் வீட்டுக்கு வரும் விருந்தாளிகளை நாம் தானே பாதுகாத்து உபசரிக்க வேண்டும்?
நன்றி : "தி இந்து'
(நன்றி : தலித் முரசு அக்டோபர் 2008)
- விவரங்கள்
- மு.குருமூர்த்தி
- பிரிவு: புவி அறிவியல்
7 முதல் 12 வயதுடைய குழந்தைகளின் உடலில் செயற்கையாக வலியை உண்டாக்கி மூளையின் fMRI ஸ்கேன் எடுத்தார்கள். வலியை உணரும் மூளையின் பகுதியில் ஒரு ஒளிர்தல் காணப்பட்டது.
அடுத்தவர்களுக்கு வலியை ஏற்படுத்தும் வன்முறைக் காட்சியைப் பார்த்தபோதும் இந்தக் குழந்தைகளுக்கு மூளையின் அதே பகுதியில் ஒளிர்தல் காணப்பட்டது. அதாவது குழந்தைகள் அடுத்தவர்களுடைய வலியை தன்னுடைய வலியாக உணர்ந்தார்கள்.
மேலும், சமூக உணர்வுகள் மற்றும் நியாய அநியாயங்களுக்குப்பொறுப்பான மூளையின் பகுதியான the medial prefrontal cortex and the temporoparietal junction களிலும் ஒளிர்தல் காணப்பட்டன.அதாவது அடுத்தவர்களுக்கு வலி ஏற்படுத்துவது தவறு என்ற உணர்வை இயல்பிலேயே குழந்தைகள் பெற்றிருந்தார்கள்.
இதனால்தான் குழந்தைகளை தெய்வங்கள் என்கிறோம். ஆனால் இயல்பிலேயே முரடர்களாக இருக்கும் குழந்தைகளை முரட்டு தெய்வங்கள் என்கிறார்கள் விஞ்ஞானிகள். ஏனென்றால், இவர்கள் அடுத்தவர்களுக்கு வலியை ஏற்படுத்தி அதில் சுகம் காணுகிறார்கள்.
சிகாகோ பல்கலைக்கழக விஞ்ஞானிகள் மூளையை fMRI ஸ்கேன் செய்து இந்த முடிவை எட்டியிருக்கிறார்கள். ஆளுமையை வெளிப்படுத்தும் ஆய்வுகளில் முதல் முறையாக fMRI ஸ்கேன் பயன்படுத்தப்பட்டுள்ளதாக சிகாகோ பல்கலைக்கழக மனநலம் மற்றும் மனோதத்துவ பேராசிரியர் ஜீன் டெசிட்டி கூறுகிறார்.
குற்றச்செயல்களிலும், வன்முறைகளிலும் ஈடுபடும் பிறழ்மனம் கொண்ட இளையோருக்கு சிகிச்சையளிப்பதில் இந்த ஆய்வு உதவுகிறது. மகிழ்ச்சியை வெளிப்படுத்தும் மூளையின் பகுதிக்கு amygdala and ventral striatum என்று பெயர்.
மனிதர்களின் சுயகட்டுப்பாட்டை நிர்ணயிக்கும் மூளையின் பகுதிக்கு the medial prefrontal cortex and the temporoparietal junction என்று பெயர்.
இந்த ஆய்வில் 16 முதல் 18 வயதுடைய எட்டு முரட்டு சுபாவமுடைய இளைஞர்கள் ஈடுபடுத்தப்பட்டனர். இவர்கள் ஆயுதங்களை ஏந்தி சண்டையில் ஈடுபடுபவர்களாகவும், குற்றச்செயலகளில் ஈடுபடுபவர்களாகவும் இருந்தனர்.
இதே வயதுடைய இயல்பான எட்டு இளைஞர்களும் ஆய்விற்கு தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
அடுத்தவருடைய காலை வேண்டுமென்றே ஒருவர் மிதித்து வலிஉண்டாக்குவது போன்ற வீடியோ காட்சி இரண்டு குழுக்களுக்கும் தனித்தனியே போட்டுக் காட்டப்பட்டது. காட்சியைப் பார்க்கும்போது அவர்களின் மூளை fMRI ஸ்கேன் எடுக்கப்பட்டது.
முரட்டுசுபாவம் உடைய இளைஞர்களின் மூளையில்மட்டும் amygdala and ventral striatum நரம்பணுத்தொகுதிகளில் ஒளிர்தல் காணப்பட்டது. அதாவது முரடனுக்கு வன்முறைக் காட்சிகளால் மகிழ்ச்சி ஏற்பட்டது. the medial prefrontal cortex and the temporoparietal junction பகுதியில் அதுபோன்ற ஒளிர்தல் ஏதும் காணப்படவில்லை. அதாவது நியாயம்-அநியாயம் பற்றிய எந்த உணர்வும் அவர்களுக்கு ஏற்படவில்லை.
இயல்பான சுபாவம் உடைய இளைஞர்களின் மூளையின் the medial prefrontal cortex and the temporoparietal junction பகுதியில் மட்டும் ஒளிர்தல் காணப்பட்டது. amygdala and ventral striatum என்ற மூளையின் பகுதியில் ஒளிர்தல் ஏதும் காணப்படவில்லை.
ஆக, பிறக்கும்போது தெய்வமாக இருந்தவன் போகப்போக, முரட்டு தெய்வமாக மாறிப்போகிறான். அதாவது, மிருகமாக மாறிப் போகிறான் என்பதுதான் இன்றைய அறிவியல் நமக்கு உணர்த்தும் உண்மை.
அனுப்பி உதவியவர்: மு.குருமூர்த்தி
- விவரங்கள்
- மு.குருமூர்த்தி
- பிரிவு: புவி அறிவியல்
கிழக்கத்திய நாடுகளில் கையாளப்பட்டு வரும் ஒரு மருத்துவமுறைதான் அக்குபங்சர். மிக நுண்ணிய ஊசிகளை உடலின் குறிப்பிட்ட புள்ளிகளில் செலுத்தி வலியை மறக்கச்செய்யவும், சிகிச்சை அளிக்கவும் இந்த அக்குபங்சர் மருத்துவமுறை பயன்படுகிறது. இதுவரை மனிதர்களுக்கு மட்டுமே பயன்பட்டுவந்த இந்த அக்குபங்சர் மருத்துவமுறை இப்போது கால்நடை மருத்துவத்திலும் பயன்படுத்தப்படுகிறது என்பதுதான் புதிய அறிவியல் செய்தி.
ஜிப்ஸி...இது ஒரு குதிரையின் பெயர். குதிகாலில் பீடித்த நோயால் அவதிப்பட்ட ஜிப்ஸியின் வலியை துரத்தியடித்து, எலும்புகளின் வலிமையைப்பெருக்கி, நோய் எதிர்ப்பு ஆற்றலை அதிகரித்தது அக்குபங்சர் மருத்துவ முறை. பாரம்பரிய மருத்துவ முறையுடன் இணைந்துதான் இந்த சிகிச்சை செய்யப்பட்டது.
வர்ஜீனியா டெக் நகரத்திலுள்ள கால்நடை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிறிய மற்றும் பெரிய மிருகங்களுக்கு அக்குபங்சர் சிகிச்சை அளிக்கப்படுகிறது. கால்நடைகளின் தோல் நோய்கள், தசை மற்றும் எலும்பு சம்பந்தமான நோய்கள், நரம்புமண்டலம் சார்ந்த நோய்கள் இவற்றுக்கெல்லாம் அக்குபங்க்சர் சிகிச்சை பலனளிக்கிறது என்கிறார் இங்கு பணியாற்றும் டாக்டர் மார்க் கிரிஸ்மான். கடந்த பத்தாண்டுகளாக இந்த சிகிச்சை முறையில் விற்பன்னராக இவர் இருக்கிறார்.
கால்நடைகளுக்கு அக்குபங்சர் சிகிச்சை அளிப்பதற்கான பயிற்சியும் சான்றிதழ்படிப்பும் கூட இந்த நிறுவனத்தில் வழங்கப்படுகிறதாம்.
பழமையான மருத்துவ முறைக்கு அக்குபங்சர் மருத்துவ முறை ஒரு மாற்று அல்ல. பழமையான மருத்துவ முறையுடன் அக்குபங்க்சர் மருத்துவ முறை இணைந்து செயல்படுகிறது என்கிறார் டாக்டர் கிரிஸ்மான்.
அனுப்பி உதவியவர்: மு.குருமூர்த்தி
- விவரங்கள்
- மு.குருமூர்த்தி
- பிரிவு: புவி அறிவியல்
விளையும் பயிர் முளையிலே என்பது தமிழ் முதுமொழி. குழந்தைகள் அனைவரும் ஒன்றுபோல் இருப்பதில்லை. முரட்டுத்தனம், அடுத்த குழந்தையை தாக்குதல் ஆகிய குணங்கள் சில குழந்தைகளிடம் இயல்பிலேயே இருப்பது உண்டு. பள்ளிப்பருவத்தை எட்டும் முன்பாகவே குழந்தைகளின் கூட்டுணர்வுத்திறன் வெளிப்பட்டு விடுகிறது என்பது ஆராய்ச்சியின் முடிவு.
பள்ளி செல்லும் வயது அடையாத குழந்தைகளுக்காக முன்பருவ பள்ளிக்கூடங்கள் நடத்தப்படுகின்றன. மற்ற குழந்தைகளுடன் கலந்து பழகும் வாய்ப்பு இந்த பள்ளிகள் மூலம் கிடைக்கிறது. சமூகத்தால் ஏற்றுக்கொள்ளப்பட்ட நற்பழக்கங்கள் இந்தப் பள்ளிகள் மூலம் விதைக்கப்படுகின்றன. குழந்தைகளுக்கு அவர்களுடைய உணர்வுகளைக் கட்டுப்படுத்தும் பயிற்சிகூட இங்குதான் கிடைக்கிறது. சில குழந்தைகள் இயல்பிலேயே முரட்டுத்தனம் வாய்ந்தவர்களாயும், மற்ற குழந்தைகளைத் தாக்கும் குணமுடையவர்களாயும் இருப்பார்கள். பள்ளியின் செயல்பாடுகளில் ஈடுபாடு இல்லாதவர்களாயும் இருப்பது இயல்பானதுதான். இப்படிப்பட்ட குழந்தைகளின் நட்புவட்டம் சிறியதாக இருக்கும். பிற்காலத்தில் வளர்ந்தபின்னரும் கூட சமூகத்தில் மற்றவர்களிடம் நல்ல உறவை இவர்கள் ஏற்படுத்திக்கொள்வதில்லை.
சிறுவர்களின் கூட்டுணர்வைக் குறித்த ஆய்வு அரிசோனா பல்கலைக்கழகத்தில் மேற்கொள்ளப்பட்டது. ஆறு முன்பருவ பள்ளிகளின் வகுப்பறைகளில் இருந்து 97 குழந்தைகள் ஆய்விற்கு உட்படுத்தப்பட்டனர். குழந்தைகளின் நடத்தைகளைப் பற்றிய தகவல்களை அவர்களின் ஆசிரியர்கள் கொடுத்தனர். Q-connectivity முறையில் ஒவ்வொரு குழந்தையும் எத்தனை குழந்தைகளுடன் உறவாடியது, எத்தனை முறைகள் உறவாடியது, அவர்களின் முரட்டுத்தனத்தின் அளவு, வகுப்பில் ஈடுபாடு இவையனைத்தும் சேகரிக்கப்பட்டு அலசி ஆராயப்பட்டது.
முரட்டுத்தனம், கோப உணர்வு, வகுப்பில் ஈடுபாடு காட்டாமை ஆகிய குணங்களைக் கொண்ட குழந்தைகளுக்கு மிகக்குறைவான நண்பர்கள் மட்டுமே இருந்தனர். மாறாக மென்மை, நன்கு பழகும் குணம் இவற்றுடன் வகுப்பில் ஈடுபாடு காட்டும் குழந்தைகளின் நட்புவட்டம் பெரியதாக இருந்தது. இந்த முடிவுகள் முன்பருவபள்ளி வயதினருக்கு மட்டுமல்லாது வளர்ந்த பிள்ளைகளுக்கும் பொருந்துவதாக அமைந்திருந்தன. இந்த முடிவுகள் ஆண் பெண் குழந்தைகளுக்குப் பொதுவாக இருந்தன.
The Child is The Father of The Man என்பார்கள். குழந்தைகளே இப்படியென்றால் சமூகமும் அப்படித்தானே இருக்கும். விதையொன்று போட்டால் சுரையொன்று முளைக்குமா என்ன?
அனுப்பி உதவியவர்: மு.குருமூர்த்தி
- நில அதிர்வுகளை உண்டாக்கும் எரிமலைகள்
- மிதக்கும் பன்னாட்டு ஆய்வகம்
- கற்கால மனிதர்கள் கடல் பயணம் செய்தார்களா?
- ராமேஸ்வரத்தில் நில நடுக்கம் ஏன்?
- ஈறுகெட்ட நாகரிகம்
- பூமிக்கு அடியில் ஆராய்ச்சி
- உயிருள்ளவை காகித உறைகளில்... உயிரற்றவை பனிக்கட்டிப் பெட்டியில்...
- இந்த கடல் வாழ் ஜெண்டில்மேன்களை யார் காப்பாற்றுவார்!?
- ஒரு துப்பறியும் கதை போல அழியும் பறவைகளைத் தேடி
- இளம் மரங்களை காக்கும் பனித் துளிகள்
- இரும்புப் பூச்சு பற்களுடன் கமோடோ டிராகன்
- விலங்குகளின் வாழ்க்கையைப் பாதிக்கும் மருந்துப் பொருட்கள் மாசு
- அத்தி மரத்தின் அதிசய மகரந்தச் சேர்க்கை
- உயிர்ப் பன்மயத் தன்மையை அழிக்கும் ஆக்கிரமிப்பு உயிரினங்கள்
- மரம் நட்டால் உயிர்ப் பன்மயத் தன்மை அழிந்து போகுமா?
- தாவர, விலங்குகள் போல பூஞ்சைகளுக்கும் உரிய மரியாதை
- ஒளிரும் பாலூட்டிகள்
- ஆஹா ஹா
- அழியும் உரங்கோட்டான்களை யார் காப்பாற்றுவார்?
- கழிவு நீரை சுத்தப்படுத்தும் அதிசய உயிரினம்