தனித்து வாழ்பவளின் துயரமும் மீளுயிர்ப்பும்
பெண்களின் பிரச்சினைகளைப் பேசுகின்ற கலையும், படைப்புகளும் குறைவாகவே உள்ளன. பெண்கள், தம் நிலையைப் பேசக்கூடிய சுயசரிதை நூல்கள் மிக அரிதாகவும் குறைவாகவுமே வெளிவந்துள்ளன. ஆணின் வரலாறே சமூகத்தின் வரலாறாகக் கொண்டாடப்படுகிறது. பெண்கள் அவர்களுடைய அனுபவங்களை வெளிப்படையாக எழுதினால், வெளிப்படுத்தினால், இந்தச் சமூகம் என்னவாகப் பார்...