இந்தியாவைப் பற்றிய இந்திய மார்க்சியர்களின் அரசியல் மதிப்பீட்டுப் பிழை
மார்க்சியக் கோட்பாடு என்பது மார்க்ஸுடைய சிந்தனைகளை மட்டுமே கொண்டதன்று. அதற்குள், குழுமங்களை ஆய்வு செய்த மார்க்ஸுக்கு முந்தைய கால அறிஞர் பெருமக்கள் அனைவரின் சிந்தனைகளும் உள்ளடங்கியிருக்கின்றன. திருவள்ளுவத்தின் அறக்கருத்துகளும், ஒப்புரவியக் கருத்துகளும் அதனுள் இருக்கின்றன. வள்ளலாரியமும் இருக்கிறது. திருவள்ளுவர் காலத்தில்...