#01

தனித்திருக்கையில்
தணிய மறுக்கும்
தவிப்பு.

#02

உருகிப்
பெருகும்
உள்ளொழுக்கு.

#03

மௌன மொழி
கிளப்பும்
பேரிரைச்சல்.

#04.

நோய்மை
கொள்ளும் தருணத்து
பிறவிப்பெருங்கடன்.

#05.

கண் எட்டும்
வரை அகப்படா
கானல் பெருந்திட்டு.

#06.

கங்கு
வளர்க்கும்
காற்று.

#07.

வருந்தி
வாங்கும்
வாதை.

#08.

அள்ளக்
குறையா
அட்சயப்பாத்திரம்.

#09.

கதிர்க் கொத்தி
காலஞ் சொல்லும்
கணிப்பானின் கைக்கிள்ளை.

#10.

ப்ரியம்
நிறைந்தொழுகும்
நினைவுத்தாழி.

- இசைமலர்

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.