அவள் ஆடை உலர்த்தும்
அந்தக் கொடிக்கம்பியில்
ஒரு முறையாவது
ஊஞ்சலாடிவிட வேண்டுமென்ற
வேட்கையை தணித்துக் கொண்டது
இரவுக்குறியில் வந்த
முதுவேனில் மேகங்கள்.
வெப்பக் காற்றுதான்
அவள் வியர்வையில் நனைந்த
தாவணியில் நுழைந்து
பருவக்காற்றாகி வெப்பச்சலனமேறி
கொட்டுகிறது
கோடை மழையாய்
இடி மின்னலாய்
கோடையின் காதல் தாண்டவம் காண்.

- சதீஷ் குமரன்

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.