சட்டப்பேரவையில் நடைபெற்ற மது விலக்கு மற்றும் ஆயத் தீர்வைத்துறை மானியக்கோ ரிக்கை மீதான விவாதத்தி ற்கு அத்துறையின் அமைச் சர் நத்தம் ஆர்.விஸ்வநாதன் பதில் அளித்துப் பேசினார். அப்போது, முதலமைச்சர் ஜெயலலிதா குறுக்கிட்டுப் பேசும் போது, மதுவிலக்கு கொண்டுவர வேண்டும் என்றும், மது விற்ப னையை தடை செய்ய வேண் டும் என்றும் வாய்கிழிய பேசுப வர்கள்தான் கள்ளச்சாராயம் காய்ச்சுகிறார்கள் என்று பேசியுள் ளார்.

தமிழகத்தில் பூரண மதுவி லக்கு வேண்டும் என்ற கோரிக் கையை அதிகம் வலியுறுத்தும் அரசியல் கட்சிகளில் பாமகவும் அதன் நிறுவனர் ராமதாஸும் முத லிடத்தில் உள்ளனர். ஜெயலலிதாவின் கூற்று மறை முகமாக ராமதாஸை சாடும் வகை யில் உள்ளதாக சில அரசியல் நோக்கர்கள் கருதினாலும், ராமதாஸ் மட்டுமன்றி, காங்கிரஸ் தலைவர் தங்கபாலு, குமரி அனந் தன் உள்ளிட்ட பல்வேறு தரப்பி னரும், இந்திய தவ்ஹீத் ஜமாஅத் போன்ற சமுதாய அமைப்புகளும் தமிழகத்தில் பூரண மதுவிலக்கு வேண்டும் என்ற கோரிக்கையை வலுவாக பதிவு செய்து வருவது பலரும் அறிந்த உண்மை.

இந்நிலையில் ஜெயலலிதா, யார் கள்ளச் சாராயம் காய்ச்சுகி றார்'களோ அவர்களை குறிப் பிட்டு சொல்லாமல் பொத்தாம் பொதுவாக விமர்சிப்பது மது விலக்கை கொண்டு வந்து மனித குலத்தை காக்க நினைக்கும் அனைவரையுமே இழிவுபடுத்தும் வார்த்தையாகும். மேலும், ஜெயலலிதா இவ்வாறு சொல்வது அவரது பலவீனத்தையும் ஒரு சேர காட்டுவதாக உள்ளது.

ஒரு புறம் பூரண மதுவிலக்கு பேசிக்கொண்டு கள் ளச்சாராயம் காய்ச்சுகிறார்கள் என்று குற்றம் சாட்டும் ஜெயல லிதா, அத்தகைய இரட்டை வேட தாரிகள் மீது நடவடிக்கை எடுத்து அவர்களை மக்கள் முன் அடை யாளம் காட்டுவதை விடுத்து இவ்வாறு பொத்தாம் பொதுவாக புகார் கூறுவது அறிவுடமை அல்ல. ஏனெனில், இதே சட்டமன்றத் தில் தே.மு.தி.க. எம்.எல்.ஏ. அருண் சுப்பிரமணியன், தி.மு.க. வினருக்கு சிறைவாசம் சுகவாச மாக இருப்பதாகவும்,நில அபகரிப்பு வழக்குகளில் தி.மு.க. முக்கிய பிரமுகர்கள் பாதிப்பேர் ஜெயி லிலும், பாதிப்பேர் பெயிலிலும் இருக்கின்றனர் என்றும் கூறிய போது, குறுக்கிட்ட முதல்வர் ஜெயலலிதா,

"தி.மு.க.,வினரிடம் இப்போது ஆட்சி கிடையாது; அதிகாரம் கிடை யாது. அவர்கள் எப்படி செல்வாக் கைப் பயன்படுத்தி சுகவாசிகளாக இருக்க முடியும்? அவர்களுக்கு இப்போது என்ன செல்வாக்கு இருக்கிறது? உறுப்பினரின் பேச்சு, சிறைத்துறை அதிகாரிகளை குற் றம் சாட்டுவதுபோல் இருக்கிறது. பொத்தாம் பொதுவாக பேசக் கூடாது. எந்த சிறையில், எந்தக் கைதி சுகவாசியாக இருக்கிறார் என்பதை குறிப்பிட்டு, உறுப்பினர் கூற வேண்டும்...'' என்றார்.

ஜெயலலிதாவின் இந்த அறிவுரையின்படி யார் கள்ளச்சாராயம் காய்ச்சுகிறார்கள் என்று குறிப் பிட்டு சொல்லாமல் இவர் மட்டும் பொத்தாம் பொதுவாக குற்றம் சாட்டுவது ஊருக்குத்தான் உபதேசம் என்பது போல உள்ளது. எனவே, மதுவிலக்கு விசயத் தில் வெட்டி அரசியல் பேசிக் கொண்டிருக்காமல், அண்ணாவின் வழியில் வரவிருக்கும் அவரது பிறந்த நாளில் தமிழகத்தில் பூரணமதுவிலக்கை அமுல்படுத்த ஜெயலலிதா முன்வர வேண்டும்.

- முகவை அப்பாஸ்

Pin It