சட்டத்தின் மீது நம்பிக்கையுள்ள மக்கள் இறுதியாகவும், உறுதியாகவும் நம்புவது சி.பி.ஐ. விசாரணையையும், அது தரும் தீர்ப்பையும் தான். ஒரு சம்பவத்தில் காவல் துறை விசாரிப்பதில் திருப்தியில்லாதவர்கள் கேட்பது இந்த வழக்கை சி.பி.ஐ. விசாரனைக்கு மாற்ற வேண்டும் என்பதைத் தான். அந்த அளவுக்கு சி.பி.ஐ. மீது மக்களுக்கு ஒரு அதீத நம் பிக்கை உள்ளது.

சி.பி.ஐ.யும் பல்வேறு பிரச்சினை களில் நேர்மையான விசாரணை மற்றும் தீர்ப்பின் மூலமும் நீதியை நிலைநாட்டியுள்ளது என்பதும் அனைவரும் ஏற்றுக் கொண்ட உண்மையாகும். அத்தகைய சி.பி.ஐ. நீதிமன்றத்தின் நீதிபதி ஒருவரே லஞ்சம் வாங்கிக் கொண்டு நீதியை சாகடித்துள்ள செய்தி ஊடகங்க ளில் வெளியாகி மக்களை அதிர்ச் சிக்குள்ளாக்கி உள்ளது.

கர்நாடகாவில் ரெட்டி சகோதரர் கள் என்றழைக்கப்படும் கருணா கர ரெட்டி, ஜனார்த்தன ரெட்டி, சோமசேகர ரெட்டி மூவரும் சட்ட விரோத சுரங்கத் தொழில் மூலம் பல ஆயிரம் கோடி ரூபாய் சம்பா தித்தது கடந்த ஆண்டு கண்டு பிடிக்கப்பட்டது.

எடியூரப்பா மந்திரி சபையில் அமைச்சர்களாக இருந்த கருணா கர ரெட்டியும் ஜனார்த்தன ரெட்டி யும் சுரங்கத் தொழில் முறைகேடு காரணமாக பதவி இழந்தனர். பிறகு அவர்களை சி.பி.ஐ. கைது செய்து ஜெயிலில் அடைத்தது.

அந்த கனிம சுரங்க முறைகேடு தொடர்பாக ஐதராபாத்தில் உள்ள சி.பி.ஐ. கோர்ட்டில் வழக்கு விசா ரணை நடந்து வருகிறது. அந்த சி.பி.ஐ. கோர்ட்டின் நீதிபதியாக இருப்பவர் பட்டாபிராமராவ்.

ரெட்டி சகோதரர்களில் ஜனார்த் தன ரெட்டி மீது மட்டுமே அந்த கோர்ட்டில் வழக்கு விசாரணை நடந்து வருகிறது. இந்த வழக்கில் இவருக்கு ஜாமீன் வழங்க. அதற்கு லஞ்சமாக 10 கோடி பேரம் பேசி, மூன்று கோடி முன் பணம் பெற் றுக் கொண்டு, சி.பி.ஐ. நீதிபதி பட் டாபிராமராவ் ஜாமீன் வழங்கியுள் ளார்.

ஜனார்த்தன ரெட்டிக்கு ஜாமீன் கொடுக்கப்பட்டதற்கு சி.பி.ஐ. கடும் எதிர்ப்பு தெரிவித்தது. ஆந்திர ஐகோர்ட்டில் ஜனார்த்தன ரெட்டி விடுதலையை எதிர்த்து அப்பீல் செய்யப்பட்டது.

அந்த அப்பீல் மனுவை விசாரித்த ஐகோர்ட்டு நீதிபதிகள், சி.பி.ஐ. கோர்ட்டில் ஜனார்த்தன ரெட்டிக்கு ஜாமீன் வழங்கப்பட்ட தில் முறைகேடுகள் நடந்து இருப் பதை கண்டுபிடித்தனர். இதைய டுத்து கடந்த 23-ந்தேதி ஜனார்த் தன ரெட்டியின் விடுதலை உத்த ரவை ரத்து செய்தனர்.

லஞ்ச ஒழிப்புத் துறை விசா ரணை நடத்தவும் உத்தரவிட்டனர். இதற்கிடையே ஆந்திரா உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி மதன் தலைமையில் நீதிபதிகள் குழு ஒன்று கடந்த வியாழக்கிழமை கூடி தீவிர ஆலோசனை நடத்தி யது. அதன் பிறகு சி.பி.ஐ. கோர்ட்டு நீதிபதி பட்டாபிராமராவை சஸ் பெண்டு செய்து ஐகோர்ட்டு நீதிபதிகள் உத்தர விட்டனர்.

இது தொடர்பான விசாரணை முடியும்வரை நீதிபதி பட்டாபிராம ராவ் ஐதராபாத்தை விட்டு வெளியே செல்லக்கூடாது என் றும் உத்தரவிட்டனர்.

இதற்கிடையே நீதிபதி பட்டா பிராமராவின் நடவடிக்கைகளில் ஏற்கனவே சந்தேகம் அடைந்தி ருந்த சி.பி.ஐ. அதிகாரிகள் அவருக்கு தெரியாமலே அவரது செயல்பாடு களை கண்காணித்தனர். அவரது போன், அவரது மகன் போன் அழைப்புகள் ஒட்டு கேட்கப்பட் டன.

பிறகு நீதிபதி பட்டாபிராமராவ் மற்றும் அவரது மகனிடம் சி.பி.ஐ. அதிகாரிகள் கடந்த 4 நாட்களாக தீவிர விசாரணை நடத்தினார்கள். அந்த விசாரணையில், கர்நாடக சட்ட மந்திரி பிரதாப்ரெட்டி, 2 எம்.எல்.ஏ.க்கள், ஓய்வு பெற்ற ஒரு நீதிபதி மற்றும் சில ரவுடிகள் ஆகி யோர் நீதிபதிக்கு பணம் கொடுத்த தில் சம் பந்தப்பட்டிருப்பது தெரிய வந்தது. இதன் தொடர்ச்சியாக சி.பி.ஐ. விசாரித்து ஏராளமான ஆதாரங்களை திரட்டி உள்ளது.

நாட்டையே உலுக்கிய சுரங்கத் தொழில் முறை கேட்டில் கைதான ஒருவரை ஜாமீனில் விடுதலை செய்ய சி.பி.ஐ. கோர்ட்டு நீதிபதியே ரூ.10 கோடி பேரம் பேசி பணம் பெற்றது நாடெங்கும் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தி உள்ளது. சி.பி.ஐ. கோர்ட்டு நீதிபதி ஒருவர் லஞ்சம் வாங்கியதற்காக கைதாவது இதுவே முதல் முறையாகும். லஞ்ச லாவண்யமற்ற தூய்மையான கரத்துக்கு சொந்தக்காரர்கள் என மார்தட்டிக் கொள்ளும் பா.ஜ.க. ஆளும் கர்நாடகாவில், அக்கட்சி யைச் சேர்ந்தவர்களே தங்களின் விடுதலைக்காக நீதிபதிக்கு லஞ்சம் கொடுத்து, நீதியை சாகடிக்க முற்பட்டுள்ளனர்.

இத்தகையோர் இந்தியாவை ஆண்டால், என்னாகும் என்பதை மக்கள் உணர்ந்து கொண்டு மத வாத, ஊழல்வாத பா.ஜ.க.வை வீட் டிற்கு அனுப்ப முயற்சிக்க வேண் டும்.

- முகவை அப்பாஸ்

Pin It