ஹைதராபாத் தில்சுக் நகர் இரட்டை வெடி குண்டு சம்பவத்தை விசாரணை செய்து வரும் புலனாய்வு அமைப்புகள், ஹைதராபாத் முஸ்லிம்களை குறி வைத்து இயங்கி வருகின் றன. அப்பாவி முஸ்லிம் இளைஞர்களைப் பிடித்து தில்சுக் நகர் குண்டு வெடிப்பு தீவிரவாதிகள் இவர் கள்தான் என அவர்களைக் காட்ட முயற்சிகள் மேற் கொண்டு வருகின்றன.

கடந்த காலங்களில் மேற் கொண்ட அதே முயற்சியை புல னாய்வு அமைப்புகள் இப்போதும் மேற்கொண்டு வருவது கவலைய ளிப்பதாக உள்ளது. கடந்த காலங்களில் பயங்கரவாதச் சம்பவங்க ளில் பொய்யாக தொடர்புபடுத் தப்பட்டு, கைதாகி சிறையில் அடைக்கப்பட்ட முஸ்லிம் இளை ஞர்கள் பலரை, நிரபராதிகள் என்று கூறி நீதிமன்றங்கள் விடு தலை செய்திருக்கின்றன. அதோடு பொய் வழக்குகளில் கைது செய்த காவல்துறைக்கும் நீதிமன்றங்கள் கண்டனம் தெரிவித்துள்ளன.

பல்வேறு மனித உரிமை அமைப்புகளும், முஸ்லிம் இளை ஞர்கள் தொடர்புபடுத்தப்பட்ட பயங்கரவாதச் சம்பவங்கள் தொடர்பாக உண்மை அறியும் குழுவாக செயல்பட்டு, "அப்பாவி முஸ்லிம் இளைஞர்களை ஜோடிக் கப்பட்ட வழக்குகளில் விசாரணை அமைப்புகள் கைது செய்யும் போக்கை தடுத்து நிறுத்த வேண் டும் என மத்திய அரசுக்கும், மாநில அரசுகளுக்கும் பரிந்துரை களை அளித்துள்ளன.

கடந்த டிசம்பர் மாதம் 4ம் தேதி பாராளுமன்றத்தில் கேள்வி நேரத் தின்போது, சமாஜ்வாதி கட்சி, ஜனதா தள் (யு) உள்ளிட்ட பல் வேறு கட்சிகளின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் சமாஜ்வாதி கட்சி யின் நாடாளுமன்ற உறுப்பின ரான நரேஷ் அகர்வால் தலைமை யில் திரண்டு, பயங்கரவாத குற்றச் சாட்டுகளின் கீழ் கைது செய்யப் பட்டு, அவை நிரூபிக்கப்படாத நிலையிலும் கூட நாடு முழுவதிலு முள்ள பல்வேறு சிறைச்சாலைக ளில் அடைக்கப்பட்டுள்ள அப் பாவி முஸ்லிம்களை விடுதலை செய்ய வேண்டும் என குரல் எழுப்பினர்.

சபாநாயகரின் இருக்கையை நெருங்கி அவர்கள் குரலெழுப்பிய தால் அவர்களை அமைதிபடுத்த முயற்சித்தும் தோற்றுப் போன துணை ஜனாதிபதி ஹமீது அன் சாரி, கேள்வி நேரத்தை ஒத்தி வைக்கும் அளவிற்கு இந்த எம்.பி.க் கள் அப்பாவி முஸ்லிம்களை விடு தலை செய்ய வேண்டும் என்ற குரலை ஓங்கி ஒலித்தனர்.

இந்த எம்.பி.க்கள், உத்திரப் பிர தேசம், பீகார் போன்ற மாநிலங்க ளைச் சேர்ந்தவர்கள். இந்த மாநி லங்களிலிருந்துதான் அப்பாவி முஸ்லிம் இளைஞர்கள் அதிகள வில் பயங்கரவாதச் சம்பவங்களில் பொய்யாக காவல்துறையினரால் கைது செய்யப்படுகின்றனர் என் பது குறிப்பிடத்தக்கது.

அப்பாவி முஸ்லிம் இளைஞர் களை பொய் வழக்குகளில் கைது செய்வதற்கும், சிறைப்படுத்துவ தற்கும் எதிராக கடுமையான எதிர்ப்புகள் எழும் நிலையிலும், தனது தவறான போக்கை விசா ரணை அமைப்புகள் மாற்றிக் கொண்டதாகத் தெரியவில்லை.

ஹைதராபாத் தில்சுக் நகர் குண்டு வெடிப்புச் சம்பவத்திலும் முஸ்லிம் இளைஞர்களை வேட் டையாடி வருகின்றன விசா ரணை அமைப்புகளும், காவல்து றையும்.

கடந்த 27ம் தேதி இரண்டு முஸ்லிம் இளைஞர்களை சீருடை அணியாத ஹைதராபாத் போலீ ஸôர் கைது செய்து ரகசிய இடத் தில் வைத்து விசாரித்து வருகின்ற னர். கைது செய்யப்பட்டிருக்கும் இருவரும் மாணவர்கள். அவர் களை விதிமுறைகளை மீறி வன் முறையாக கைது செய்திருக்கி றது காவல்துறை.

ஹைதராபாத் எம்.இ.எம்.ஜே. கல்லூரியைச் சேர்ந்த சையத் ஷஃ பியுத்தீன் என்ற மாணவர் மாலை நேரத் தொழுகையை முடித்து விட்டு நண்பர்களுடன் கல்லூரிக் குத் திரும்பிக் கொண்டிருந்த போது அடையாளம் தெரியாத சிலர் (சீருடை அணியாத போலீ சார்) ஷஃபியுத்தீனை கடத்திக் கொண்டு போய் ரகசிய இடத்தில் வைத்திருக்கின்றனர் என தெரி வித்துள்ளனர் அவரது நண்பர் கள்.

ஷஃபியுத்தீன் பஞ்சாரா ஹில்ஸ் பகுதியைச் சேர்ந்தவர் என்பதால் அங்குள்ள காவல் நிலையத்தில் ஷஃபியுத்தீன் கடத் தப்பட்டிருப்பதாக புகார் பதிவா கியுள்ளது.

ஷஃபியுத்தீனை கடத்திச் சென்ற பின்னர் கல்லூரிக்கு வந்த இருவர், உள்ளே நுழையமுற்பட் டுள்ளனர். அவர்களை உள்ளே விட காவலாளி மறுத்துள்ளார். அவரை தள்ளி விட்டு சுவர் ஏறி உள்ளே குதித்த அவர்கள், ஷஃபி யுத்தீனின் நண்பர்களிடத்தில் ஷஃபியுத்தீன் பயன்படுத்திய லேப்டாப்பை கேட்டுள்ளனர்.

நண்பர்களோ நீங்கள் யார் என்பதை அடையாளப்படுத்தி னால்தான் நாங்கள் லேப் டாப்பை ஒப்படைப்போம் என மறுத்துள்ளனர். உடனே ஷஃபி யுத்தீனுடன் நண்பர்களை பேச வைத்துள்ளனர் அந்த இருவரும்! வந்திருப்பவர்களிடம் லேப் டாப்பை கொடுக்குமாறு போனில் கூறியுள்ளார் மாணவர் ஷஃபியுத்தீன் நடுக்கம் நிறைந்த குரலில்.

இதேபோல இன்னொரு சம்ப வம் ஹைதராபாத்தின் சைதா பாத் அமீன் காலனி பகுதியைச் சேர்ந்த அத்னான் என்ற மாண வர் அங்குள்ள அன்வாருல் உலூம் கல்லூரிக்கு இறுதிப் பரீட்சைக்கு முந்தைய தினம் காலை இவரை கைது செய்த சாதாரண உடையில் வந்த போலீஸ், சைபராபாத் காவல்து றையின் சிறப்பு நடவடிக்கை குழு வின் அம்பர்டேட் அலுவலகத் தில் அத்னானை விசாரணைக் காக வைத்திருப்பதாக அத்னா னின் குடும்பத்திற்கு நள்ளிரவில் தகவல் கொடுத்துள்ளது.

கைது செய்யும் நபருக்கு அவர் எந்த குற்றத்திற்காக கைது செய் யப்படுகிறார் என்பதும், கைது செய்யும் போலீஸ் கைதுக்கு சாட்சியாக அவரது குடும்பத்தி னரிடமோ, அண்டை வீட்டாரி டமோ கையெழுத்து பெற வேண் டும் என்பதும், கைது செய்யப் போகும் அதிகாரி சீருடையுட னும் அதில் தனது பெயர், பொறுப்பு போன்றவற்றை வெளிப்படுத்தும் அடையாளங்க ளுடன் செல்ல வேண்டும் என்ப துமான நடைமுறைகளை பின் பற்ற வேண்டும் என்கிறது சட் டம்.

இதேபோல கைது செய்யப் பட்டவர் குறித்த தகவல்கள் அவ ரது குடும்பத்தினருக்கு உடனடி யாக தெரிவிக்க வேண்டும் என்ப தும், கைதானவரை நீதிமன்றத் தில் ஆஜர்படுத்திய பின்னர்தான் நீதிமன்ற அனுமதியுடன் அவரை தனது கஸ்டடியில் போலீஸ் எடு க்க வேண்டும் என்பதும் காவல் துறை மேற்கொள்ள வேண்டிய சட்ட நெறிமுறைகள்.

இந்த விதிமுறைகளையும், நெறிமுறைகளையும் பின்பற்றி னால் அப்பாவிகளை பிடித்து சென்று அச்சுறுத்தி, துன்புறுத்தி அவர்கள் மீது ஜோடிக்கப்பட்ட வழக்கை போட முடியாது என் பதால் கடத்தல் கும்பல்களாக ஹைதராபாத் காவல்துறை செயல்பட்டிருக்கிறது.

எப்படியிருப்பினும், தில்சுக் நகர் குண்டு வெடிப்பு வழக்கில் எத்தனை முஸ்லிம்களைக் கைது செய்தாலும் காவல்துறையால் நீதி மன்றங்களில் ஆதாரங்களை சமர்ப்பிக்க முடியாது. கைது செய்யப்படும் முஸ்லிம்கள் நிரப ராதிகள் என்று நீதிமன்றம் விடு தலை செய்யும் கடந்த காலங்க ளைப்போல! அப்போது இரண் டாவது முறையாக ஹைதராபாத் காவல்துறை கண்டனத்திற்குள் ளாகும்.

முதல் முறை மக்கா மஸ்ஜித் குண்டு வெடிப்பு சம்பவத்தில் அப்பாவிகளை கைது செய்து ஹைதராபாத் போலீஸ் கண்ட னத்திற்குள்ளானது எல்லோருக் கும் தெரிந்த விஷயம்தானே!

குண்டு வெடிப்பு விசாரணையை தேசிய புலனாய்வு நிறுவனத்திடம் ஒப்படைக்க வேண்டும் - அசத்துத்தீன் உவைசி

தில்சுக் நகர் இரட்டை குண்டு வெடிப்பு விசா ரணையை தேசிய புலனாய்வு நிறுவனத்திடம் ஆந்திர மாநில அரசு ஒப்படைக்க வேண்டும் என கோரிக்கை வைத்திருக்கிறார் மஜ்லிஸ் இத்தி ஹாதுல் முஸ்லிமீன் (எம்.ஐ.எம்.) கட்சியின் தலைவர் அசத்துத்தீன் உவைசி.

எம்.ஐ.எம். கட்சியின் 55வது ஆண்டு விழாவை முன்னிட்டு நடந்த நிகழ்ச்சியில் கடந்த 2ம் தேதி ஹைதராபாத் தாருஸ் ஸலாம் அரங்கத்தில் பேசிய உவைசி,

“குண்டு வெடிப்பை நடத்தியவர்கள் கடுமை யாக தண்டிக்கப்பட வேண்டும். குண்டு வெடிப்பில் மரணமடைந்த மற்றும் காயமடைந்தவர்களின் குடும்பங்கள் ஏழ்மை நிலையிலுள்ளவை. அத னால் அரசாங்கம் அவர்களுக்கு அனைத்துவித உதவி களையும் செய்ய முன் வர வேண்டும்.

இந்த குண்டு வெடிப்பு சம்பவத்தில் பாரபட்சமற்ற முறையில் நேர்மையான விசாரணைநடிபேறு உறுதிப்படுத்த வேண்டும். குண்டு வெடிப்பு சம்பவத்திற்கு வகுப்புவாத வர்ணம் பூச மீடியாக்கள் முயற்சிக்கின்றன. குண்டு வெடிப்பு நடந்த ஒரு மணி நேரத்திற்குள் முஸ்லிம் சமூகத்தை குறி வைத்து பல்வேறு கதைகளை செய்தி ஊடகங்கள் அவிழ்த்து விட்டன.

அப்பாவி முஸ்லிம் இளைஞர்கள் போலீசாரால் தொல்லைக் குட்படுத்தப்படுகின்றனர். மக்கா மஸ்ஜித் குண்டு வெடிப்பு சம்ப வத்தில் தவறுதலாக கைது செய்யப்பட்டு, அரசாங்கத்தால் நன்ந டத்தை சான்றிதழ் வழங்கப்பட்ட முஸ்லிம் இளைஞர்களையும் விசாரணைக்காக தூக்கிச் சென்றுள்ளனர் காவல்துறையினர்.

காவல்துறையும், ஒரு பிரிவு மீடியாக்களும் மக்களுக்கு தவ றான செய்திகளைத் தருகின்றன. குண்டு வெடிப்பை நிகழ்த்தி யிருப்பவர்கள் இந்திய குடிமக்களை கொல்ல வேண்டும் என்றநோக்கத்தோடு செயல்பட்டிருக்கிறார்களே தவிர மத நோக்கத்தோடு அல்ல. எனவே பாரபட்சமற்ற விசாரணை மேற்கொள்ளப்பட வேண்டும். உண்மையான குற்றவாளிகளை கைது செய்ய வேண்டும்.

மத ரீதியாக மீடியாக்கள் மக்களை கூறுபோட வேண்டாம். செய்தி ஊடகங்களும், பத்திரிகைகளும் தொடர்ந்து முஸ்லிம் சமூகத்தை குறி வைத்து இயங்கினால் அவற்றின் மீது அவதூறு வழக்கு தொடருவேன்.

தில்சுக் நகர் குண்டு வெடிப்பு அப்சல் குருவின் தூக்கு தண்டனையின் எதிர் வினையாக நிகழ்த்தப்பட்டிருக்கிறது என மத்திய உள்துறை அமைச்சர் சுஷில் குமார் ஷிண்டே கூறியிருப் பது வன்மையாக கண்டிக்கத்தக்கது.

இதுபோன்ற அறிக்கைகளின் மூலம் ஒரே கோணத்தில் விசா ரணையை மேற்கொள்ள வேண்டும் என தனது அதிகாரத்தை பயன்படுத்தி விசாரணை அமைப்புகளை கட்டா யப்படுத்தியுள்ளார் சுஷில் குமார் ஷிண்டே...'' என பேசியுள்ளார் அசத்துத்தீன் உவைசி.

இந்நிலையில், மத்திய உள்துறை அமைச்ச கம், குண்டு வெடிப்பு விசாரணையை தேசிய புலனாய்வு நிறுவனத்திடம் ஒப்படை க்கக்கோரி ஆந்திர அரசுக்கு கடிதம் எழுதியுள்ளது. தற் போது ஆந்திர மாநில காவல்துறை 15 (விசார ணைக்) குழுக்களை நியமித்து இந்த விசாரணை யில் ஈடுபட்டு வருகிறது. இதுவரை குற்றவாளி களை கண்டுபிடிக்க முடியவில்லை.

தேசிய புலனாய்வு நிறுவனமும் நேர்மையாக விசாரிக்குமா என்ற சந்தேகம் நமக்கு எழுகிறது. ஏனெனில், இந் தியன் முஜாஹித்தீன் என்கிற (இல்லாத) அமைப்பு பெரும் சதித் திட்டம் தீட்டியி ருபதாக கடந்த செப்டம்பர் மாதம் இல்லாத அமைப்பிற்கு எதிராக வழக்கு ஒன்றை பதிவு செய்திருந்தது புல னாய்வு நிறுவனம்.

இச்சூழலில், தில்சுக் நகர் குண்டு வெடிப்பு சம்பவத்திற்காக, ஏற்கெனவே வேறு வழக்கில் விசாரணைக் கைதிகளாக திகார் சிறையில் இருக்கும் சையது மக்பூல் மற்றும் இம்ரான் கான் ஆகிய இருவரை கஸ்டடியில் எடுத்து வைத்திருக்கும் புல னாய்வு நிறுவனம், அவர்களை ஹைதரபாத்திற்கு விசாரணைக் காக கொண்டு சென்று விசாரித்து வருகிறது.

இதன் அடிப்படையில் பார்த்தால் தேசிய புலனாய்வு நிறுவனமும் - அப்பாவி முஸ்லிம்களை குண்டு வெடிப்பில் சம்மந்தப்படுத்தி அவர்களை இரையாக் குமோ என்ற சந்தேகம் இயல்பாகவே எழுகிறது.

ஏற்கெனவே இந்துத்துவா பயங்கரவாதிகளை மக்கா மஸ்ஜித், சம்ஜவ்தா எக்ஸ்பிரஸ் ரயில், அஜ்மீர் தர்கா உள்ளிட்ட குண்டு வெடிப்பு சம்பவங்களில் துரத்தி துரத்தி கைது செய்து தனது திறமையை வெளிப்படுத்தியிருந்தது புலனாய்வு நிறுவனம். தில்சுக் நகர் குண்டு வெடிப்பு சம்பவத்தில் அது புல னாய்வு நிறுவனமாக செயல்படுகிறதா புடலங்காய் நிறுவனமாக செயல்படுகிறதா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

தாடி வைத்த முஸ்லிம்களை...

ஹைதராபாத் தில்சுக் நகர் இரட்டை குண்டு வெடிப்புக்கு பின்னர் காவல்துறை மேற்கொண்டு வரும் விசாரணையும், பாதுகாப்பு ஏற்பாடுகளும் மற்றும் காவல் நடவடிக்கைகளில் அவர்கள் ஈடுபட்டிருக்கும் விதமும் முற்றிலும் ஒரு சார்பு மனப்போக்கை வெளிப்படுத்துவதாகவே இருக்கிறது.

ஹைதராபாத் நகரில் பயங்கரவாதத்திற்கு எதிரான நடவடிக்கை என்றபெயரில் சாலைகளில் குவிக்கப்பட்டிருக்கும் பெரும் எண்ணிக்கையி லான காவல் படை ஹைதராபாத்வாசிகளுக்கு மத்தியில் ஒரு பீதியை, பய உணர்வை ஏற்படுத்து வதற்காகத்தான் என்றே காவல்துறையின் நடவ டிக்கைகளின் மூலம் உணர முடிகிறது.

தீவிரவாதிகள் வேட்டை என்ற பெயரில் ஒரு குறிப்பிட்ட சமுதாயத்தை தொல்லைப்படுத்தியும் இலக்காக்கியும் வருகிறது ஹைதராபாத் போலீஸ். கடந்த 2ம் தேதி சனிக்கிழமை காலை ஹைதரா பாத் பேகம் பஜார் பகுதியில் தாடி வைத்த முஸ்லிம் இளைஞர்களை புகைப்படம் எடுத்தும், அதை தங்களின் மொபைல் போன்களில் பத்திரப்படுத் துவதுமான வேலைகளில் ஈடுபட்டிருந்தனர்.

அப்பாவி முஸ்லிம்கள் தங்களை சந்தேகத்திற்குள்ளாக்கும் போலீஸின் இத்த கைய தாக்குதல் ரீதியான நடவடிக்கைகளுக்கு இணக்கம் தெரிவித்தபடி நடந்து கொண்டனர் என்கிறது ஹைதராபாத்திலிருந்து வெளிவரும் சியாசத் உருது நாளேடு.

இதுபோன்ற செயல்கள் சட்ட மற்றும் மனித உரிமை மீறல் என்பது தெரிந்த நிலையிலும் ஒரு சமுதாயத்தை குறி வைத்து இத்தகைய காரியங்களில் பாதுகாப்பு போலீசார் ஈடுபடுகிறார்கள் என்றால் அது அதிகார வர்க்கங்கள் இடுகின்ற கட்டளை என்பதை புரிந்து கொள்ள முடிகிறது.

மேலதிகாரிகளின் வழிகாட்டுதல்படி பாதுகாப்பு போலீசார் இப்படி வரம்பு மீறி நடந்து கொள்ளும் நிலையில், இதற்கு எதிராக நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட் டால் மாட்டிக் கொள்வதும், பணி இடை நீக்கம் செய்யப்படுவதும் பாதுகாப்பு காவலர்கள்தான்.

இவர்களுக்கு உத்தரவிட்ட உயரதிகாரிகள் தங்கள் பெயர் கூட வெளிவராத வகையில் தப்பித்துக் கொள்கிறார்கள்.

Pin It