கீற்றில் தேட...
அறிவியல் ஆயிரம்
- விவரங்கள்
- வைகை அனிஷ்
- பிரிவு: இயற்கை & காட்டுயிர்கள்
பறவைகளின் கூடுகளிலே அழகியல் திறனோடு அமைக்கப்படுவது தூக்கணாங்குருவிக் கூடு ஒன்றுதான். நூற்றுக்கணக்காண வைக்கோல், நீளமான புல்கள், தென்னை நார்கள், ஈரக்களிமண், மாட்டுச்சாணம், மின்மினிப்பூச்சி இவைகளால் சுமார் 3 வாரங்களாக முழு மூச்சுடன் இந்த கூடுகளை தூக்கணாங்குருவிகள் நெய்கின்றன. இந்த சேமிப்பிற்காக ஆயிரம் முறைக்கு மேல் பறக்கிறது.
செல்போன் கதிர்வீச்சு, வாகனங்களின் இரைச்சல், அளவுக்கதிகமாக செல்போன் டவர்கள், வயல்களில் பயன்படுத்தப்படும் உரங்கள் போன்றவைகளால் நாளுக்கு நாள் தூக்கணாங்குருவி இனம் அழிந்து வருகிறது. ஏற்கனவே ஆயிரக்கணக்கான குருவி இனங்கள் அழிவை நோக்கி சென்று விட்டன. டோடோ என்ற குருவி இனம் அந்தமான் காடுகளில் அழிந்தது. இந்திய-இலங்கை ஒப்பந்தம் ஏற்பட்டபோது அந்த ஒப்பந்தத்திற்கு டோடோ என்று பெயர் வைத்தனர். அந்தளவிற்கு குருவி இனம் புகழ்பெற்றது.
தேனி, திண்டுக்கல், கரூர் மாவட்டங்களில் தூக்கணாங்குருவிகள் தென்னை மரங்கள், பனை மரங்கள், கிணறுகள் என கூடுகட்டி வாழந்து வந்தன. ஆனால் சாலை விரிவாக்கத்தின்போது ஏராளமான மரங்கள் வெட்டி சாய்க்கப்பட்டன. அப்போது தூக்கணாங்குருவிகளும் அழிந்தன. தற்பொழுது செல்போன் கதிர்வீச்சால் தூக்கணாங்குருவி இனத்தின் முட்டைகள் கரு உற்பத்தியாகாத நிலை ஏற்பட்டு அழிவை தேடிக்கொண்டிருக்கிறது. தன்னுடைய வாழ்நாள் உழைப்பையெல்லாம் ஒருங்கிணைத்து கட்டிய கூடுகள் கொடைக்கானல் சாலையில் விற்பனைக்கு வந்தது வேதனைக்குரியது மட்டுமல்ல, மனிதனால் ஒரு இனத்தை அழித்த வரலாற்றையும் நினைவுபடுத்துகிறது.
- வைகை அனிஷ்
- விவரங்கள்
- அ.மு.அம்சா
- பிரிவு: இயற்கை & காட்டுயிர்கள்
மே மாதம் இறுதியில் பௌர்ணமி தினத்து அன்று முதுமலை காட்டுப் பகுதியில் உள்ள சிறியூர் கிராமத்தில் இருந்து மாலை நேரத்தில் மசினகுடி நோக்கி காட்டுப்பாதையில், பொலிரோ ஜீப்பில் மெதுவாக வந்து கொண்டிருந்தோம். ஒவ்வொரு திருப்பத்திலும் கவனமாக இருபுறமும் கூர்ந்து கவனித்து கொண்டு, யானை நிற்கிறதா... என்று ஆவலோடு அனைவரும் அமைதியாக கவனித்து கொண்டும், கானகத்தை இரசித்து கொண்டும், இரதம் போல் சென்று கொண்டிருந்த வண்டி ஒரு திருப்பத்தில் திரும்பும் பொழுது, மயக்கும் மாலை வேளையில், இடப்புறம் புல் மேட்டில் அறிக்குருவி ஓன்று எங்கள் கண்களில் பட்டது. நாங்கள் பார்த்த அதே வேளையில் அறிக்குருவியும் தலையை நிமிர்த்தி எங்களை பார்த்தது. வண்டியை நிறுத்தினோம். சில வினாடிகளில் தலையைத் தாழ்த்தி புல்லில் மேயத் தொடங்கியது.
- விவரங்கள்
- பி.என்.எஸ்.பாண்டியன்
- பிரிவு: இயற்கை & காட்டுயிர்கள்
உலகத்தைச் சுற்றிவிட்டு தனது மாலுமிகளுடன் மீண்டும் அமெரிக்காவுக்குத் திரும்பிச் சென்றான் கொலம்பஸ். அதன்பிறகு தான் ‘சிபிலிஸ்’ என்ற கொடிய பாலியல் நோய் உலகம் முழுவதும் பரவியது. அமெரிக்கா எது நினைத்தாலும் அது உலகமெங்கும் பரவும்!. அந்த வகையில் தான் தற்போது இந்தியாவுக்குள் பரவி வருகிறது மரபணு மாற்றம் செய்யப்பட்ட பயிர் வகைகள். இதற்கு மத்திய அரசும், குறிப்பாக மத்திய வேளாண் அமைச்சர் சரத்பவாரும், பன்னாட்டு விதைக்கம்பெனிகளின் கட்டளைகளை நிறைவேற்ற ஒற்றைக்காலில் தவம் இருக்கின்றனர். இதற்கு நாடெங்கிலும் கடும் எதிர்ப்பு கிளம்பி வருகிறது.
அது என்ன மரபணு மாற்றம் செய்யப்பட்ட பயிர்வகைகள்? அதனால் என்ன ஆபத்து?
உணவுக்குத் தேவை விதை. விதைகளை கட்டுப்படுத்தினால் உணவு உற்பத்தியை கட்டுப்படுத்தி விட முடியும். பாரம்பரிய விதைகளில் ஏற்படுத்தப்பட்ட ரசாயன மாற்றத்தின் விளைவாக வீரிய ஒட்டு ரக விதைகள் உருவாயின. ஒரே இனத்தைச் சேர்ந்த 2 விதைகளை இணைத்து வீரிய ஒட்டு ரகங்கள் உருவாக்கப்பட்டன. பாரம்பரியமான விதைகள் மேம்படுத்தப்பட்டு அதே விதைகள் பயன்படுத்தப்பட்டு வந்தன. இந்த வீரிய ஒட்டு ரக விதைகளுக்கு போட்டி அதிகமாக இருந்தது. இந்த போட்டியை குறைக்க விதைகளை காப்புரிமை செய்யும் கம்பெனிகள் யோசனை செய்தன. இதன் பின்னணியில் உருவானது தான் மரபணு மாற்ற விதைகள். அதாவது பி.டி. பயிர் வகைகள். இந்த மரபணு மாற்றப்பட்ட விதைகள் மூலம் மரபணு மாற்றப்பட்ட பயிர்களை விளையும். மரபணு மாற்றப்பட்ட பயிர்களுக்கு அப்படி என்ன தான் சிறப்பு?
பூச்சிக் கொல்லி சுரக்கக்கூடிய மரபணு மாற்றப்பட்ட பயிர்கள். களைக்கொல்லியாக செயல்பட்டு பூச்சிகளை அழிக்கும். அதாவது இது பயிர்களை தாக்கும் வண்ணத்துப்பூச்சி குடும்பத்து பூச்சிகளை அழிக்கும். போசிலஸ் சுருண்சியன்சீஸ் என்ற பாக்டீரியா செலுத்தப்பட்டதால் தான் இந்த விதைகள் பூச்சிகளை அழிக்கும் திறன்கொண்டவையாக இருக்கின்றன. இந்த பாக்டீரியா விஷத்தன்மை கொண்டது. பருத்தி, வெண்டை, கத்தரி என பல்வேறு பயிரினங்கள் தற்போது இந்தியாவில் மரபணு மாற்றம் செய்யப்பட்டு வருகின்றன.
தற்போது இந்தியாவில் 98.5 சதவீத பி.டி.பருத்தி பயிரிடப்படுகிறது. தமிழகத்தில் நாட்டு பருத்தி விதைகள் எல்.ஆர்.இ., ஸ்ரீவில்லிபுத்து£ர் ரக விதைகள் கிலோ ஒன்றிற்கு ரூ.40 என்ற அளவில் கிடைக்கின்றன. ஆனால் இவற்றின் மூலம் ஏக்கர் ஒன்றிற்கு 10 குவிண்டால் பருத்தி மட்டுமே விளைச்சல் பெற முடியும். ஆனால் மான்டோசாவா போன்ற பன்னாட்டு விதை நிறுவனங்களின் பி.டி பருத்தி விதை ரகங்கள் ஜாடு, மல்லிகா, மைக்கோ, புல்லட், ஆங்குஷ், பிரம்மா போன்றவை 450 கிராம் ரூ.920க்கு விற்கப்படுகின்றன. ஒரு ஏக்கருக்கு 450 கிராம் விதை இருந்தாலே போதும். 20 குவிண்டால் அளவிற்கு விளைச்சல் கிடைக்கும். இதன் காரணமாக தான் பெரும்பாலான விவசாயிகள் பி.டி.பருத்தியை விதைக்கின்றனர்.
ஆனால், இந்த பி.டி ரக விதைகளை தொடர்ந்து பயன்படுத்தினால் விவசாயிகள் அடுத்த தலைமுறைக்கு விதைகளை பயன்படுத்த முடியாது. ஒவ்வொரு முறையும் விவசாயிகள் பன்னாட்டு நிறுவனங்களில் இருந்து தான் விதையை வாங்க வேண்டும். பாரம்பரிய விதைகளை எடுத்து வைத்து பயன்படுத்துவது போன்று பயன்படுத்த முடியாது. இதுபோன்ற பல்வேறு காரணங்களால் தான் பி.டி ரக பயிர் வகைகளுக்கு வேளாண் விஞ்ஞானிகளிடம் இருந்தும், இயற்கை விவசாயிகளிடம் இருந்தும் எதிர்ப்பு கிளம்பியது. உண்மை நிலவரத்தை ஆராய்ந்த பாராளுமன்ற உறுப்பினர்களின் ஆய்வுக்குழுவும் மரபணு மாற்றப்பயிர்களுக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து தமிழ்நாடு இயற்கை விவசாய கூட்டமைப்பின் மாநில ஒருங்கிணைப்பாளர் அரசலு£ர் இரா.செல்வம் நம்மிடம், "மரபணு மாற்றம் குறித்த புரிதல் நம்முடைய விஞ்ஞானிகளுக்கு குறைவு. 50 வருடத்திற்கு முன்பு தான் மரபணு பற்றிய விவரம் நமக்கு தெரியும். 1954ல் மரபணு கோட்பாடு உருவாக்கப்பட்டது. ஒரு மரபணு ஒரு புரதத்தை உருவாக்கும் என்பது தான் அந்த கோட்பாடு. மாறிவரும் -------இயற்கை நிலையில் அறிவியல் கோட்பாடுகளை தொழில்நுட்பங்கள் மாற்றத் தொடங்கின. பி.டி பருத்தி குறித்து மான்டாசோவா என்ற பன்னாட்டு நிறுவனம் ஆய்வு நடத்தி தந்த விளக்கத்தை தான் அனைவரும் ஏற்றுள்ளனர். இது தவறானது. மரபணு குறித்த விவாதம் 2002ம் ஆண்டு இந்தியாவில் தொடங்கியது. 2001ம் ஆண்டு ஆயிரக்கணக்கான ஏக்கரில் பயிரிடப்பட்ட பி.டி. பருத்தியை பிடுங்கி போட வேண்டும் என்று உச்சநீதி மன்றம் கூறியது. அதன்பின்னர் படிப்படியாக பி.டி.பயிர் வகைகள் நுழைந்து விட்டன. மரபணு மாற்றப்பட்ட பயிர்கள் நல்லதா? கெட்டதா? என்று முடிவு செய்து அறிக்கை கொடுப்பது சம்பந்தப்பட்ட பன்னாட்டு விதை நிறுவனம் தான். முதன்முதலாக பி.டி.கத்திரிகாய் என உள்ளே நுழைந்து இப்போது 54 வகையான பி.டி.பயிர்கள் இந்தியாவினுள் வந்துவிட்டன.
இந்த நிலையில் தான் அருணா ரோட்ரிகேஸ் என்பவர் உச்சநீதி மன்றத்தில் பி.டி பயிர்களுக்கு எதிராக வழக்கு போட்டார். அப்பேது வேளாண் அமைச்சராக இருந்த ஜெயராம் ரமேஷ், இதுபற்றி ஆய்வு செய்ய பாராளுமன்ற நிலைக்குழுவை உருவாக்கினார். மேற்குவங்கத்தைச் சேர்ந்த பசுதேவ் ஆச்சர்யா எம்.பி., தலைமையில் 28 எம்.பி.,க்கள் கொண்ட குழு ஆய்வு செய்தது. இதில் காங்கிரஸ் எம்.பி.க்களும் இடம் பெற்றிருந்தனர். பி.டி.பயிர் வகைகள் இந்தியாவுக்கு ஏற்றதா? இதனால் ஏற்படும் சாதகம் என்ன? பாதகம் என்ன--? என்பனவற்றை மக்களிடம் இருந்தும், வேளாண் விஞ்ஞானிகளிடம் இருந்தும் ஆய்வு செய்து மேற்கண்ட குழு ஒரு அறிக்கையை தாக்கல் செய்துள்ளது.
பாராளுமன்ற நிலைக்குழு நடத்திய ஆய்வின் படி பி.டி.பயிர் ரகங்கள் இந்தியாவுக்கு ஏற்றதல்ல. அது விதை சுதந்திரத்தை அழித்து விடும் என்று அறிக்கை கொடுத்தது. ஆனால், இந்த அறிக்கையை தற்போதைய வேளாண் அமைச்சர் சரத் பவார் ஏற்க மறுக்கிறார். மேலும், வேளாண் விஞ்ஞானிகள், பி.டி.பயிர் வகைகளுக்கு அனுமதி கொடுப்பதில் பல்வேறு குளறுபடிகள் உள்ளன என்றும் கூறினர். மேலும், கம்பெனிகள் கொடுக்கும் ஆராய்ச்சி முடிவுகளை சரியானது என்று ஏற்க முடியாது எனவும், பி.டி. பருத்திக்கு கொடுத்த அனுமதியை திரும்ப பெற வேண்டும் என்றும் மத்திய அரசுக்கு அறிக்கை கொடுத்தனர். ஆனால், இந்த அறிக்கையையும் மத்திய அரசு ஏற்கவில்லை. மாறாக பிரதம மந்திரியின் அறிவியல் ஆலோசனைக்குழு, உணவு உத்திரவாதத்திற்காக மரபணு மாற்றம் செய்யப்பட்ட பயிர்கள் அவசியமானவை என்று முடிவெடுத்துள்ளது.
இதனிடையே மரபணு மாற்றம் செய்யப்பட்ட பயிர்கள் ஏற்படுத்தும் விளைவுகள் குறித்து பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த சராலினி என்பவர் நீண்ட கால ஆய்வு ஒன்றை எலியின் வாயிலாக மேற்கொண்டார். 300 நாட்கள் நடந்த அந்த ஆய்வு பெரும் அதிர்ச்சி தகவல்களை தந்துள்ளன. மரபணு மாற்றம் செய்யப்பட்ட பயிர்வகைகளை சாப்பிடுவதால் மலட்டுத்தன்மை ஏற்படுகிறது என்றும், உள்ளுறுப்பில் புண்கள் ஏற்படுகின்றன என்றும் தொற்று நோய் பாதிப்பு ஏற்பட வாய்ப்புள்ளதாகவும் ஆய்வு முடிவுகள் கூறியுள்ளன.
இது இப்படி இருக்க, பி.டி.பருத்தி குறித்து வெளித் தேடல் ஆய்வு நடத்த மத்திய அரசு முடிவு செய்தது. தமிழ்நாடு உட்பட 13 மாநிலங்கள் இந்த ஆய்வுக்கு தடை விதித்தன. தங்கள் மாநிலங்களில் இந்த ஆய்வுகள் நடத்தப்படக்கூடாது என்று கூறின. ஆனால், உத்திரப்பிரதேச முதல்வர் அகிலேஷ் யாதவ் மட்டும் பி.டி.பருத்தி வெளிப்புற ஆய்வுக்கு அனுமதி அளித்துள்ளார். நம்முடைய உணவு, நம்முடைய விவசாயங்கள் எல்லாம் விலைபோகும் விஞ்ஞானிகளிடம் மாட்டிக் கொண்டுள்ளன. இது எல்லோருக்குமான பிரச்னை.
பி.டி.பருத்தியில் அதிகமாக விளைச்சலும், லாபமும் கிடைக்கிறது என்று கூறுவது தவறானது. நாட்டுரக பருத்திக்கு ரூ.25 ஆயிரம் லாபம் கிடைத்தால், பி.டி.பருத்திக்கு ரூ.50 ஆயிரம் லாபம் கிடைக்கிறது என்று கூறுகிறார்கள். இது முற்றிலும் தவறானது. பி.டி.பருத்தி பயிரிட நிறைய தண்ணீர் தேவைப்படும். மானாவாரி நிலங்களில் பயிரிட்டால் விளைச்சல் குறைவாக தான் வரும். இந்த பி.டி.பருத்தியை பயிரிட்டதால் தான் விதர்பாவில் பல்லாயிரக்கணக்கில் விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டனர். நாட்டு பருத்தி பயிரிட்டால் விதையை மறுமுறை பயன்படுத்தலாம். மண் கெட்டுப்போகாது. ஆந்திரா மற்றும் மகாராஷ்டிரா மாநிலங்களில் தான் பருத்தி விளைச்சல் அதிக அளவில் இருந்தது. ஆனால் தற்போது குஜராத்தில் முதல்வர் நரேந்திர மோடி ஏற்படுத்தித் தந்த நீர்பாசன வசதிகளினால் அதிக அளவில் பருத்தி பயிரிடப்படுகிறது. தண்ணீர் பஞ்சமாக உள்ள மகாராஷ்டிராவில் தற்போது பி.டி. பருத்தியின் விளைச்சல் குறைந்துள்ளது.
ஆந்திராவில் 35 லட்சம் எக்டேரில் தற்போது இயற்கை விவசாயம் நடக்கிறது. அங்கு எந்த பூச்சிக்கொல்லியும் இல்லை. விவசாயம் சிறப்பாகவே நடக்கிறது. பாரம்பரிய விதைகளை வைத்து நிறைய பயிர்களை விளைவிக்க முடியும். எந்த வகை மரபணு மாற்றமும் தேவையில்லை. இந்திய விவசாயத்தை பன்னாட்டு விதைக்கம்பெனிகளின் சொத்தாக மாற்றும் முயற்சியே மரபணு மாற்றம் செய்யப்பட்ட பயிர்கள். ஒருங்கிணைந்த பயிர் பாதுகாப்பு முறை மூலம் விவசாயம் செய்தால் செலவை குறைக்கலாம். தஞ்சாவூரில் விவசாயத்திற்கு தண்ணீர் இல்லை என்ற காரணத்தினால் 13க்கும் மேற்பட்ட விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டனர். ஆனால், அங்கு ஒரு சில இடங்களில் பாரம்பரிய விதைகளை பயிரிட்டு தண்ணீர் பஞ்சமாக உள்ள இந்த நேரத்திலும் நல்ல அறுவடையை செய்து வருகின்றனர்" என்றார்.
கத்தரிக்காயில் தொடங்கிய மரபணு மாற்றம், பருத்தி, வெண்டைக்காய் என ஊடுருவி தற்போது மக்காச்சோளத்திற்கும் பரவியுள்ளது. ஒரு நாட்டை அழிக்க வேண்டுமானால், அணுகுண்டு போடவேண்டாம். மரபணு மாற்றம் செய்யப்பட்ட பயிர்களை பயிரிட்டால் போதும் என்கிறார்கள் வேளாண் விஞ்ஞானிகள்.
இந்தியாவுக்கு தேவை அழிவா? ஆக்கமா?
- விவரங்கள்
- நக்கீரன்
- பிரிவு: இயற்கை & காட்டுயிர்கள்
சர்வதேச வெளவால் ஆண்டு 2011-2012 சிறப்புக் கட்டுரை
உலகம் சுற்றும் பொடி ஜந்துக்களே,
உங்களுடைய காலடிச் சின்னங்களை, எனது
சொற்களிலே விட்டுச் செல்லுங்கள்
- தாகூர்
ஒரு முன்னிரவில் என் இல்லத்தின் முன்பு அமர்ந்திருந்தேன். அப்போது தரையில் ஏதோ ஒரு பூச்சி ஊர்ந்து செல்வது போல் இருந்தது. அது வழக்கமாகப் பார்க்கும் பூச்சிகளைப் போல் இல்லாமல், வித்தியாசமான வடிவில் இருந்ததால், அருகே சென்று குனிந்து பார்த்தேன். எனக்கு ஆச்சரியமாகிவிட்டது. ஏனென்றால் அது ஒரு வெளவால் குட்டி.
ஒரு வெளவால் குட்டி இவ்வளவு சிறியதாக இருக்கும் என்று நான் இதுவரை நினைத்துப் பார்த்ததில்லை. சுமார் ஓர் அங்குல நீளமே இருந்தது அது. அநேகமாக வெகு அண்மையில்தான் அது பிறந்திருக்க வேண்டும். தரையில் தன் குட்டி இறக்கையை இரண்டு புறங்களிலும் சற்று பரப்பியவாறே ஊர்ந்து முன்னேறிக் கொண்டிருந்தது. அந்தக் குட்டி வெளவாலை கையில் எடுத்தால், அதன் சின்னஞ்சிறிய மென் உடலுக்கு ஏதேனும் சேதம் ஏற்பட்டுவிடுமோ என்று அஞ்சி, ஒரு சிறிய விளக்குமாற்று குச்சியை எடுத்து அதன் பின்னங்கால்களுக்கு அருகே வைத்தேன். நான் எதிர்பார்த்தது போல், அது தன் பின்னங்கால்களால் விளக்குமாற்றுக் குச்சியை கவ்விப் பிடித்துக் கொண்டது, அப்போது அந்தக் குச்சியை மெல்ல நான் மேலே தூக்கினேன். வெளவால்களுக்கே உரிய இயல்பூக்கத்தோடு அந்தக் குட்டி தலைகீழாக தொங்கிக் கொண்டிருந்தது.
இப்போது அதை என்ன செய்வது என்று எனக்குத் தெரியவில்லை. அப்படியே அதை விட்டுவிட்டால், ஏதேனும் ஓர் இரைகொல்லிக்கு இரையாக நேரிடலாம். வெளவால்கள் விளக்கை அணைத்த பிறகுதானே பறக்கத் தொடங்குகின்றன. எனவே, சற்று இருட்டாக இருந்த சுவரின் மேல் பகுதியில் அக்குச்சியோடு அதை வைத்துவிட்டேன். அந்தக் குட்டி அகஒலியை எழுப்பி தன் தாயை வரவழைத்து விடக்கூடும் என்பதே என் நம்பிக்கை. அக்குட்டியின் மேல் இந்த அளவுக்கு எனக்கு பரிவு ஏற்பட்டதற்குக் காரணம், வெளவால்களைக் குறித்து நான் தெரிந்து வைத்திருந்த ஒரு தகவல்தான். ஒவ்வொரு முறையும் வெளவால் ஒரே ஒரு குட்டியை மட்டுமே ஈனும் என்பதே அந்த முக்கியமான செய்தி.
இப்படி வெளவால்கள் ஒரே ஒரு குட்டியை ஈனுவதற்குரிய காரணத்தை அறிந்து கொள்ள, அதன் பரிணாம வளர்ச்சிப் பாதையில் பின்னோக்கி ஒரு பயணத்தை மேற்கொள்ள வேண்டும். முழுமையாக வளர்ச்சியடைந்த வெளவால்களின் புதை படிவங்கள் ஐந்து கோடி ஆண்டுகளுக்கு முந்தைய பாறை இடுக்குகளில் கண்டுபிடிக்கப்பட்டிருப்பதால், இதுவோர் மிகப் பழைமையான உயிரினம். பறவைகள் தோன்றி பல காலத்துக்குப் பிறகு பாலூட்டிகளுள் சில சிற்றினங்கள் காற்றில் சறுக்கிப் பறக்கும் (Gliding) ஆற்றலைப் பெற்றன. இவை கொலுகோ (Colugo) என்று அழைக்கப்பட்டன. ஆரம்ப கால பூச்சியுண்ணிகள் தங்கள் பரிணாம வளர்ச்சியின்போது, ஒரு குறிப்பிட்ட இடைநிலையைக் கடந்துதான் மேற்சொன்ன கொலுகோவாக மாறியிருக்கின்றன. மேற்சொன்ன கொலுகோவுக்கு உதாரணம், போர்னியோ காடுகளில் காணப்படும் பறக்கும் லீமர் (Flying Lemur) ஆகும்.
பார்ப்பதற்கு பறக்கும் அணில்களைப் போல காணப்படும் இவை, வெளவால்களை போலவே தலைகீழாக தொங்கும் தன்மையுடையவை. இந்த கொலுகோதான், உண்மையான பறக்கும் பாலூட்டிகளாக, அதாவது வெளவால்களாக மாறின என்பது உயிரியலாளர்கள் கருத்து.
மேலும் பறவைகளுக்கு ஒரு மாற்றாக இப்படி வெளவால்களை உருவாக்க வேண்டிய அவசியம் இயற்கைக்கு இருந்தது. பறவைகள் பகலில் பறந்து பூச்சிகளை உணவாக உட்கொள்கின்றன. இதனால் இரவு நேரப் பூச்சிகள் பெருகின. எனவே, இவற்றை கட்டுப்படுத்த வேண்டியே, இத்தகையதொரு பரிணாம மாற்றம் நிகழ்ந்தது. இருப்பினும் பறவைகளுக்கு இல்லாத ஒரு பிரச்சினையை வெளவால்கள் சந்திக்க நேர்ந்தது.
பறவைகள் முட்டையிட்டு குஞ்சு பொரிப்பவை. வெளவால்களின் மூதாதைகளோ பாலூட்டிகள். பாலூட்டிகள் வழிவழியாக நஞ்சுக் கொடியை பெற்றிருப்பவை. பரிணாமக் கடிகாரம் என்பது எப்போதும் பின்னோக்கி சுழல்வதில்லையே! எனவே, வெளவால்கள் பறக்கும் தன்மையை பெற்று விட்டன என்பதற்காகவே, முட்டையிடும் இயல்புக்கு திரும்பிச் செல்ல முடியாது. ஆகவே, ஒரு வெளவால் சூலுற்ற நிலையில் குட்டியின் எடையும் தொடர்ந்து அதிகரிப்பதால், அதன் எடை கூடிவிடும். இதனால் பறப்பது மிகுந்த சிரமமாகிவிடும். இதனால்தான் இயல்பிலேயே ஒரே ஒரு குட்டியை மட்டுமே வெளவால் ஈனுகிறது (மிக அரிதான சந்தர்ப்பங்களில் இரண்டு குட்டிகளை ஈனுவது உண்டு). இந்த வகையில்தான் அந்த வெளவால் குட்டி மிக முக்கியமானதாக எனக்குப் பட்டது.
ஆனால் பொதுவாக பார்த்தால், எல்லோருக்கும் வெளவால்களை குறித்து ஒரு வெறுப்பு மனநிலையே காணப்படுகிறது. அதுவும் குறிப்பாக, மேற்கு நாட்டினருக்கு அது ரத்தப் பிசாசாகவே காட்சியளிக்கிறது. இதற்கு வாம்பயர் (Vampire) என்ற ஒரு வகை வெளவாலே காரணம். இது 10 செ.மீ. அளவேயுள்ள ஒரு சிறிய வகை வெளவால். இந்த வகை வெளவாலின் எச்சிலில் ரத்தம் உறைவதை தடுக்கும் ஒரு வகை எதிர்ப்பு பொருள் உள்ளது. எனவே, இது தூங்கும் விலங்கின் தோலில் கடிக்கும்போது தன் எச்சிலையும் கலந்து விடுவதால், வெளிவரும் ரத்தம் இயல்பாக உறைவதற்கு முன்பு, ஒரு குறிப்பிட்ட நேரத்துக்கு தொடர்ந்து வெளி வந்த படியே இருக்கும். இப்படி ஒழுகும் ரத்தத்தை இந்த வெளவால் உறிஞ்சிக் குடிக்கிறது. இது ஏறக்குறைய ரத்தத்தை உறிஞ்சிக் குடிக்கும் அட்டையை போன்றதுதான். சமயங்களில் உறங்கும் மனிதனும் இந்த சிறிய வெளவாலின் கடிக்கு ஆளாகிவிடுவதால், இவை ரத்தக் காட்டேரியாக மாற்றப்பட்டு விட்டன. இதைத் தவிர வேறு எந்த வகை வெளவாலும் ரத்தத்தை உறிஞ்சுவதில்லை, பெரும்பாலும் பூச்சியுண்ணிகளே.
வெளவால்களில் ஏறத்தாழ ஈராயிரம் வகைகள் இருக்கின்றன. இவற்றில் இந்தியாவில் 73 வகைகள் இருக்கின்றன. இருந்தாலும் வெளவால்களை குறித்த முழுமையான ஆய்வு இன்னமும் நடைபெறவில்லை என்பதே உண்மை. ஆனால் எல்லா வகை வெளவால்களும் சூழலியலுக்கு தனக்குரிய பங்கை செலுத்திக் கொண்டே இருக்கின்றன. அண்டார்டிகாவைத் தவிர அனைத்து கண்டங்களிலும் காணப்படும் வெளவால்களில், அமெரிக்காவில் காணப்படும் ஒரு குறிப்பிட்ட வகை வெளவால்கள் மட்டும் ஆண்டுக்கு 20,000 டன் எடையுள்ள பூச்சிகளை உட்கொள்கின்றன என்கிற செய்தியே, வெளவால்கள் ஏன் பாதுகாக்கப்பட வேண்டும் என்கிற செய்தியை நமக்கு உணர்த்துகின்றது.
இந்த பூச்சியுண்ணி வகை வெளவால்களைப் பற்றி குறிப்பிடும்போது, கொமந்தோங் குகை என்ற பெயரை தவிர்க்க இயலாது. உலகிலேயே அதிக வெளவால்கள் வசிக்கும் இடம் இதுதான் என்று கூறப்படுகிறது. இந்த ஒரேயரு குகையில் மட்டும் சுமார் இருபது லட்சம் வெளவால்கள் வசிக்கின்றன. போர்னியோவில் உள்ள இந்த குகையில் மாலை நேரத்தில் ஒரு கரும்புகை நாடாவைப் போல், இந்த வெளவால்கள் வெளியேறி வானில் பரவும் பரவசக் காட்சி கட்டாயம் காண வேண்டிய ஓர் அற்புத காட்சி. இந்த வகை வெளவால்கள் ஒவ்வொன்றும், ஓர் இரவில் மட்டும் தன் உடல் எடைக்கு நிகரான அளவுக்கு பூச்சிகளை சாப்பிடுகிறதாம். அப்படியெனில் இத்தனை லட்சம் வெளவால்களும் ஓர் இரவில் மட்டும் எத்தனை டன் பூச்சிகளைச் சாப்பிடும் என்று கணக்கிட்டுப் பாருங்கள். இத்துடன் சூழலுக்கு நஞ்சூட்டும் பூச்சிக் கொல்லிகள் இல்லாமல், இவை ஆற்றும் நன்மைகளை நாம் ஒரு நிமிடம் நினைவுகூர வேண்டும்.
எல்லா வகை வெளவால்களும் பூச்சிகளை உண்பதில்லை. சில வகை வெளவால்கள் பூந்தேன், பூந்தாது ஆகியவற்றை உண்ணுகின்றன. இத்தகைய வெளவால்களுள் ஒன்றுதான் விடிகாலை வெளவால்கள் (Dawn bats). இந்த வகை வெளவால்களின் நாக்கு மிக நீளமாக அமைந்திருக்கும். இதனால் அது பூவுக்குள் தன் நாக்கால் துழாவி தேனை உண்ண முடிகிறது. விலை உயர்ந்த பழ வகைகளில் ஒன்றான டுரியன், இந்த வெளவால்கள் இல்லாவிட்டால் இனவிருத்தி செய்ய இயலாது. ஏனெனில் இதன் மலர்கள் நள்ளிரவில் மலர்ந்து விடியலில் உதிர்ந்துவிடும் தன்மை கொண்டவை. எனவே, அந்த குறிப்பிட்ட நேரத்துக்குள் மகரந்தச் சேர்க்கை நடக்க வேண்டியது அவசியம். இம்மலர் பூத்தவுடன் அதன் வாசனையை முகர்ந்து இவ்வகை வெளவால்கள் விரைந்து விடுகின்றன. பப்பாளி, வாழை போன்ற தாவரங்களிலும் மகரந்தச் சேர்க்கை நடைபெற வெளவால்கள் உதவுகின்றன.
வெளவால்களில் மிகப் பெரியது பழந்தின்னி வெளவால்கள். இறக்கையை விரித்தால் சுமார் ஒன்றரை மீட்டர் நீளம் வரை இருக்கும். இதை நாம் எல்லோருமே நன்கு அறிவோம். மற்ற வெளவால்களுக்கும் இதற்கும் உள்ள முக்கிய வேறுபாடு, இவை அகஒலி துணை கொண்டு பறப்பவை அல்ல என்பதுதான். சூழலியலில் பழந்தின்னி வெளவால்களின் முக்கியத்துவம் அளப்பரியது. ஏனெனில், விதைப் பரவலில் வெளவால்கள் அந்த அளவுக்கு தன் பங்கை ஆற்றுகின்றன. அமேசான் காடுகள் அழிக்கப்பட்ட இடங்களில் செயற்கையான வெளவால் வாழிடங்களை ஏற்படுத்தி நடத்திய ஓர் சோதனையில், வெளவால்கள் மட்டுமே அறுபது வகையான தாவரங்களை அழிந்து போன அந்தக் காட்டில் மீண்டும் முளைக்க வழி செய்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இவை வெளவால்களின் அவசியத்தை நமக்கு உணர்த்தும் பாடம்.
இருந்தாலும் வெளவால்கள் குறித்த விழிப்புணர்வு போதுமானதாக இல்லை என்பது நமது துரதிருஷ்டம். இதைப் போக்க ஐ.நாவின் சி.எம்.எஸ். (Convention of Migratory Species) அமைப்பு 2011&2012ஆம் ஆண்டுகளை சர்வதேச வெளவால்கள் ஆண்டுகளாக அறிவித்துள்ளது. இதை முன்னிட்டு வெளவால்களின் அவசியத்தை நாம் அறிந்துகொள்ள வேண்டும். அதை அழிவிலிருந்தும் காப்பாற்ற முயற்சிக்க வேண்டும். குறிப்பாக, சுண்ணாம்புப் பாறைக் குன்றுகள் அழிக்கப்படுவது விடிகாலை வெளவால்களின் வாழ்விடத்தையும், பெருமரங்கள் அழிக்கப்படுவது பழந்தின்னி வெளவால்களின் வாழ்விடத்தையும் கேள்விக்குறியாக்கி விடுகின்றன.
சரி, இந்தக் கட்டுரையின் தொடக்கத்தில் நான் கூறிய அந்த வெளவால் குட்டியை சுவற்றின் மேல் விட்ட மறுநாள் காலை விடிந்ததும், நானும் என் குடும்பத்தினரும் அதைத் தேடிப் பார்த்தோம். அந்த விளக்குமாறு குச்சி மாத்திரமே அங்கு இருந்தது. அந்தக் குட்டி வெளவால் எங்குமே தென்படவில்லை. தாய் வெளவால்தான் அதை கொண்டு சென்றிருக்கும் என்று நாங்கள் நம்பினோம், நம்பிக் கொண்டிருக்கிறோம். நீங்களும் அப்படித்தானே நம்புகிறீர்கள்?
(பூவுலகு ஜூலை 2012 இதழில் வெளியானது)
- மஞ்சள் தொண்டைசிட்டு
- கானமயிலைத் தொலைத்தோம்!
- பேரீச்ச மரங்கள் - சில தகவல்கள்
- மணங்களின் ராணி ஏலம்
- காதலுக்கு ஒளியைத் தூதுவிடும் காதலர்கள்!
- மானாம்பள்ளி பயணத்தில் - பௌர்ணமி நிலவில்... சிறுத்தையின் சத்தம்...
- சரணாலயங்கள் – பாதுகாப்பு
- சிட்டுக்குருவிகளை காக்க நாம் என்ன செய்யலாம்?
- வேடந்தாங்கலுக்கு வரும் பறவைகள்
- பறவை நோக்குதல்
- நாராய் நாராய்...
- துருவப் பகுதியில் உயிரினங்கள்
- விலங்குகளும் வண்ணங்களும்
- உலகின் மிகச் சிறிய முதுகெலும்பி... குட்டியூண்டு தவளை..!
- பாவோபாப் - ஓர் அதிசய மரம்
- மணம் வீசும் பொருள் தரும் கஸ்தூரிமான்
- நிற்பதுவே… நடப்பதுவே… பறப்பதுவே…
- காட்டுக்குள் நடை பயணம்
- நீலகிரியின் நிலை....
- காட்டைப் பிளக்கும் சாலைகள் நிகழ்த்தும் கொடூரக் கொலைகள்