சென்னையில், மார்ச் 20 ஆம் தேதி பெரியார் திராவிடர் கழக மாநில செயற்குழுக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம்:
பாபா ராம் தேவ் என்ற இந்து மதவெறி யாளர் ‘பாரத் ஸ்வாபிமான் யாத்ரா’ என்ற பெயரில் யோகாப் பயிற்சி என்ற போர்வை யில் நாடு முழுதும் சுற்றுப் பயணம்செய்து ‘பசுவதை’ செய்வோருக்கு தூக்குத் தண்டனை விதிக்க வேண்டும் என்றும், சிறப்பு நீதிமன்றத் தில் வழக்கை விசாரித்து 3 மாதத்துக்குள் தண்டனையை நிறைவேற்ற வேண்டும் என்றும் பேசி வருகிறார். ஏழை எளிய மக்களுக்கு குறைந்த விலையில் கிடைக்கும் புரதச் சத்து உணவு மாட்டுக்கறி. இதில் ‘பசுவை கொல்வது பாவம்’ என்ற பார்ப்பன சிந்தனையைப் புகுத்தி, மாட்டிறைச்சி உண்ணும் ஏழை எளிய மக்களை ‘தூய்மை யற்றவர்கள்’ என்று இழிவுபடுத்துவதோடு மாட்டுக்கறி உண்ணும் இஸ்லாமியர்களுக்கு எதிராக பகை உணர்வுகளைத் தூண்டி வரு கிறார். இந்த ராம் தேவ் பாபா நிகழ்ச்சிகளை தமிழக மக்கள் புறக்கணிக்க வேண்டும் என்றும், மாட்டுக்கறி உணவை மத அரசிய லாக்கும் உள்நோக்கத்தை அம்பலப்படுத்தி, பெரியார் திராவிடர் கழகம் இயக்கம் நடத்து வது என்றும் செயற்குழு தீர்மானித்தது
கீற்றில் தேட...
தொடர்புடைய படைப்புகள்
அண்மைப் படைப்புகள்
- வேளாண் விளைபொருள்கள் விலைக்குச் சட்ட ஏற்பு வழங்கு!
- கலைஞர் நூற்றாண்டு: மறுவாசிப்பில் கலைஞரின் ‘நளாயினி'
- சனாதனம் குறித்த உயர்நீதிமன்றத்தின் முறையற்ற தீர்ப்பு!
- இறகுகளுக்காக ஒரு நூலகம்
- எதிர்மறை அலைகள்
- நான்
- பாரதத்தை எதிர்த்து இந்தியா பக்கம் நிற்பது ஏன்?
- தோல்வி பயத்தில் தரம் தாழ்ந்து பேசும் நரேந்திர மோடி!
- ஆரிய மாடலும், திராவிட மாடலும்!
- தோழர் சங்கீதாவை தாக்கியவர்களுக்கு பிணை மறுப்பு!
- விவரங்கள்
- பெ.மு. செய்தியாளர்
- பிரிவு: பெரியார் முழக்கம் - மார்ச் 2011