முன்பொரு முறை
கடித்த போது
மன்னித்த எறும்பு தான்
இப்போது கடித்துக் கொண்டிருக்கிறது.
முன்பொரு முறை
மறைக்க நினைத்த ஒன்று தான்
நினைவாய் இப்போது
பரந்து விரிந்து கொண்டிருக்கிறது.
முன்பு வேண்டாமென்று
தொலைத்த ஒன்று தான்
என்னையே தேடித் தேடி
வருகிறது.
எது எப்படியோ
இருந்துவிட்டுப் போகட்டும்
சிறப்பாக இருந்த
கவிதையொன்றை எழுதி
வைக்க மறந்துவிட்டேன்
எத்தனை முறை
யோசித்தும் வர மறுக்கிறது....
நினைவில்!

- மு.முபாரக்

Pin It