மறந்து கொண்டே இருப்பது மக்களின் இயல்பு; நினைவுபடுத்தி தூண்டிக் கொண்டே இருப்பது எமது கடமை!

அண்மைப் படைப்புகள்

உடலாற்றுப்படை

25 ஜூன் 2025 கட்டுரைகள்

ஒரு மாணவர் இடுப்பு வலித்து தொடர்ந்து பத்தாவது நாளாக விடுமுறையானார். அவரை வகுப்பறை நண்பர்கள் 'டேய் உடும்பு' என்பார்கள். உடும்பை போல கச்சிதமாகவும் தசைகளை...

வாட் ஈஸ் திஸ்!? திஸ் ஒரு ஈ!

25 ஜூன் 2025 இயற்கை & காட்டுயிர்கள்

மஞ்சளும் தவிட்டு நிறமும் கலந்த ஒரு ஈயின் படமும், அதற்குக் கீழே “லுக் அட் திஸ்” (Look at This) என்று எழுதப்பட்டிருந்தது, அந்த போஸ்ட்டரில்! இது சிட்னி...

சோழ மண்டலக் கடற்கரையின் உணவுப் பண்பாட்டின் ஆவணம்

25 ஜூன் 2025 உங்கள் நூலகம் - ஜூன் 2025

முனைவர் அ. பகத்சிங, தோழி ர. நிரஞ்சனா ஆகிய இருவரால் கடலோர மக்களிடையே நேர்காணல் செய்யப்பட்டு, மீன் உணவுகள் குறித்த தரவுகளைச் சேகரித்து, தொகுத்து 2025 சனவரி...

மாய, யதார்த்தக் கரைகளூடே பயணிக்கும் வரலாற்று நதி

25 ஜூன் 2025 உங்கள் நூலகம் - ஜூன் 2025

ஒரு நல்ல நாவலுக்கு மிக அடிப்படையான தேவை கதை தான். நாவலென்பது வெறும் சம்பவத் தொகுப்பு மட்டுமே அல்ல. வெறும் நிகழ்ச்சிகளாலும், காட்சி வர்ணனை மற்றும்...

ஒன்றென்பது சுழியினும் மேலே

25 ஜூன் 2025 கவிதைகள்

ஒரு சமயத்தில்ஒன்றுக்கு மேற்பட்ட ஏணியில் ஏறிடப் போவதில்லை.ஒன்றுக்கு மேற்பட்ட தோணியில் பயணித்திடப் போவதில்லை.ஒன்றுக்கு மேற்பட்ட கேணியில் இறைத்திடப்...

பொருத்தம்

25 ஜூன் 2025 கவிதைகள்

  பொருத்தம் இருந்தும்  பொருந்த முடியாமல் பார்த்து பார்த்து அழுகிறது  வானம் கடலை.... - தர்ஷிகா

26 தமிழர் மீட்பு - நூல் வெளியீடு

25 ஜூன் 2025 நிகழ்வுகள்

கானாடுகாத்தான் வைசு.ஷ. பார்வதி நடராஜன் திருமணம்

25 ஜூன் 2025 பெரியார்

தலைவர் அவர்களே! மணமக்களே!! பெற்றோர்களே!!! தோழர்களே!!!! இன்று நடந்த இத் திருமணத்திற்கு நமது மாகாண அபிவிர்த்தி மந்திரியும், பிரபல கனவானுமான நண்பர் பி.டி.ராஜன்...

சிந்தனையாளன் மே 2025 இதழ் மின்னூல் வடிவில்...

25 ஜூன் 2025 சிந்தனையாளன் - மே 2025

    சிந்தனையாளன் மே 2025 இதழை மின்னூல் வடிவில் படிக்க இங்கு அழுத்தவும்.    

பார்ப்பனியத்தில் இருந்து முருகனை மீட்டெடுப்போம்! சங்கிகளை அம்பலப்படுத்துவோம்!!

23 ஜூன் 2025 கட்டுரைகள்

ஒவ்வொரு மனிதனும் துன்பப்படும்போது ‘இந்த உலகில் இது போன்ற நிலைமை யாருக்குமே வரக்கூடாது’ என்று கடவுளை வேண்டிக் கொள்வான். ஆனால் இந்தியாவைப் பொறுத்தவரை ஒவ்வொரு...

கிராபின் சிப் பதித்து மூளை புற்றுநோய்க்கு புதிய சிகிச்சை

23 ஜூன் 2025 புற்றுநோய்கள்

நரம்பியல் அறுவை சிகிச்சை முறையில் இந்த புதிய கிராபின் (Graphene) சிகிச்சை மருத்துவரீதியில் முதல் முயற்சி. கிராபின் சிப் பதித்து மூளைக் கட்டிகளை அகற்றும்...

கண்ணகி பகவதியான வரலாறு

23 ஜூன் 2025 உங்கள் நூலகம் - ஜூன் 2025

பண்டையத் தமிழர் பல வகைப்பட்ட வழிபாட்டு மரபுகள் உடையவர்களாக விளங்கியுள்ளனர். பண்டையத் தமிழகம் என்பது இன்றைய கேரளம், ஆந்திரம், கர்நாடாகம், தமிழ்நாடு முதலான...

திருநங்கைகளின் வாழ்வியலும் முன்னேற்றமும்

23 ஜூன் 2025 உங்கள் நூலகம் - ஜூன் 2025

திருநங்கைகள் புறக்கணிக்கப்பட்ட ஒதுக்கப்பட்ட மற்றும் பாதிக்கப்பட்ட சமூகமாக இந்தியாவில் மட்டும் அல்ல உலகம் முழுவதும் பார்க்கக்கூடிய நிலையில் உள்ளனர்....

குறவர் சமூகப் பண்பாட்டு அவலங்கள்

23 ஜூன் 2025 உங்கள் நூலகம் - ஜூன் 2025

தமிழ்ச் சமூகப் பண்பாட்டுத் தளங்களில் புரையோடிக் கிடக்கிற சடங்கு முறைகள் ஏராளம். அதில் சில சடங்கு என்ற போர்வையில் மக்களிடையே நிலவுகின்ற அபத்தங்களும்...

ஊறுவதும் மெய்

23 ஜூன் 2025 கவிதைகள்

கோரி எடுத்த அன்புகொடுத்ததை மறந்துததும்பி வழிகிறது. மறுகால் வழியாக மற்றவர்களும் பயனுற. பந்தலிட்டு பரிமாறாத காதல்பொங்காத நீரூற்றாகஊற்றுக்கண் காய்ந்து வறண்டு...

கீற்றில் தேட...

திருமணங்கள் சொர்க்கத்தில் நிச்சயிக்கப்படுவதாக கூறப்பட்டாலும், திருமணம் செய்து கொண்டவர்கள் வாழ்வதென்னவோ இந்த பூவுலகில்தான். திருமண வாழ்வும் சொர்க்கமாகவோ, நரகமாகவோ மாறுவதும் அவரவர் கைகளிலும், சுற்றுப்புறத்தில் உள்ளவர்களின் கைககளிலும்தான் இருக்கிறது. சமூகரீதியில் திருமணம் என்ற நிகழ்வு பல்வேறு பெயர்களில் புனிதமாக கருதப்பட்டாலும், உரிய வயதடைந்த இரு எதிர்பாலினர் இணைந்து வாழ்வதற்கான ஒரு ஒப்பந்தமாகவே திருமணம் விளங்குகிறது.

Marriage திருமணம் என்பது இருவேறு மனம் மற்றும் உடல்களில் சங்கமமாக மட்டும் அல்லாமல் இருவேறு சமூகங்களின் பிணைப்பாகவும் மாறுகிறது. மேலும் இந்த நிகழ்வு புதிய உயிர்களை, உறவுகளை, உடைமைகளை தோற்றுவித்தல் போன்ற வேறுபல நிகழ்வுகளுக்கும் காரணமாகிறது. எனவே திருமணம் என்ற நிகழ்வை சட்டரீதியாக புரிந்து கொள்வது அவசியம். திருமணத்தின் முக்கிய நிர்பந்தமாக மணம் செய்துகொள்ளும் இருவரின் வயது, மணவுறவுக்கான உடல்நிலை, மனநிலை, மணநிலை ஆகியவை முக்கிய இடம் வகிக்கின்றன.

திருமணம் செய்துகொள்ளும் நபர்கள் எந்த சமூகம் சார்ந்தவர்களாக இருப்பினும் அவர்களின் திருமணத்தை சட்டரீதியாக பதிவு செய்வது மிகுந்த முக்கியத்துவம் பெறுகிறது. குடியுரிமை, சொத்துரிமை, குழந்தைகளின் வாரிசுரிமை போன்ற பல்வேறு சட்டம் தொடர்பான விவகாரங்களுக்கும் திருமணத்தை பதிவு செய்தல் என்பது அவசியமாகிறது. இந்த திருமணப்பதிவு, மதப்பழக்க-வழக்கங்களுக்கேற்ப அமைக்கப்பட்டுள்ளது.

மதநம்பிக்கை இல்லாதவர்கள், மதங்களைப் பற்றிய அக்கறை இல்லாதவர்களுக்கான திருமணப்பதிவு “சிறப்பு திருமணச் சட்டம்” (Special Marriages Act) என்ற பிரிவில் விளக்கப்பட்டுள்ளது.

சாதிகளாலும், மதங்களாலும் பிரிக்கப்பட்டிருந்தாலும், மனங்களால் ஒன்றுபட்டவர்களின் திருமணங்களுக்கு அங்கீகாரம் வழங்குவதே இந்த சிறப்புத் திருமண சட்டத்தின் நோக்கம். இந்து, இஸ்லாமிய, கிறிஸ்தவ சட்டங்கள் மதம் கடந்த திருமணங்களை ஏற்பதில்லை. குறிப்பாக (பழைய) இந்துச் சட்டம் சாதிகள் கடந்த திருமணங்களை ஏற்பதில்லை. எனவே சாதிகளையும், மதத்தினையும் கடந்து திருமணம் செய்ய விரும்புபவர்கள் இந்த சட்டத்தின்கீழ்தான் திருமணம் செய்ய முடியும்.

திருமணம் செய்வதற்கான நிபந்தனைகள்-தகுதிகள்:

1. திருமணம் ஆகாத ஆண்/பெண்களும், கணவனை/மனைவியை இழந்தோரும், சட்டரீதியான மணவிலக்கு செய்தோரும் இந்த சட்டத்தின்கீழ் திருமணம் செய்ய தகுதி படைத்தவர்கள். திருமணம் செய்யவிருக்கும் ஆணுக்கோ, பெண்ணுக்கோ உயிருடன் வாழும் வாழ்க்கைத்துணைவர் இருக்கக்கூடாது.

2. திருமணம் செய்து கொள்ளவிருக்கும் இரண்டு பேரும் மண வாழ்வுக்குத் தேவையான ஆரோக்கியமான மனநிலையோடு இருக்க வேண்டும். உரிய மூளை வளர்ச்சி அடையாதோரும், மனநிலை குன்றியவர்களும் திருமணம் செய்ய முடியாது.

3. திருமணம் செய்து கொள்ளவிருக்கும் இருவரும் திருமண வாழ்வுக்குத் தேவையான உடல்நிலையை பெற்றிருக்க வேண்டும். மகப்பேறுக்கான தகுதியும் அவர்களுக்கு இருக்க வேண்டும். இதற்கான தகுதி பெறாதவர்கள் திருமணம் செய்ய இயலாது.

4. திருமணம் செய்யவிருக்கும் மணமகனுக்கு குறைந்தது 21 வயதும், மணமகளுக்கு 18 வயதும் நிறைந்திருக்க வேண்டும்.

5. திருமணம் செய்யவிருக்கும் மணமக்கள் இருவரும் தடுக்கப்பட்ட உறவுமுறையினராக இருக்கக்கூடாது. எனினும், அவ்வாறான உறவுமுறை திருமணம் அவர்களின் சமூகத்தால் அங்கீகரிக்கப்பட்டால் சட்டமும் அங்கீகரித்ததாகவே கொள்ளப்படும்.

திருமண அறிவிப்பு:

திருமணம் செய்வதற்கான உரிய தகுதிகளை கொண்ட மணமக்கள், அவர்கள் சிறப்புத் திருமணச் சட்டத்தின் கீழ் திருமணம் செய்து கொள்ளவிருப்பது குறித்து அவர்களில் எவரேனும் ஒருவர் வசிக்கும் மாவட்டத்தில் உள்ள திருமணப் பதிவு அதிகாரிக்கு எழுத்து மூலமாக தெரிவிக்க வேண்டும்.

அதனைப் பெற்றுக் கொண்ட திருமண அதிகாரி, திருமணம் செய்துகொள்ள இருப்பவர்களின் தகுதிகள் குறித்த ஆய்வை மேற்கொண்டு அதில் திருப்தி அடைந்தால், அவர்களின் திருமண அறிவிப்பை உரிய பதிவேட்டில் எழுதுவார். மேலும் அந்த அறிவிப்பின் நகல் ஒன்று அந்த அலுவலகத்தில் அனைவரின் பார்வையிலும் இடம் ஒன்றிலும் வைக்கப்படும்.

இந்த திருமணத்திற்கு சட்டரீதியான மறுப்பு கொண்டுள்ள எவரும், இந்த அறிவிப்பு வெளியான 30 நாட்களில் மறுப்பை தெரிவிக்கலாம். அந்த மறுப்பு ஏற்கப்படாத நிலையிலும், மறுப்புகள் ஏதும் பதிவு செய்யப்படாத நிலையிலும், அறிவிப்பு வெளியிடப்பட்டு 30 நாட்களுக்குப்பின் அந்த திருமணம் பதிவு செய்யப்படும். தவறான காரணங்களுக்காக எவரேனும் மறுப்பு தெரிவிக்கப்பட்டு அது விசாரணையில் தெரியவந்தால், அந்த மறுப்பை தெரிவித்தவருக்கு ஆயிரம் ரூபாய்க்கு மேற்படாத வகையில் அபராதம் விதித்து, அந்த தொகையை முழுமையாகவோ மணமக்களுக்கு திருமண அன்பளிப்பாக அளிக்க உத்தரவிடப்படும்.

திருமண நிகழ்வு:

திருமண அறிவிப்பு வெளியிடப்பட்டு 30 நாட்கள் நிறைவடைந்தபின் எந்த ஒரு நாளிலும் திருமணம் நடைபெறலாம். அன்றைய தினத்தில் மணமக்கள் விரும்பும் முறையில் திருமணத்தை நடத்திக்கொண்டு, திருமண பதிவு அலுவலகத்தில் அதற்காக வைக்கப்பட்டுள்ள படிவத்தில் கையெழுத்திட வேண்டும். இரு தரப்பிலும் சாட்சியங்கள் கையொப்பம் இட்டதும், திருமணப்பதிவாளர் அந்த திருமணத்தை அங்கீகரித்து கையொப்பம் இடுவார். இதையடுத்து அந்த திருமணம் சட்டரீதியாக அங்கீகரிக்கப்பட்டதாக கருதப்படும். இதற்கான சான்றிதழும் வழங்கப்படும்.

இந்த சட்டத்தின் கீழ் திருமணம் செய்யாமல் மதம் சார்ந்த வேறு முறைகளில் திருமணம் செய்துகொண்டோரும், இந்த சிறப்புத் திருமணச் சட்டத்தின்கீழ் தங்கள் திருமணத்தைப்பதிவு செய்யலாம்.

- சுந்தரராஜன் இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.

(நன்றி: மக்கள் சட்டம்)