கமலம் அடுக்கிய செவ்விதழால் - மலர்க்
காட்டினில் வண்டின் இசைவளத்தால்
கமழ்தரு தென்றல் சிலிர் சிலிர்ப்பால் - கருங்
கண்மலரால் முல்லை வெண்ணகைப்பால் - மயில்
அமையும் அன்னங்களின் மென்னடையால் - மயில்
ஆட்டத்தினால் தளிர் ஊட்டத்தினால்
சமையும் ஒருத்தி - அப் பூஞ்சோலை எனைத்
தன் வசம் ஆக்கிவிட்டாள் ஒருநாள்.
சோலை அணங்கொடு திண்ணையிலே - நான்
தோளினை ஊன்றி இருக்கையிலே
சேலை நிகர்த்த விழியுடையாள் - என்றன்
செந்தமிழ்ப் பத்தினி வந்துவிட்டாள்!
சோலை யெலாம் ஒளி வானமெலாம் - நல்ல
தோகையர் கூட்டமெலாம் அளிக்கும்
கோல இன்பத்தை யென் உள்ளத்திலே - வந்து
கொட்டி விட்டாள் எனைத் தொட்டிழுத்தாள்!
இறையாண்மையின் இலக்கணம் புலிகள்
எழுத்தாளர்:
தமிழினம் கட்டியெழுப்பிய மரபு வழி இறையாண்மை சூழும் தேசமாக ஈழம் அமையப் போராடிய விடுதலைப் புலிகள் அமைப்பாக உருக்கொண்ட நாள் மே 5, 1976-ம் நாள் இன்று. தமிழீழம் அமைய உறுதியுடன் களம் கொண்ட எண்ணற்ற வீரர்களின் அர்ப்பணிப்புகள் கருக்கொண்ட நாள். புலிகளால்…
மேலும்...