கனடாவில் உள்ள தமிழ்தோட்டம் என்னும் அமைப்பு, 2007ம் ஆண்டின் சிறந்த கவிதை நூல் விருதுக்கு, கவிஞர் வாசுதேவன் எழுதிய கவிதைகளின் தொகுப்பான தொலைவில் நூலினை தெரிவு செய்துள்ளது. இவ்விருது வழங்கும் நிகழ்வு எதிர்வரும் 18ம் நாள் (18-05-2008) ஞாயிற்றுக்கிழமை கனடாவில் ரொறொன்ரோ பல்கலைக்கழக மண்டபத்தில் நடைபெற உள்ளது.
இந்நூலுக்கான விருதுத் தொகையாக ஐநூறு கனடியன் டொலர்களும் வழங்கப்படுகின்றன. தமிழ்நாட்டில் உள்ள காலச்சுவடு பதிப்பகத்தால் வெளியிடப்பட்ட 44 கவிதைகள் கொண்ட இத்தொகுப்புக்கு கி.பி.அரவிந்தன் முன்னுரை வழங்கியுள்ளார்.
பாரிசில் மொழிபெயர்ப்பு பணியகத்தை (தமிழ் - பிரெஞ், பிரெஞ் - தமிழ்) நடாத்திவரும் கவிஞர் வாசுதேவன் ஈழத்தில் வேலணையை பிறப்பிடமாக கொண்டவர். பிரெஞ்சு மொழிப் புலமைகொண்ட இவர் புகலிடப்புத்தகம் என்னும் இணையத் தளத்தின் நெறியாளராகவும் இருந்தார். தொலைவில் அவரது முதலாவது நூல் என்பதும் குறிப்பிடத்தக்கது.
தொடர்புடைய படைப்புகள்
வாசுதேவனின் ‘தொலைவில்’ கவிதை நூலுக்கு விருது
- விவரங்கள்
- நளன்
- பிரிவு: நிகழ்வுகள்
More articles by நளன்
- நிலவேம்பு – மருத்துவப் பயன்கள் (30 நவ 2015)
- முக்கிய கண்டுபிடிப்புகளும், கண்டுபிடிப்பாளர்களும் (08 மே 2012)
- இந்திய உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதிகள், தலைமைத் தேர்தல் ஆணையர்கள் விவரம் (26 ஏப் 2012)
- புவி அமைப்பின் சில உச்சங்கள் (23 ஏப் 2012)
- மக்களவை சபாநாயகர்களும் அவர்களது பதவிக்காலமும் (17 ஏப் 2012)
✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு
கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.
வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.