கங்கு வரிசை 8ஆக. வந்த வீ.அரசு எழுதி, 2 ஆண்டுகளுக்கு முன் வந்த "சிறுபத்திரிகை அரசியல்" என்னும் நூல், பக்.10இல் இப்படி ஒரு பகுதி:
- எழுத்து (1959-1972) தொடங்கி பிரக்ஞை (1974-1978) வரையிலான சிறுபத்திரிகை மரபு.
- புதியதலைமுறை (1966) தொடங்கி நிகழ் (1983-1995) வரையிலான சிறுபத்திரிகை மரபு.
- படிகள் (1978) தொடங்கி வித்தியாசம் (1994) வரையிலான சிறுபத்திரிகை மரபு.
- நிறப்பிரிகை (1990-2000) உருவாக்கிய தமிழ்ச் சிறுபத்திரிகை மரபு.
இப்பாகுபாடு சமகாலத்தில் (1959-2000) நிகழ்ந்த சிறுபத்திரிகை மரபு சார்ந்த அச்சு ஊடகப் போக்குகளை அடையாளப்படுத்தும் நோக்கில் செய்யப்பட்டுள்ளது.
காலச்சுவடு இதழ் 100, பக். 72இல் (ஏப்ரல் 2008) பழ.அதியமான் எழுதிய "தூக்க நினைத்த கோவர்த்தன கிரி" என்னும் கட்டுரையில் வந்துள்ள ஒரு பகுதி:
"இந்தச் சிறுபத்திரிகை மரபை எழுத்து (1959-1972)இலிருந்து பிரக்ஞை (1974-1978) என்பதாக ஒரு மரபையும், புதிய தலைமுறை (1966)லிருந்து நிகழ் (1983-1995) என இன்னொரு தீவிர மார்க்சிய மரபும், படிகள் (1978) முதல் வித்தியாசம் (1994) வரையிலான நவீனத்துவச் சாயல் மரபும், நிறப்பிரிகை (1990-2000) உருவாக்கிய அரசியலை முதன்மைப்படுத்திய மரபும் என நாம் பிரித்துப் பார்க்க முடியும்."
அச்சு யுகத்தை விடுங்கள். இது இணையதள யுகம் அல்லவா? ஒருபோலச் சிந்திக்கும் பெரிய மனிதர்கள் ஆகத்துக்கும் பெருத்துப் போய்விட்டார்கள்! வேறென்ன சொல்ல?
கவிதாசரண் - ஆகஸ்டு 2008
பெரிய மனிதர்கள் ஒன்றுபோலச் சிந்திக்கிறார்களா?
- விவரங்கள்
- கவிதாசரண்
- பிரிவு: கவிதாசரண் - ஆகஸ்டு 2008
More articles by கவிதாசரண்
- தொல்காப்பியம்: ஐந்திரத்தின் அத்துமீறல்கள் (30 மே 2010)
- மாவீரனுக்கு அஞ்சலி (28 மே 2010)
- பகுத்தறிவை மூடநம்பிக்கையாக்கும் புதிய பார்ப்பனர்கள் (28 மே 2010)
- எத்தனைமுறை சாவீர்கள்? (28 மே 2010)
- திராவிட மொழிகளின் ஒப்பிலக்கண நூல் வெளியீட்டுக் கருத்தரங்கு விழா (28 மே 2010)
✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு
கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.
வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.