தினமும் முல்தானி மட்டி பூசுவது மட்டும் அல்ல, ஆவி பிடிப்பதும் தவறுதான். 15 நாட்களுக்கு ஒரு முறை ஆவி பிடிப்பதுதான் சரி. ஆவி பிடித்ததும் ஐஸ் வாட்டர் அல்லது ஐஸ் கட்டி அல்லது ஸ்கின் டானிக் கொண்டு முகத்தை கழுவ வேண்டும். முல்தானி மட்டியைப் பூசுவதும் ஃபேஷியல் போலத்தான். அடிக்கடி போட்டால் முகம் சுருங்கி வயதான தோற்றத்தைக் கொடுக்கும். எண்ணெய்ப் பசை சருமத்துக்கு முல்தானி மட்டியைத் தனியாக போடக் கூடாது. ஆரஞ்சு அல்லது சாத்துக்குடி ஜுஸ் கலந்து போட வேண்டும். முகம் சிவப்பழகு பெறுவதோடு சருமமும் பொலிவோடு இருக்கும். வாரம் ஒரு முறை செய்யலாம்.

Pin It