ரேடியோ கதிர் தொழில் நுட்பத்தை பயன்படுத்தி, எலும்புக் கட்டியை நீக்கும் முறையை டில்லி அகில இந்திய மருத்துவ விஞ்ஞான கழக (ஏ.ஐ.ஐ.எம்.எஸ்) மருத்துவர்கள் முதல் முறையாக வட இந்தியாவில் பயன்படுத்துகின்றனர்.
இந்த புதிய தொழில்நுட்பத்தினால் சாதாரணமாக செய்யப்படும் அறுவை சிகிச்சையைப் போல இல்லாமல் கட்டி இருக்கும் இடத்தில் மிகச் சிறிய துளை மூலம் கட்டி அகற்றப்படுகிறது. இதனால் அறுவை சிகிச்சையால் வழக்கமாக ஏற்படும் எந்த பிரச்சனையும் சிக்கல்களும் இதில் இருப்பதில்லை என்பதுடன் அறுவை சிகிச்சைக்கு ஆகும் செலவும் மிக குறைவாகவே இருக்கிறது.
சாதாரணமாகவே எலும்பில் இருக்கும் கட்டியை அகற்றுவதற்கு ஐந்தாயிரம் முதல் ஆறாயிரம் ரூபாய் வரை செலவாகும். இந்த ரேடியோ கதிர் தொழில் நுட்பட்த்திற்கு ஆயிரம் ருபாய்க்கு குறைவாகவே செலவாகிறது. இந்த புதிய முறை இதற்கு முன் நுரையீரல், கல்லீரலில் உள்ள மென் திசுக்களில் ஏற்படும் கட்டியை அகற்றுவதற்காக மட்டும் பயன்படுத்தப்பட்டு வந்தது.
அகில இந்திய மருத்துவ விஞ்ஞான கழகத்தைச் சேர்ந்த டாக்டர்கள் ஸ்வாஆலம், ஸ்ரீதர் மற்றும் டாக்டர்.சஞ்சய் துல்லார், சுமன் பாந்து ஆகியோர் இந்த புதிய ரேடியொ கதிர் தொழில்நுட்பத்தை பயன்படுத்துகின்றனர்.
நன்றி: மீனாட்சி மருத்துவ மலர்
கீற்றில் தேட...
தொடர்புடைய படைப்புகள்
அண்மைப் படைப்புகள்
- தனிச்சட்டமே தீர்வு!
- அரசின் அலட்சியமே கள்ளக்குறிச்சி மரணங்கள்
- “நான் எரிந்து விழுந்த ராக்கெட்”
- கொளத்தூர் மணி பிறந்தநாளையொட்டி உடற்கொடை வழங்கும் தோழர்கள்
- பள்ளிகளில் ஜாதி மோதல்களைத் தவிர்க்க வழி
- தோல்வி ஆனால் நன்மைக்கே
- பெரியார் முழக்கம் ஜூன் 27, 2024 இதழ் மின்னூல் வடிவில்...
- தமிழ்ப் பொதுவெளிக்கு தாராபுரம் தந்த அறிவுக்கொடை எஸ்.வி.ராஜதுரை
- மகேந்திரவர்மன் இன்னும் வாழ்ந்து கொண்டிருக்கிறான்
- தென்கிழக்காசியாவின் வரலாற்றாசிரியர் ஆர்.ஏ.எல்.எச்.குணவர்த்தனா (1938-2010)
- விவரங்கள்
- நளன்
- பிரிவு: எலும்பு நோய்கள்