இரவின் அமைதியில்
மகனிடமிருந்து
வந்து விழுந்தன
வரிசையாக்க் கேள்விகள்.
'பெரியவன் ஆயிட்டதால
சீனியர் கேஜி போய்ட்டனா'.
ஆமாமென்றேன்.
'ஜூனியர் கேஜிக்கு பின்னே
சீனியர் கேஜியா'.
ஆமாமென்றேன்.
'பெரியவனான பின்
சின்னவனாக முடியாதில்லை?'
‘அப்படியொன்றும்
சொல்வதற்கில்லை’
- செல்வராஜ் ஜெகதீசன்
More articles by செல்வராஜ் ஜெகதீசன்
- பத்திரமும் தைரியமும் (29 அக் 2010)
- பாதிப்பாதி (15 ஜூலை 2010)
- வாழ்வின் நிலைகளில் (21 ஜூன் 2010)
- பின் தொடரும் நிழல் (09 ஜூன் 2010)
- ஏற்புடையதாய்.. (15 ஏப் 2010)