பிரார்த்தனையில்
எந்தக் குழந்தையாவது
பேசினால்
அழுதால்
சிரித்தால்
அரட்டாதீர்கள்
கவனியுங்கள்
கடவுளின் மொழி
பிடிபட்டிருக்கலாம்

*
மழை வருவது போல
இருப்பது
எப்படி இருக்கிறது தெரியுமா
நீ முத்தமிடுவது போல
இருப்பாயே
அப்படி

*
முதலில் வளையலிட்டாய்
பிறகு கம்மல்
இப்போது கண்கள்
பந்தியிலா அமர்ந்திருக்கிறேன்
பருவத்தில் அமர்ந்திருக்கிறேன்

*
கடல் முன்னே காலமாய்
பல்லவன் சிலை முன்னே
காதலாய்
அருகருகே நின்றோம்
அது ஆதி நிகழ்வென்றோம்

- கவிஜி

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.