மீந்துபோன இட்லிகளை
துண்டுகளாக்கி
கொல்லைப் புறச்சுவரில்
பரிமாறுகிறேன்

நம்பிக்கையற்ற காக்கைகள்
என் தலைமறைவுக்குப் பின்
உண்ணத் தொடங்குகின்றன

நாள் தவறாமல்
உணவு வைத்ததில்
இப்போதெல்லாம்
என்னோடு பேசியபடி
உண்கின்றன

மகளின் திருமணத்திற்கு
பிறகும்
நம்பிக்கை இல்லாமல்
கண்காணித்துக் கொண்டிருக்கிறது
தாலிக்கயிறு!

- சி.ஆர். மஞ்சுளா

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.