நீளும் கொடும் வெப்பம்
நிறை பயணத்தில்
புளியமர நிழலாகி
குளிர்விக்கிறாய்,
உன் வருகை
ஒருநாள் நிகழுமென்றே
நிற்கும் என் வேர்களில்
காலம் தார்ச்சாலை விரித்து
தகிப்பில் எரிக்கிறது.
பழுத்து உதிரும் பழங்களை
வாகனங்கள் ஏற்றி
ஊர் நசுக்கிப் போனாலும்
சாகாமல் உயிர் சுமந்து
கிடக்கிறது காதலின் வெயில்
குடித்த புளியங்கொட்டைகள்

- சதீஷ் குமரன்

 

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.