பாலையில் விழுந்த 
மழைத்துளியாய் 
ஆவியாகிறது என் ஆவல்

இரையுடன் வந்து 
குஞ்சுகளில்லா கூட்டைக் காணும் பறவையாய் 
நோகிறது என் விழிகள்

பிலத்தினுள் நுழைந்த நீரென 
மறைகின்றன 
என் சொற்கள்

உயிர்வாயுக் கலமின்றி 
விண்ணில் மிதப்பவனாய் 
தவிக்கிறது உள்ளம்

அவளில்லாத 
அவளிடத்தை காணும்போது

- கா.சிவா

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.