எல்லோராலும் கைவிடப்பட்டதொரு
பண்டிகை தினத்தில்
போவது
கசாப்புக் கடைக்கெனத் தெரியாமல்
குட்டிகளை வழிநடத்தும்
தாய் ஆடாய்
உன் திசையில் மேயும்
என் பிரியங்கள்
பெய்துவிட்டுப் போன
பெருமழையில் துளிர்க்குமென்ற கனவோடு
பட்டமரத்தில்
கூடு கட்டும் சிறு பறவை கணக்காய்
சுள்ளிகளைத் தூக்கியலையும்
உன் ஞாபகங்களை
ஆற்றுப்படுத்த
தோன்றவில்லை எனக்கு.
- ந.சிவநேசன்
தொடர்புடைய படைப்புகள்
துளிர்
- விவரங்கள்
- ந.சிவநேசன்
- பிரிவு: கவிதைகள்
More articles by ந.சிவநேசன்
- உபசரிப்பின் ருசி (27 டிச 2021)
- மெல்லிய கவிதையின் இதழ் (08 அக் 2021)
- போன்சாய் எல்லைகள் (13 ஆக 2021)
- பிணை (24 ஜூன் 2021)
- தனிமையின் இசை (14 ஜூன் 2021)
✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு
கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.
வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.