நெடுஞ்சாலையோரம்
பூச்செடி விற்பவனின் காதுகள்
அன்பான சொற்களின் ஈரத்தை அரிதாகவே உறிஞ்சிப் பழகியவை
கடக்கும்
வாகனங்களின் இரைச்சல்
பேரம் பேசும் மீயொலி
அலைபேசி அழைப்பு
விளம்பர வாகனத்தின் குரலென
நாள்முழுவதற்குமான
சத்தங்களுக்கே ஒப்புக்கொடுக்கப்பட்டதில்
நாட்களை மீட்டும் பணி
துயரங்களின் மெல்லிசைக்கானது
விற்பனையில்லா
இரவுகளில் சத்தங்களை ஒதுக்கி
முழங்கையை நெற்றிக்கு மடித்து படுத்திருப்பவனின்
கைக்கடிகார நொடிமுள் ஓசை
அத்தனை இதமாய்
விற்காத செடிகள் தரும்
கவலையின் மீது
தனிமையிடும் ஒத்தடமானதில் தான்
பரவுகிறது
அவனுக்கான உறக்கநிம்மதி.
- ந.சிவநேசன்
கீற்றில் தேட...
தொடர்புடைய படைப்புகள்
அண்மைப் படைப்புகள்
- பாஜகவை ஏன் வீழ்த்த வேண்டும்?
- விண்வெளியில் தொழிற்சாலைகள்
- திருப்பூர் சங்கீதா மீது பாஜகவினர் தாக்குதல்!
- அடாவடித்தனத்தின் மறுபெயர் அண்ணாமலை!
- அண்ணல் அம்பேத்கர் அவர்களே!
- வேண்டாம் கருவேலமும், மோடியின் ஆட்சியும்!
- ஷண்முகமும் ஒட்டவாவும்
- பெரியார் முழக்கம் ஏப்ரல் 18, 2024 இதழ் மின்னூல் வடிவில்...
- கருஞ்சட்டைத் தமிழர் ஏப்ரல் 13, 2024 இதழ் மின்னூல் வடிவில்...
- மோடியின் உறுதியளிப்பும், செய்த மோசடிகளும்
- விவரங்கள்
- ந.சிவநேசன்
- பிரிவு: கவிதைகள்