மரங்களின் தலையில் குட்டி
வீட்டுக்குள் குடிவைத்தாயிற்று
ஒற்றைக் குழலில் பொழியும் மழையை
வினோதமாகப் பார்க்கின்றன
வேர்களில் ஒளிந்திருக்கும்
ஆதி ஜீன்கள்
சதுரமான வானத்தில் சுழலும்
மின்விசிறியால்
வேலையிழந்த இலைகளுக்கு
எப்போதாவது திறக்கும் சாளரத்தின்வழி
சிந்தும் வெயிலை
அவசரமாய் குடித்தும்
தாகம் தணியா ஆதங்கம்
நம்பி நீளும் கிளைகளுக்காகவாவது
இன்னும் சற்று நேரம்
எரிய விடுங்கள் அறைக்குள்ளிருக்கும்
சூரியனை.

- ந.சிவநேசன்

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.