ஒரு பூனையும்
சில பறவைகளும்
பல மலர்களும்
ஓர் ஆடியும்
இல்லத்துடன் சேர்ந்து
சோம்பியபடி காத்திருந்தோம்...

அவள் வந்தவுடன்...
பூனை மெதுவாக வால் உரசி சிலிர்க்கிறது
பறவைகள் மெல்லொலி எழுப்புகின்றன
மலர்கள் வண்ணம் கூடுகின்றன
ஆடி ஒளிர்கிறது
இல்லம் உயிர் கொள்கிறது

பிரவாகமாய்ப் பொங்கத் துடிக்கும்
நிறைகுளத்து நீரை சிறு மதகால்
கட்டுவதென
மனதை உள்ளொடுக்கி,
எதிர்பார்த்து ஏங்கவில்லையென்ற
பாவனை சூடுகிறது
என் ஆறறிவு ஆணவம்

- கா.சிவா

Pin It