நம் தீரா தாகத்தால்
தீர்ந்து போன நதிகள்,
தவறிய ஒற்றைய அழைப்பில்
மீண்டும் தவழ்ந்திடுமா?
இடுகாட்டு ஈசன் பெயரில்
சுடுகாடு ஆன காடு
சுரக்குமோ மழைப் பாலை.
மரம் என்னும் மடி அறுத்த பின்
ஜடா முடி ஈசனின்
ஜடையில் இனி கங்கை புரள்வதெங்கே ?
அவன் கூந்தல் அறுத்த குருவே
ஆண்டெல்லாம் அவன் பாதம் தொழுதாலும்
உன் பாவம் போகுமோ?
தவறிய அழைப்பெல்லாம்
தவறான உன் செயல் திருத்துமோ?

- அ.செய்யது முஹம்மது

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.