அருளாசி வேண்டுமென
அதிரடியாய் அடிவாரங்களில் நுழைகிறார்கள்.
அருள்தரிசனம் வேண்டி
ஆன்லைனில் பதிவு செய்து
காத்துக் கிடக்கிறார்கள்.
அருள்வாக்கு கிடைக்குமென்று
வரிசையில் ஏங்கித் தவிக்கிறார்கள்.
விஐபி தரிசனம் பொது தரிசனம்
கால்கடுக்க விடிய விடிய
வியர்வை வழிய தவம் கிடக்கிறார்கள்.
நெடுவெயில் குடித்து
கட்டணமில்லா நிழலாசி தரும்
புங்கன் மரத்தடியில்
நின்று கொண்டிருக்கிறேன்..

- சதீஷ் குமரன்

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.