rain 220இப்பெருமழையின் பொருட்டு
சில காதல் கவிதைகள் எழுதுவேன்.
சிலரை சிலவற்றை எள்ளி நகையாடி
கைகொட்டி மகிழ்வேன்.
மூழ்கும் இரு கைகளை
கவனமாய் படம்பிடிப்பேன்
நானிருக்கும் இரண்டாம் தளத்திலிருந்து.
அதே நாளில் இவ்வுலக கவனமீர்த்து
விருப்பக் குறியீடுகளின் மேல்
நிம்மதியாய் உறங்குவேன்.
பிறிதொரு நாளில் வீழ்ந்து கிடக்கும்
இந்த ஈசல்களைப் போல்
நிம்மதியாய் செத்தும் போவேன்.

- தர்மராஜ் பெரியசாமி

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.