childகடமைக்காய்
மனிதர்களை நிரப்பி
இழுத்துச் செல்லும்
அந்த பேருந்தின் நெரிசலில்
கையில் குழந்தையுடன்
நெருக்கப்பட்ட
என் சகோதரியின்
வயதையொத்த
அந்த பெண்ணிற்கு
இருக்கைக்காய்
அனிச்சையாய்
எழுந்துவிட எத்தனிக்கையில்
இடுப்பிலிருந்து
தாவிக்குதித்து
என்னைக்
கட்டிக்கொண்ட குழந்தை
எனக்கு அதன்
பால் மனத்தையும்
ஒரு கவிதையையும்
தந்துவிட்டு
சிரிக்கிறது.

- தர்மராஜ் பெரியசாமி

Pin It