கடமைக்காய்
மனிதர்களை நிரப்பி
இழுத்துச் செல்லும்
அந்த பேருந்தின் நெரிசலில்
கையில் குழந்தையுடன்
நெருக்கப்பட்ட
என் சகோதரியின்
வயதையொத்த
அந்த பெண்ணிற்கு
இருக்கைக்காய்
அனிச்சையாய்
எழுந்துவிட எத்தனிக்கையில்
இடுப்பிலிருந்து
தாவிக்குதித்து
என்னைக்
கட்டிக்கொண்ட குழந்தை
எனக்கு அதன்
பால் மனத்தையும்
ஒரு கவிதையையும்
தந்துவிட்டு
சிரிக்கிறது.
- தர்மராஜ் பெரியசாமி
RSS feed for comments to this post