பொன்னாத்தாளின் வீட்டெதிராய்
விடாது
பம் பம் அடித்துக்கொண்டிருந்த
ஐஸ் வண்டிக்காரனிடம்
புள்ளைங்கள கொஞ்சம்
நிம்மதியா விடு என்ற பொன்னாத்தாளின்
சுடு வார்த்தையில்
மெதுவாய் நகரத் தொடங்கிய
ஐஸ் வண்டிக்காரனுக்கும்
பிள்ளைகளிருப்பதை
உரத்துச் சொல்ல வேண்டும்
போலிருந்தது அவனுக்கு.

- எஸ்.எம்.ஜுனைத் ஹஸனீ

Pin It