உன் மேல்
அவன் மண்ணள்ளி வீசுகிறானா
நீ சேறள்ளிப் பூசு
அவன் சேறள்ளி வீசுகிறானா
நீ சாணியைக் கரைத்தூற்று
அவன் சாணியைத் தெளிக்கிறானா
நீ மலம் அள்ளி வீசு
அவன் மலம் அள்ளி வீசுகிறானா
நீ அதுக்கும்.... மேல
யோசி.
தமிழ் சினிமா
சாகிற காலத்துல
சங்கரா சங்கரான்னு
உன்னைத் தான் நம்பியிருக்கு
அதுக்கும்.... மேல
உனக்கொரு தகுதியிருக்கு.
அதுக்கும் மேல...
யோசி.
- சேயோன் யாழ்வேந்தன்
அன்புடன் சேயோன் யாழ்வேந்தன்
RSS feed for comments to this post