நிலத்தின் மெளனங்கள் பற்றி
இரவும் பகலும்
நிறைய பதிப்புகளை வெளியிட்டு விட்டது
அதன் பிரசவம் குறித்து
நிறைய மேடைகளில் பேசப்பட்டுவிட்டன
அதன் பொறுமை கருணை குறித்து
குழந்தைகளுக்கு
சொல்லிக் கொண்டு தானிருக்கின்றோம்
குழந்தையாக இருக்கும் போது
தொட்டிலாகும் நிலம்
வளரும் போது நண்பனாகிறது
காதலிக்கும் போது
பூக்கள் தந்து வாழ்த்துகிறது
பசிக்கும் போது கனிகளையும்
தானியங்களையும் தருகிறது
முதுமையில் அனுபவங்களை கேட்கிறது
இறந்த பின் அணைத்துக் கொள்கிறது
எல்லாவற்றிலும்
மெளனத்தின் அங்கமாக இருக்கும் நிலம்
நிலத்தின்
வலிமையான வார்த்தைகள் எது தெரியுமா
பாறைகள்
எளிய வார்த்தைகள்
தண்ணீர்
கருணை வார்த்தைகள்
தாவரங்கள்
அடக்கிவைக்கப்பட்ட வார்த்தைகள்
எரிமலை
கோப வார்த்தைகள்
சூறாவளி
காதல் வார்த்தைகள்
மழை
நிலத்தைப் பற்றி பாடமல்
மாயைகளை பற்றி பாடுகின்றோம்
நிலம் பாதைகளை திறந்து வைத்திருக்கிறது
அதன் பாதையில் நடந்தால்
யாரும் வழி தவறிப் போக முடியாது.
கீற்றில் தேட...
அண்மைப் படைப்புகள்
- ஆரியப் பார்ப்பனியப் பாசிசக் கருத்துகள் பொசுங்கட்டும்!
- குளிரூட்டும் ஆடைகள்
- பெண்களின் சமஉரிமைக்குத் தொடரும் போராட்டம்
- சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழ் வழக்காடு மொழியாக வேண்டும்
- காலம் காட்டும் மேஜிக்
- மாறுவேடம்
- ஜஸ்டிஸ் பத்திரிகையின் நிர்வாகம்
- பா.ஜ.கவின் வீழ்ச்சியை வழிமொழியும் வட இந்தியா!
- பாலாற்று நீரில் தமிழ்நாட்டின் உரிமையைத் தடுப்போம்!
- பத்தாண்டுகளுக்குப் பின் பேரா. சாய்பாபா விடுதலை
- விவரங்கள்
- கோசின்ரா
- பிரிவு: கவிதைகள்