சஞ்சலங்களின்றி பஞ்சணையில்
சயனித்திருக்கும் யுவராணிக்கு வீசப்படும்
வெண்சாமரத்தின் மீது விழுந்து 
தெறிக்கிறது
வெண்சாமரக் கன்னியின்
வியர்வைத் துளி........                     
காலம் காலமாய் தகிப்பேறிய
அந்த அடிமைச் சேடிப் பெண்ணின்
வெக்கை நீரில்
இனி தீக்கிரையாகலாம்
சுகந்தரும் சுகந்தமிகு வசந்த மண்டபம்!

- ஸ்ரீதர்பாரதி

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.