sevalai madu

1.

ஆளரவமற்ற மந்தையில்
அசரீரியாய் ஒலிக்கிறது
முன்பொரு நாள்
மூதாதையர் சுழற்றிய
தாயக்கட்டைகளின் குரல்.

2.

ஆணியில் தொங்கும் சலங்கை
அசைந்து அசைந்து
அவ்வப்போது ஞாபகமூட்டும்
செத்துப்போன செவலை மாட்டை.

3.

வணங்காமுடிகளையும்
கவிழ்த்துவிடுகிறது
சவரக்காரனின் சிறுகத்தி.

- ஸ்ரீதர்பாரதி

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.