kalliஆவாரங்காட்டில் ஆடுகளை மேயவிட்டு
கரட்டுப் பாறைமீது
காத்திருக்கும் இடைச்சியின்
செந்தாமரை முகமெண்ணி
ஆதுரம் பொங்க
அவளுக்குப் பரிசளிக்க
அன்றலர்ந்த செவ்வந்திகளை ஏந்தி
செந்தாழங்காட்டில் செம்மறிகளோடு
நடக்கிறான் ஈச்சங்காட்டு
இடையனொருவன்

காதல் பொங்கிப் பிரவகிக்கும்
அவன் கண்களில்
வழிநெடுக எதிர்ப்படும்
கள்ளிப்பூக்களுக்கு
எதேச்சையாய் வாய்த்துவிடுகிறது
காட்டுரோசாக்களின் சாயல்.

- ஸ்ரீதர்பாரதி

Pin It