வன்புணர்ச்சியாலோ
பகடிச் சித்திரவதையாலோ
உயர்சாதிப் பெண்கள் கொல்லப்பட்டால்
கொதித்தெழும் பாரதமாதாஜி
பறச்சியோ
பள்ளச்சியோ
சக்கிலிச்சியோ
பழங்குடிப் பெண்ணோ
நடுவீதியில் நிர்வாணமாக்கப்பட்டு
யோனியில் உதைக்கப்பட்டாலோ
கூட்டுவன்புணர்ச்சியில் கொல்லப்பட்டாலோ
சலனமற்று வேடிக்கை பார்த்தபடி கிடக்கிறாள்.
அவளுக்குத் தெரிந்திருக்கிறது
பெண்தானென்றாலும்
யார்வீட்டுப் பெண்ணென்று.
பாரதமாதாஜிக்குத் தெரியும்
- விவரங்கள்
- யாழினி முனுசாமி
- பிரிவு: கவிதைகள்
More articles by யாழினி முனுசாமி
- கவிதாசரண் படைப்புகள் ஆய்வரங்கம் (06 ஜூலை 2013)
- முரண்களரி படைப்பகம் நடத்தும் “அம்பேத்கரைப் பாடிய பாரதிதாசன்” நூல் வெளியீட்டு விழா (16 ஏப் 2013)
- சாதி வன்மம் (04 ஏப் 2013)
- நாலா திசையிலும் இராஜபட்சேக்கள் (02 ஏப் 2013)
- முரண்களரி படைப்பகம் - இரண்டு நூல்கள் வெளியீட்டு விழா (30 மார் 2013)
✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு
கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.
வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.