வன்புணர்ச்சியாலோ
பகடிச் சித்திரவதையாலோ
உயர்சாதிப் பெண்கள் கொல்லப்பட்டால்
கொதித்தெழும் பாரதமாதாஜி
பறச்சியோ
பள்ளச்சியோ
சக்கிலிச்சியோ
பழங்குடிப் பெண்ணோ
நடுவீதியில் நிர்வாணமாக்கப்பட்டு
யோனியில் உதைக்கப்பட்டாலோ
கூட்டுவன்புணர்ச்சியில் கொல்லப்பட்டாலோ
சலனமற்று வேடிக்கை பார்த்தபடி கிடக்கிறாள்.
அவளுக்குத் தெரிந்திருக்கிறது
பெண்தானென்றாலும்
யார்வீட்டுப் பெண்ணென்று.

Pin It