வன்புணர்ச்சியாலோ
பகடிச் சித்திரவதையாலோ
உயர்சாதிப் பெண்கள் கொல்லப்பட்டால்
கொதித்தெழும் பாரதமாதாஜி
பறச்சியோ
பள்ளச்சியோ
சக்கிலிச்சியோ
பழங்குடிப் பெண்ணோ
நடுவீதியில் நிர்வாணமாக்கப்பட்டு
யோனியில் உதைக்கப்பட்டாலோ
கூட்டுவன்புணர்ச்சியில் கொல்லப்பட்டாலோ
சலனமற்று வேடிக்கை பார்த்தபடி கிடக்கிறாள்.
அவளுக்குத் தெரிந்திருக்கிறது
பெண்தானென்றாலும்
யார்வீட்டுப் பெண்ணென்று.

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.