இந்தித் திணிப்பை எதிர்க்கும் தமிழக அரசியல் தலைவர்கள் ஆங்கிலத் திணிப்பை ஆதரிக்கிறார்கள்!
இந்திய அரசுத் துறைகளில் பணியாற்றுவோர் சமூக வலைத்தளங்களில் ஆங்கிலத்தில் மட்டும் எழுதுவதை தடை செய்து, கட்டாயம் இந்தியில் எழுத வேண்டும், விரும்பினால் இந்தியுடன் ஆங்கிலத்திலும் எழுதிக் கொள்ளலாம் என்று நடுவண் உள்துறை கடந்த 27.05.2014 அன்று ஆணையிட்டிருந்தது.
அந்த இந்தித் திணிப்புக்கு எதிராக தமிழ்நாட்டில் கடும் கண்டனங்கள் எழுந்ததும், தலைமை அமைச்சர் அலுவலகம் ஒரு விளக்க அறிக்கை கொடுத்துள்ளது. அதில், இந்தி பேசாத மாநிலங்களில் பணிபுரிவோர் ஆங்கிலத்தில் எழுதிக் கொள்ளலாம் என்றும், இந்தி பேசும் மாநிலங்களில் பணிபுரிவோர் கட்டாயம் இந்தியில் எழுத வேண்டும் என்றும் கட்டளையிட்டுருப்பதாகவும், எனவே இந்தி பேசாத மாநிலங்கள் இந்நடவடிக்கையை இந்தித் திணிப்பாகக் கருத வேண்டாம் என்றும் கூறப்பட்டுள்ளது.
இந்த விளக்கம் இந்திய அரசின் இந்தித் திணிப்பு நடவடிக்கையை மூடிமறைக்கும் தந்திர விளக்கமாகும்.
இந்திய ஒன்றிய அரசு அலுவலகங்களில் கடைபிடிக்க வேண்டிய அலுவல் மொழி பற்றிய 1968ஆம் ஆண்டின் திருத்தச் சட்டம், இந்தி அல்லது ஆங்கிலத்தை அலுவல் மொழியாகப் பயன்படுத்தலாம் என்றும், தொடர்ந்து இந்தியுடன் ஆங்கிலமும் இணை ஆட்சிமொழியாக இருக்கும் என்றும் சொல்கிறது. இந்தி பேசும் மாநிலங்களில் உள்ள ஒன்றிய அலுவலகங்களில் இந்தி மட்டுமே கட்டாய அலுவல் மொழியாக இருக்கும் என்று அது கூறவில்லை. அச்சட்டத் திருத்தம் இந்தி பேசும் மாநிலங்களுக்கும் இந்தி பேசாத மாநிலங்களுக்கும் ஒன்றிய அரசின் அலுவல் மொழி இந்தியிலும் இருக்கலாம், ஆங்கிலத்திலும் இருக்கலாம் என்றுதான் கூறுகிறது.
இந்தியைத் தீவிரமாக திணிப்பதற்கான முனைப்பில் காங்கிரசு அரசும் செயல்பட்டது. இப்பொழுது பா.ச.க. அரசும் அதே திசையில் செயல்படுகிறது.
1968ஆம் ஆண்டின் திருத்தச் சட்டத்திற்கு மதிப்பளித்து 27.05.2014 அன்று வெளியிட்ட மேற்படி கட்டளைச் சுற்றறிக்கையை இந்திய அரசு திரும்பப் பெற வேண்டுமென்று தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி தலைமை அமைச்சரை வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறது.
மேற்கண்ட இந்தித் திணிப்பு முயற்சியை எதிர்த்து கண்டனக் குரல்கள் அரசியல் கட்சிகளிடமிருந்து தமிழ்நாட்டில் எழுந்தது பாராட்டத்தக்கது. ஆனால், பள்ளிக் கல்வியிலிருந்து தமிழ்வழிப் பிரிவை புறந்தள்ளும் வகையில் ஆங்கிலவழிப் பிரிவுகளை திணித்துக் கொண்டிருக்கும் தமிழக முதலமைச்சர் அவர்கள் தமிழ் மொழியைக் காப்பதற்காக இந்தித் திணிப்பை எதிர்ப்பதாகவும் இந்திய அரசு அலுவல் மொழிகளில் ஒன்றாக தமிழை ஏற்க வேண்டும் என்று வலியுறுத்துவதாகவும் தலைமை அமைச்சருக்கு கடிதம் எழுதியிருப்பது நகைமுரணாக உள்ளது.
உண்மையில் தமிழ் மொழியின் மீது தமிழக முதல்வருக்கு அக்கறை இருந்தால், சட்டப்படி தமிழக அலுவல் மொழியாக உள்ள தமிழை குறைந்தது பன்னிரெண்டாம் வகுப்பு வரையிலாவது கட்டாய மொழிப் பாடமாகவும், கட்டாயப் பயிற்றுமொழியாகவும் சட்டம் இயற்ற வேண்டும்.
தமிழக முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதி அவர்கள் இந்தித் திணிப்பைக் கண்டித்து அறிக்கை வெளியிட்டுள்ளார். ஆனால், தமிழக அரசு தமிழ்வழிக் கல்வியை புறக்கணிக்கும் வகையில் ஆங்கிலவழிப் பிரிவுகளைப் பள்ளிக் கல்வியில் திணிப்பதைக் கண்டித்து, அத்திட்டத்தைத் திரும்பப் பெற வலியுறுத்தி சுட்டு விரலைக் கூட அவர் அசைக்கவில்லை; அமைதி காக்கிறார். இவரைப் போல், இப்பொழுது இந்தித் திணிப்பை எதிர்க்கும் இன்னும் சில தலைவர்களும் தமிழக பள்ளிக் கல்வியில் ஆங்கிலவழிப் பிரிவுகள் திணிக்கப்படுவதை எதிர்த்துப் போராடவில்லை. இவர்களுடைய இந்தித் திணிப்பு எதிர்ப்பு, எந்த வகையில் மொழிக் கொள்கையில் தமிழ் மொழியை முதன்மைப்படுத்தும் நிலையில் உள்ளது என்பது வினாக்குறியாக உள்ளது.
எனவே, தமிழ் உணர்வாளர்கள் – தமிழ் மக்கள் வெற்று ஆரவாரமாகவும் தமிழ் மக்களைக் கவரும் ஓர் உத்தியாகவும் மட்டுமே இந்தித் திணிப்பை எதிர்க்கும் அரசியல் தலைவர்களின் போலித்தனத்தையும் இந்த நேரத்தில் ஒப்பிட்டுப் பார்த்து சரியான மொழிக் கொள்கையை வளர்த்தெடுக்க வேண்டும் என்று தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி அன்புரிமையுடன் கேட்டுக் கொள்கிறது.
தமிழ்நாட்டில் தொடக்கிக் கல்வி முதல் ஆராய்ச்சிக் கல்வி வரை தமிழே கட்டாய மொழிப் பாடமாகவும், பயிற்று மொழியாகவும் இருக்க வேண்டும் என்பதும், தமிழ்நாட்டின் இந்திய அரசு அலுவலகங்கள் உள்ளிட்ட அனைத்து அலுவலகங்களிலும் உயர்நீதிமன்றம் உள்ளிட்ட அனைத்து நீதிமன்றங்களிலும் தமிழே அலுவல் மொழியாக இருக்க வேண்டும் என்பதும் மட்டுமே சரியான மொழிக் கொள்கை என்பதை தமிழ் மக்கள் ஏற்க வேண்டும் என்றும் கேட்டுக் கொள்கிறேன்.
- பெ.மணியரசன், தலைவர், தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி
( minority syndrome ) என்பது. இந்த மைனாரிட்டி சிண்ட்ரம் மலையாளிகளுக்கும ் பிராமணர்களுக்கு ம் யூதர்களுக்கும் உண்டு. அதனால் தான் அவர்களிடத்தில் ஒற்றுமையும் தங்கள் அடையாளத்தை காப்பாற்றிக்கொண ்டால் தான் பலனடைய முடியும் என்கிற உணர்வும் ஏற்படுகிறது. மேலும் இந்த மைனாரிட்டி சிண்ட்ரமால் ஏற்படும் பாதுகாப்பற்ற உணர்வு இவர்களை சராசரிக்கும் மேற்பட்ட புத்திசாலித்தனம ும் தந்திரமும் சில நேரங்களில் அதிக உழைப்பும் கொண்டவர்களாக ஆக்குகிறது. மேலும் யூதர்களும் பிராமணர்களும் மலையாளிகளும் தங்கள் தாய் மொழி அல்லாத ஆங்கிலத்தில் அல்லது மற்ற மொழிகளில் தான் பெரும்பாலும் கல்வி பெறுகிறார்கள். பிராமணர்களை எடுத்துக்கொள்வோ ம். அவர்களுக்கு சமஸ்கிருத மொழி மீது அளவு கடந்த வெறி. ஆனால் அவர்கள் பள்ளிக்கல்வி முதல் கல்லூரி கல்வி வரை அனைத்து பாடங்களையும் பெரும்பாலும் ஆங்கில வழியில் தான் கற்கிறார்கள். சமஸ்கிருதத்தை பள்ளியில் ஒரு பாடமாகத்தான் கற்கிறார்கள். சிலர் அது கூட இல்லாமல் வீட்டில் தான் சமஸ்கிருதத்தை கற்கிறார்கள். அதனால் அவர்களின் அடையாளத்தை பேணிக்கொள்ளும் உணர்வும் கலாச்சார வெறியும் ஆதிக்க சிந்தனையும் குறைந்து போய் விட்டதா என்ன? பின் எதற்காக தமிழ் வழிக்கல்வி தான் தமிழர்களுக்கு பலனளிக்கும் என்னும் பம்மாத்து?
பல நாடுகளில் பரவியிருக்கும் யூதர்களும் அந்தந்த நாடுகளின் மொழியில் தான் கல்வி கற்கிறார்கள். இருந்தும் அவர்களின் இன உணர்வும் அடையாள வெறியும் குறையவில்லையே!.
திராவிட இயக்கத்தினரும் தமிழ் அறிஞர்கள் என்று சொல்லிக்கொள்பவர ்களும் பெரும்பாலும் அரைகுறை அறிவு கொண்டவர்கள். தமிழ்நாட்டில் இருக்கும் தமிழர்களில் மிகப்பெரும்பாண் மையினர் வெளியுலகை பற்றி அறியாமல் தாங்களே உலகம் என்னும் மாயையில் மூழ்கி தங்களுக்கிடையே சாதி கலவரம் நடத்திக்கொண்டிர ுப்பதற்கு இந்த குறை அறிவு கொண்டவர்களும் சதிகாரர்களும் தான் காரணம். தமிழர்கள் கடாரம் வென்றார்கள், கங்கையை கொண்டார்கள் என்று மேடை தோறும் பேசுகிறார்கள். ஆனால் இந்த இரண்டாயிரம் ஆண்டுகளில் தமிழர்கள் எப்படியெல்லாம் அடிபட்டார்கள், யாரால் எதற்கு அடிபட்டார்கள், எவற்றையெல்லாம் இழந்தார்கள், இழந்துகொண்டிருக ்கிறார்கள் என்கிற வரலாற்றை இவர்கள் பேசுவதில்லை. இப்போது தமிழர்கள் இந்தியா என்னும் வறுமை சூழ்ந்த மூன்றாம் உலக நாட்டில் அதுவும் விளிம்பில் (periphery) இருக்கும் ஒரு மாநிலத்தில் மட்டும் பெரும்பாண்மையின ராக இருக்கிறார்கள். அவர்களுக்கு என ஒரு மாநில அரசு தான் உண்டு. அந்த மாநில அரசுக்கும் மிகக்குறைந்த அதிகாரங்களே உண்டு. அவ்வளவு தான். இது தான் யதார்த்த நிலை. சுற்றியுள்ள மாநிலங்களாலும் மத்தியில் உள்ள அரசாலும் தமிழர்கள் வஞ்சிக்கப்படுகி றார்கள். ஒடுக்கபடுகிறார் கள். பக்கத்தில் இருக்கும் நாட்டில் இனப்படுகொலைக்கு ஆட்படுத்தப்படுக ிறார்கள். இந்த உண்மைகளையெல்லாம ் யார் பேசுவது?
தமிழகத்தில் இருக்கும் சமச்சீர் கல்வியை, தமிழ் மீடியத்தில், அதுவும் அரசுப்பள்ளியில் படித்தால் பிச்சை தான் எடுக்க வேண்டி வரும். அதுவும் தமிழ்நாட்டுக்கு ள்ளேயே மடிப்பிச்சை எடுக்க வேண்டி வரும். மத்திய அரசாங்கத்தின் கீழ் வரும் சி.பி.எஸ்.சி பாடத்திட்டம் ஒப்பீட்டளவில் உயர்வானதும் தரமானதும் கூட. அதனால் அதை ஆங்கில மீடியத்தில் கற்பித்தாலும் இந்தி மீடியத்தில் கற்பித்தாலும் கற்கும் மாணவர்கள் பலனடைகிறார்கள். உயர்கிறார்கள். இந்தி மொழி வழிக்கல்விக்கும ் கற்பித்தலுக்கும ் மவுசும் மரியாதையும் ஏற்படுகிறது. மத்திய அரசின் கீழ் வரும் நவோதய வித்யாலயா பள்ளிகள், கேந்த்ரிய வித்யாலயா பள்ளிகள், சைனிக் பள்ளிகள் ஆகியவற்றில் பணி புரியும் ஆசிரியர்களும் ஒப்பீட்டளவில் தரமானவர்கள். ஆசிரியர்களை தேர்ந்தெடுப்பதி ல் தரக்கட்டுப்பாடு கடுமையாக பின்பற்றப்படுகி றது. பெற்றோர்கள் மத்திய அரசின் பாடத்திட்டத்தைய ும் பள்ளிகளையும் நாடுவதற்கு இது தான் காரணம். தமிழ் மீடியம் கொண்ட அரசுப்பள்ளிகள் ஒழிந்து வருவதற்கும் காரணம் இதே தான்.
RSS feed for comments to this post