மொழிபெயர்ப்புக்கு ஒரு குறிப்பு எழுதியதற்காக கோர்ட்டுக்கு இழுக்கப்பட்டிருக்கிறார் கவிஞர் மீனா கந்தசாமி. பொன்னர் சங்கர் சாமிகளை தலித் சாமிகள் என்று குறித்தது பிழை - கொங்கு வெள்ளாள கவுண்டர்களின் சாமியை தலித் சாமி என்று சொல்லி இச் சாதிகளுக்கிடையில் சண்டை உருவாக மீனா காரணமாகிறார் என்பது கவுண்டன்புத்தூர் லோகநாதனின் குற்றச்சாட்டு.
தலித்துக்களிடம் இருந்து ‘சாமியைப்’ பறிப்பது காலம் காலமாக நடந்து வருவதுதான். ஒவ்வொரு சாமியும் என்ன சாதி என்ற புரளியைக் கிளப்பி விட்டிருக்கிறது இந்த வழக்கு. ஒரு சாமியை தலித் சாமி என்று சொல்வதால் சண்டை வரும் என்று மிரட்டுபவர்களின் அரசியல் கேவலமானது. தலித்துகளுக்கு அடிவிழும் என்பதை சட்ட ரீதியாக சொல்ல முற்படுகிறார்கள்.
தலித்துகளுக்கு எதிராக நடக்கும் எத்தனையோ கொடுமைகளுக்கு எதிராக ஒரு உள்நாட்டு யுத்தமே நடந்து கொண்டிருக்க வேண்டிய நிலையில் - அடி விழும் அதற்கு அவர்களே பொறுப்பு என்ற பாணியில் கோர்ட்டுக்கு போவது தெனாவட்டிலும் ஒரு தெனாவட்டு. தலித்துகள் படும் அவலங்கள் பிரச்சினையில்லையோ?
மீனா மொழிபெயர்த்த புத்தகம் வந்து இன்று 7 வருசத்துக்கும் மேலாகிறது. இன்று வரைக்கும் ஒரு சச்சரவும் இல்லை. விடுதலை சிறுத்தை கட்சிக்கெதிராக ஒரு சாதிச் சச்சரவை உண்டு பண்ணி ஒரு ‘படிப்பினை’ காட்டவேண்டும் என்ற சாதி வெறியுடன் போடப்பட்டுள்ள வழக்கு இது. உண்மையில் சாதிச் சண்டையை தூண்டுவது, வழக்கு போட்ட லோகநாதனும் -அவர் ஏதோ நியாயமான வழக்கு போட்டிருக்கிறார் என்பதுபோல் பிரச்சாரம் செய்யும் சில ஊடகங்களுமே.
மீனா கந்தசாமிக்கு கடவுள் இல்லை. அவரது கவிதைகள் சாதிய ரீதியாக வர்க்கரீதியாக ஒடுக்கப்பட்டவர்களின் மொழியை கைப்பற்றி கலையாக்கும் உத்வேகம் கொண்டவை. அவரது அரசியற் சரிவு ஒடுக்கப்படுவோரை கவனப்படுத்துவதாக இருக்கிறது. இந்த கடவுளைக் கைப்பற்றும் பினாத்தலுக்கு அடிபணியப்போவதில்லை அவர். ‘சிறையில் களி தின்னத் தயார்’ என்று, இந்தமாதிரி மிரட்டல்களுக்கு தான் மசியப்போவதில்லை என்பதை அழுத்திச் சொல்கிறார் அவர்.
பொன்னர் சங்கர் கதையே ஒரு கற்பனைக்கதை என்று சொல்லப்படுகிறது – அதற்குள் சாமிக்கு சாதியைத் திணிக்கும் முயற்சி. போதாக்குறைக்கு இந்தியப் பண்பாடு பற்றி மீனாவுக்கு வகுப்பெடுக்க பலர் இணையதளமெங்கும் வரிசையில் வருகிறார்கள்.
மீனா ஆங்கிலத்தில் எழுதுபவர். சர்வதேச தளத்தில் அறியப்பட்டு வந்துகொண்டிருக்கிறவர். அவரை இப்படி ஒரு சொத்தை வழக்காட இழுத்து இந்திய நீதித்துறையின் லட்சணம் உலகளவில் நாறும் நல்ல நிலைதான் ஏற்பட்டிருக்கிறது. மீனாவுக்கு எதிராக – உலகெங்கும் ஒடுக்கப்பட்டவர்களுக்கு குரல் கொடுக்க தயங்காது இயங்கும் ஒருவருக்கு எதிராக சும்மா ஒரு பம்மாத்து வழக்கு போட்டுவிட்டு – உலகெங்கும் இருக்கும் புத்திஜீவிகள் மற்றும் மனித உரிமை அமைப்புகள் சும்மா அதைப் பார்த்துக்கொண்டிருக்கும் என்பதுபோன்ற கற்பனையை இந்த வழக்கைப் போட்டவர்களும் எடுத்த நீதித்துறையும் வளர்க்காதிருக்க நாம் அந்த பொன்னர் சங்கரைப் பிரார்த்திப்போம்.
-சேனன் (இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.)
தலித் இயக்கங்கள் பொன்னர் சங்கரை கொண்டாடுகின்றனவா.
தன் தரப்பு சான்றுகளை முன் வைக்க வேண்டியதுதானே.
வழக்குப் போட்டவர் வீம்பிற்காக போட்டார் என்றால் அதை வைத்து இவர் இல்லாததை எழுதி அனுதாபம் தேடிக்கொள்கிறார ்.
ஆக இரு தரப்பிலும் நியாயம் இல்லை.
இறுதியாக சேனன் அவர்களுக்கு ஒரு எச்சரிக்கை, ஒவ்வொரு எழுத்தாளனின் பேனாவிற்கும் ஒரு வகையான கூர்மை உண்டு அதை நீங்கள் சரியாக பயன்படுத்தாமல் போனால் அடுத்த நிமிடமே அப்பேனா உங்களை பதம்பார்த்துவிட ும் என்பதை மறந்துவிடாதீர்க ள். உங்களைபோன்ற எழுத்தாளர்களால் உண்மையை எழுதும் எழுத்தாளர்களுக் கு மதிப்பில்லாமல் போகிறது. நீங்கள் இப்படி ஒரு கட்டுரையை எழுதியதால் இந்த கீற்றுவிர்க்குத ான் அசிங்கம்.
'புத்தகம் வந்து இன்று 7 வருசத்துக்கும் மேலாகிறது. இன்று வரைக்கும் ஒரு சச்சரவும் இல்லை.'- என்கிறார். நூறு ஆண்டுகள் கழித்தும் ஒரு புத்தகம் வாசிக்கப்பட வாய்ப்பு உள்ளது. நீங்கள் சப்பைக் கட்டு கட்டுவது போல மீனா என்ன வரலாற்று ஆய்வாளரா? தலித் தெய்வங்கள் என்பதற்கு எத்தகைய சான்றுகளை முன் வைக்கிறார்? பொன்னர் - சங்கள் வரலாறு படித்திருக்கிறா ரா? அதில் உண்மை எது புனைவு எது என்று பிரித்தரியும் ஆற்றல் அவரிடம் உண்டா? குலதெய்வங்கள் எப்படி தோன்றின என்ற வரலாறு அறிவாரா? சாமிகளை வணங்க அனைவருக்கும் உரிமை உண்டு என்பது வேறு, சாமிகள் தோன்றிய வரலாறு என்பது வேறு. இதை முதலில் வக்காலத்து வாங்குபவர்கள் உணரவேண்டும். தலித்தியத்தின் பெயரின் எதுவேண்டுமானாலு ம் செய்யலாம் என்ற எண்ணம் கூடாது. அது எல்லா இடங்களிலும் செல்லுபடியாகாது . அதில் உண்மை இருக்கவேண்டும், நேர்மை இருக்கவேண்டும். அடாவடி இருக்க கூடாது. அது வெறுப்பிற்கு உள்ளாகும். ஆனாலும் காலகாலமாக இதுதான் நடக்கிறது. கவிதை எழுதுவது வேறு, வரலாற்றை ஆய்வது வேறு. மீனா அவர்கள் தன்னை பிரபலப்படுத்திக ்கொள்ள மேற்கொண்ட சித்து வேலையாக இது இருக்கலாம். அல்லது முற்றிலும் அறியாமையாக இருக்கலாம். தேவையால்லாமல் அவரை பலிகடா ஆக்காதீர்கள்.
முதலாவது மீனா கந்தசாமி பற்றி அறியவேண்டும். இப் பெண்மணி இன்று பிரபலமானதற்கான காரணம். தலித்கள் பற்றிப் பேசுகிறார் என்பது மட்டுமல்ல. அவர் தனது 25 வயதிலேயே சர்வதேச அளவில் அறியப்பட்ட கவிஞர், ஆங்கில எழுத்தாளர், மொழிபெயர்ப்பாள ர், பெண்ணியவாதி. இவை அனைத்தும்தான் காரணம். அண்மையில் இவர் கவிதைகள் 2 பல்கலைக்கழக பாட நெறிக்குள் சேர்க்கப்பட்டதா ய் அறிகிறேன். இப்படியிருக்க 'தன் தந்தையின் அறிவாற்றலையும் தாய்யின் கல்வியாற்றலையும ் பயன்ப்படுத்திக் கொண்டு" என்று தனிநபர் தாக்குதல்களை மேற்கொள்ளுவது நாகரீகமற்ற, பக்குவப்படாத நிலைத்தாக்குதல் !
மீனா கந்தசாமி தலித்தியர்களின் பெயர் சொல்லி சங்கம் வைத்து வெளிநாடுகளிடம் பணம் கறக்கிறாரா? இல்லையே! இருந்தால் எங்கு எப்படி என்று சொல்லுங்கள்.
எவ்வகைப்போராட்டத்தையும் களத்திலும் நடத்தலாம் அடுத்தவர் மனத்திலும் நடத்தலாம். ஆகவே நான் எப்படி இருக்கப்போகிறே ன் என்பதை ஒரு போராளி, தானேதான் தீர்மானிக்கிறான ். மற்றவர்கள் அல்ல. எங்கள் பெயர் சொல்லிப் பிரபலமாக நினைக்கிறாயா? கிராமத்துக்கு வா! பாடுபடு என்பது ஒருவகை இயலாமையின் வெளிப்பாடு!
இங்கே குற்றம் சுமத்தப்படுவதுப ோல அவர் தலித் இல்லையென்று வைத்துக்கொள்வே ாம். 'எங்களின் நிபந்தனையோடுதா ன் தலித்துகள் பற்றிப் பேசவேண்டும் என்று எப்படிச்சொல்வத ு" அவர் தங்களால் பணம் கொடுத்து வேலைக்கமர்த்தப் பட்டவரா? சரி, தங்கள் தலித்திய வளர்ச்சிக்குத் தடையாக இருக்கிறார் என்றால் உங்கள் கோபத்தில் நியாயம் இருக்கிறது என்று கொள்ளலாம். அதைவிடுத்து இப்படித் தூற்றுவதில் பயன் இல்லையே! உங்களுக்குத் திருப்திதான் எஞ்சும்.
ஆங்கிலத்தில் எழுதும், சர்வதேச அளவில் அறியப்பட்ட ஒருவரின் பெறுமதி தெரியாமல் அவரைத் தாக்கிக்கொண்டு இருக்கிறீர்கள்.
ஒருவரைப் நமக்கேற்றாற்போ ல் பயன்படுத்த அறிவு தேவை. தாக்குவதற்குத்த ேவையில்லை. எண்ணிப்பார்க்க கவலையே மிஞ்சுகிறது!!!
youtube.com/.../3OQY3bFeUYo
(a) MBC
(b) OBC
(c) Dalit
(d) None of these
RSS feed for comments to this post