மானிட வாழ்வில் தவிர்க்க முடியாத ஒரு பருவம் முதுமை. எல்லோரும் அதை கடந்தே தீரவேண்டும். கதைகளிலும் காவியங்களிலும் வரும் நாயகர்கள் போல் மரணமும் முதுமையும் வராமலே இருக்க நாம் யாரிடமும் வரம் வாங்கிக் கொள்ள வழியில்லை. முதுமையைத் தள்ளிப் போடலாம்; ஆனால் தவிர்க்க முடியாது.
முதுமை என்பது நோய்களின் மேய்ச்சல்காடு என்றோ சுடை என்றோ சாபம் என்றோ கருதி அஞ்சத் தேவையில்லை. எல்லோரும் முதுமை யைச் சந்தித்தே தீர வேண்டும். முதுமை என்பது அனுபவங்களின் விளைநிலம். முதுமையை இயல்பான மனநிலையோடு ஏற்றுக்கொள்ள வேண்டும். முதுமையைத் திட்டமிட்டு வாழக் கற்றுக் கொண்டால் உடல்நல, மன நலக் கோளாறு களின்றி, பிற ருக்குத் தொந்தர வின்றி மகிழ்ச்சி யோடு இறுதி நிமிடம் வரை வாழமுடியும்.
உடம்பின் இயக்கம் கெட் டால் முதுமை விரைவில் வந்துவிடும் என கலிபோர்னியா மருத்துவ நிபுணர் ஹார்டின் ஜோன்ஸ் தெரிவிக்கிறார். நடுத்தர வயதில் ஆற்றலுடன் இயங்கியவர்களால் அறுபதுகளிலும், எழுபது களிலும் அதே வேகத்துடன் இயங்க முடியும். ஓடிக் கொண்டேயிருக்கும் நீரில் அசுத்தம் படியாது என்பது போல, இரும்பை உபயோகித்துக் கொண்டே இருந்தால் துருபிடிக்க வாய்ப்பில்லை என்பதுபோல் உழைத்துக் கோண்டே இருந்தால், இயங்கிக் கொண்டே இருந்தால் முதுமையால் துயர்கள் இல்லை.
அதை பயன்படுத்து அல்லது அதை இழந்துவிடு (USE IT OR LOSE IT) என்று ஆங்கிலே யர்கள் சொல்வதுண்டு. முதுமைக்கும் இது பொருந்தும். தொடர்ந்து உழைப்பு இருந்தால் தசை திசுக்களை, எலும்புகளை இழப்பது மிகவும் தாமதம் ஆகும். உழைப்பில்லாதவர்கள் உடற்பயிற்சி செய்து உடல்திறன் குன்றாமல் பராமரிக்கலாம்.
முதுமையிலும் தோன்றும் பலவியாதிகள் முதுமையின் காரணமாக வந்தவையல்ல. அதே போல, உள்பலம் (STAMINA), தாங்கும் திறன் போன் றவை வயதாகி விட்டால் குறைந்துவிடுவதில்லை. இவை, இளமையிலும், நடுத்தர வயதிலும் ஏற்பட்ட தவறான பழக்கங்களின் விளைவுகள். ஒழுங்கற்ற உணவுபழக்கம், உடற்பயிற்சியோ, உழைப்போ இல்லாமலிருப்பது. நாள் முழுக்க சோம்பலாகக் கழிப்பது, நீண்டநேரம் டி.வி பார்த்துக் கொண்டே இருப்பது, புகைபழக்கம், மதுபழக்கம் என்று முடங்கிக் கிடந்தவர்களுக்கு முதுமை சுமையாக மாறும். மூட்டுக் கோளாறுகளா லும், ஜீரண, சுவாச, இருதயக் கோளாறுகளா லும், உடல்பரு மனாலும் கடுமை யாகப் பாதிக்கப் படுவார்கள். மகிழ்ச்சியை இழப்பார்கள். உடல் திறனும், பாலுறவுத் திற னும், உற்சாகமும் ஓடிமறையும். மன உளைச்சலும் வேதனைகளும் சூழும்.
ஹோமியோபதி, அக்குபஞ்சர், மலர் மருந்துகள் போன்ற மாற்றுமுறை மருந்துகள் மட்டுமே மனிதனை முழுமையாக ஆய்வு செய்கின்றன. மனிதனின் புறநோய்க்குறிகளுக்கு மட்டும் முக்கியத்துவம் கொடுக்காமல், மனநிலை களையும், உணர்வுநிலைகளையும் கணக்கில் கொண்டு சிகிச்சை அளிக்கின்றன. முதுமையில் ஏற்படும் பல்வேறு உடல், மன உபாதைகளை மென்மையாகவும், பாதுகாப்பாகவும் குணப்படுத்த இம்மருத்துவங்களே சாலச்சிறந்தவை.
முதுமையில் பொதுவான ஒரு பிரச்ச னையாக அமைவது தூக்கமின்மை (INSOMNIA). பின்னிரவுத் தூக்கத்தைப் பெரும்பாலான முதியோர் இழந்துவிடுகின்றனர். மனச்சோர்வு, வலிகள், சிறுநீர்த் தொல்லை மற்றும் பல காரணங்களால் தூக்கமின்மை ஏற்படுகிறது. ஹோமியோ மேதை டாக்டர். கெண்ட் அவர்கள், வயதானவர்களின் தூக்கமின்மைக்கு (BARYTA CARB ) “பரிடா கார்ப்” என்ற மருந்து மிகச்சிறந்த பலன்தரும் எனக் குறிப்பிடுகிறார். இப்பிரச்சனைகளைத் தீர்க்க பல ஹோமியோ மருந்துகளும் மலர் மருந்துகளும் உள்ளன. அக்குபஞ்சர் மற்றும் அக்குபிரஷர் போன்ற சீனக் சிகிச்சை முறைகளும் உள்ளன. இதன் மூலம் வாழ்நாள் முழுவதும் தூக்க மாத்திரைகள் சாப்பிடும் பழக்கத்திற்கு முற்றுப்புள்ளி வைக்கலாம்.
இரத்த அழுத்தம் மற்றும் இருதயக் கோளா றுகளுக்கும் மாற்றுமுறை மருத்துவமே சிறந்தது. இப்பிரச்சனைகள் உள்ள முதியோர் காபி, டீ பழக்கத்தைவிட வேண்டும். மீன் சாப்பிடலாம். இறைச்சியில் கொழுப்பு. அதிக எண்ணெய் இல் லாமல் சாப்பிடலாம். கோழிக்கறி உண்பவர்கள் இறைச்சியில் கொழுப்பு, அதிக எண்ணெய் இல்லாமல் தோலை உண்ணக்கூடாது. தோலில் கொழுப்புச் சத்துள்ளதால் அகற்றிவிடுதல் நல்லது .தானியங்கள் , காய்கறிகள் , பழங்கள் சேர்ப்பது அவசியம். ரத்த அழுத்தமுள்ள வர்கள் உப்பைக்குறைத்துக் கொள்வதும், வெங்காயம். பூண்டு போன்றவற்றைச் சேர்ப்பதும், பழவகைகளை உண்பதும் அவசியம். வயிற்றில் இரண்டு பங்கு உணவும் ஒரு பங்கு நீரும், ஒரு பங்கு வெற்றிடமும் இருக்கும்படிப் பார்த்துக் கொள்ள வேண்டும்.
வலிப்பு, ரத்த அழுத்தம், தூக்கமின்மை, தைராய்டு கோளாறுகள் இன்னும் பல வியாதிகளுக்கு ஹோமியோபதியில் ஒரு குறிப்பிட்ட காலத்திற்குள் நிரந்தரத்தீர்வு காண முடிகிறது. உயர்ந்த ரத்த அழுத்தம் மற்றும் தாழ்ந்த ரத்த அழுத்தத்திற்கு மிகச்சிறந்த பலனைத் தரும் மருந்துகள் உள்ளன.
முதுமையில் ஏற்படும் மனத்தளர்ச்சி, உடல் தளர்ச்சிக்கு ஹோமியோ மருந்துகள் பயன்படுகின்றன. முதுமையில் ஏற்படும் பார்வைக் குறைபாடுகளுக்கும், கேட்கும் திறன் குறைவதற்கும், பல ஹோமியோ மருந்துகள் நல்ல நிவாரணம் நல்குகின்றன. முதுமையில் ஏற்படும் நரம்புத்தளர்ச்சி, உடல் நடுக்கத்தை நலப்படுத்த பல ஹோமியோ மருந்துகள் உறுதுணை புரிகின்றன.
முதியோரின் நடமாட்டம் குறைந்து, உடலியக்கம் தடைப்பட்டு முடங்கிக் கிடக்க வைக்கும் முக்கிய வியாதி வாதரோகம். இன்றைய உலகில் இளைஞர்களுக்கும், குழந்தைகளுக் கும்கூட வாதவலிகள் வருகின்றன. மூட்டுவலிகள், மூட்டு அழற்சி, வீக்கம் போன்ற வை பொதுவாக குளிர்ச்சியிலும், ஈரத்திலும், மழை, பனிக்காலங்களிலும், இரவு நேரங்களிலும் அதிக வேதனை தருகின்றன. இந்தத் துயர் களுக்கு அக்குபஞ்சர் சிகிச்சை முழு நிவாரணம் அளிக்கின்றன. ஹோமியோ மருந் துகள் நல்ல குணமளிக்கின்றன.
ஆண்டுகள் உருண்டோட முதுமையின் அறிகுறிகள் முகத்திலும், உடலிலும் தெரிய லாம். ஆனால் உள்ளத்திலே தோன்றக்கூடாது. டால்ஸ்டாய் தனது 82ஆவது வயதில் ‘நான் வெறுமனே இருக்க முடியாது.’ ( I Cannot be silent) என்ற நூலை எழுதினார். மைக்கேல் ஏஞ்சலோ தனது 88வது வயதில் சிஸ்டன் ஆலயக் கூரையில் சித்திரங்கள் வரைந்தார். தாமஸ் ஆல்வா எடிசன் 80ஆம் வயதுகளில் பல கண்டுபிடிப்புகளைச் செய்தார்.
முதுமையில் இனிமை காண, முதுமை யைத் தள்ளிப் போட சிலவற்றைக் கடைபிடிக்க வேணடும். முறையான வேலைத்திட்டம். தினசரி நடத்தல், எளிய உடற்பயிற்சிகளைச் செய்தல், போதுமான உறக்கம், திருப்திகரமான தாம்பத்திய மகிழ்ச்சி, கட்டுப்பாடான, ஒழுக்கமான பழக்கங்கள், நேரந்தவறாத உணவு, அன்புமயமான நண்பர்களை, தோழமையைப் பெறுதல், மனவளத்தை மேம்படுத்தும் நூல்வாசிப்பு போன்றவைகளைப் பின்பற்று வதால் முதுமையில் இனிமை காண முடியும். மேற்குறிப்பிட்டவைகளை அனுசரிப்பதோடு, முதுமையில் அவ்வப்போது ஏற்படும் சிறுசிறு உபாதைகளுக்கும் ஹோமியோ மருந்துகள் எடுத்துக்கொள்வதன் மூலமும் தன்னியக்க ஆற்றல் அதிகரிக்க செய்து நலமான உணர்வுகளோடு வாழமுடியும்.
வாழ்க்கையின் இறுதிப் பகுதியான முதுமை யைத் தொடாமல் எவரும் தப்பித்து விட முடியாது. ஹோமியோபதி மருத்துவம் அறிந்த வராயிருந் தால், ஹோமியோபதி மருத்துவத்திலேயே அவ்வப்போது சிகிச்சை பெறுபவராயிருந்தால் எந்த நோய்சூழலிலும் போராடி வெல்ல முடியும். உடல் நலத்தையும் மன நலத்ததையும் நன்கு பேணமுடியும்.
முதியோர்களுக்கு நிவாரணமளிக்கக் கூடிய முக்கியமான சில மருந்துகளையும் அவற்றின் குறிகளையும் அறிந்துகொள்வோம் :
-
பரிடாகார்ப் - தூக்கமின்மை , தலைசுற்றல்
-
வைதானியா சோம்கிபெரா30 - பலவீனம், சோர்வு (தினம் 1வேளை - 2வாரகாலம்)
-
லைகோபோடியம் 30/200 - பசியின்மை, வயிற்று உப்புசம்.
-
கல்கேரியா பாஸ் 30, - எலும்புத் தேய்வு காரணமாக அடிக்கடி
(தினம் 1 வேலை -1 மாதம்) எலும்பு உளைதல், முறிதல் .
-
வனாடியம் 6 - ரத்தசோகை (தினம் 1 வேளை 15- 30 நாள் )
-
ஏகி போலியா 30 - மலச்சிக்கல் (தினம் 1 வேளை நிவாரணம் கிடைக்கும் வரை)
-
காலி பாஸ் 30 - மூளை சுருங்குதல்
-
பாப்டீஸியா 200 - முதுமையில் ஏற்படும் வயிற்றுக்கடுப்பு
-
சல்பர் 200 - தோல் அரிப்பு, மறதி (பெயர்கூட)
-
ஆரம் மெட் 200 / `1M - மிகுந்த மனச் சோர்வு
தற்கொலைச் சிந்தனை
11. சபல் செருலேட்டா 30 - சுக்கிலச்சுரப்பி வீக்கம், அடிக்கடி சீறுநீர் கழிப்பு. தினம் 1வேளை வீதம் 15 நாள்
(மாதம் 1வேளை தூஜா 1M)
12. பரிடா கார்ப் - இரவில் அடிக்கடி சிறுநீர் கழித்தல்.
13.காலிமூர் 30 - வாய்ப்புண்கள்
14.பீட்டா வல் 6 (15 நாள்) - L.D.L எனப்படும் தீய கொலஸ்டிராலைக் குறைக்க.
15. ஈக்குசிடம் - தன் உணர்வின்றி சிறுநீர் கழிதல்
16. சபடில்லா - உட்கார்ந்துள்ள போது சிறுநீர் சொட்டுதல்
17. மெசிரியம் - கண் ஆப்ரேசனுக்குபின் இமைகளில் நரம்புவலி
18. அவினாசடீவா - கைகள் நடுக்கம்.
19. அகாரிகஸ் - தலை முன்னும் பின்னும் ஆட்டம்
20. டாரண்டுலா ஹிஸ் - தலை பக்கவாட்டில் ஆட்டம்.