மறந்து கொண்டே இருப்பது மக்களின் இயல்பு; நினைவுபடுத்தி தூண்டிக் கொண்டே இருப்பது எமது கடமை!

அண்மைப் படைப்புகள்

மதம் கொண்ட அரசியல்...!

04 ஜூலை 2025 கருஞ்சட்டைத் தமிழர் - ஜூன் 2025

கடவுள், மத நம்பிக்கை உடையவர்களே இன்றும் தமிழ்நாட்டில் மிக மிகப் பெரும்பான்மையினர் என்பதுதான் உண்மை. தமிழ்நாட்டில் மட்டுமில்லை, உலகம் முழுவதும்...

பாஜக - அதிமுக கூட்டணியின் தோல்வியை அறிவித்த முருகன் மாநாடு!

04 ஜூலை 2025 கருஞ்சட்டைத் தமிழர் - ஜூன் 2025

மதுரையில் கடந்த 22 ஆம் தேதி முருக பக்தர்கள் மாநாடு என்ற பெயரில், பாஜகவின் கையாளான இந்து முன்னணி பெயரில் ஒரு மாநாட்டை பாஜகவே நடத்தியிருக்கிறது. திராவிடத்தை...

பகை நடுங்க வாழும் பெருமிதத் தலைவர் கு.இரா.

04 ஜூலை 2025 சிந்தனையாளன் - மே 2025

திராவிட இயக்க வரலாற்றில் உயிர்ப்பு மிகுந்த செயல்பாடுகளின் களமாகக் கோவை மண்டலம் எப்பொழுதும் விளங்கி வருகிறது. 1885இல் “திராவிட பாண்டியன்” இதழையும், பின்னர்...

காசிக்குப் போகும் பாஜக

04 ஜூலை 2025 கருஞ்சட்டைத் தமிழர் - ஜூன் 2025

பக்திவேடம் போட்டு வேலெடுத்து சுற்றித்திரிந்த காவிக் கூட்டத்தார், இப்போது முருக வேடமிட்டு முருகனைத் தூக்கத் தொடங்கி விட்டார்கள், தமிழ்நாட்டில். தமிழ்மீது...

வேஷம்

04 ஜூலை 2025 கவிதைகள்

இன்றைக்கு வாய்த்தது நல்ல வேடிக்கை காட்டும் முகம். பெரிய கோமாளியாகக் கடவதுஎன்று தினசரியில்என் பெயருக்கு ராசிபலன் பொய்யில்லை யாரைப் பார்த்தாலும் சிரித்து...

கையாலாகாதெனும் மெய்கள்

04 ஜூலை 2025 கவிதைகள்

ஒழுங்கற்று ஓடியதுபாதரசப் பொய்கள்பளிச்சென மனதிலேறிஒவ்வொருவரிடமும்நியாயமென பதிந்து. கேட்பாரற்றுக் கிடந்தது.தொன்மங்கள் உண்மையோடுஉறங்கி தொடுதலற்றுதூசுகளேறி...

போதை

04 ஜூலை 2025 கவிதைகள்

நண்பர்களுடன் அரட்டையடிக்கதனிமையைப் போக்கபுத்துணர்ச்சி பெறஇணையுடன் அளவளாவபணியிடையே சற்று இளைப்பாறபிறர் அகம் பற்றி புறம் பேசசாளரம் அருகிலமர்ந்துமழையை...

காங்கிரசின் அலங்கோலம்

04 ஜூலை 2025 பெரியார்

காங்கிரசிலிருந்து தோழர்கள் காந்தி "விலகினார்" அன்சாரி "விலகினார்" ராஜகோபாலாச்சாரியார் "விலகினார்" இவர்கள் விலகிக் கொண்டதாக காட்டிக் கொண்டதில் ஆச்சரிய...

கருஞ்சட்டைத் தமிழர் ஜூன் 28, 2025 இதழ் மின்னூல் வடிவில்...

04 ஜூலை 2025 கருஞ்சட்டைத் தமிழர் - ஜூன் 2025

    கருஞ்சட்டைத் தமிழர் ஜூன் 28, 2025 இதழை மின்னூல் வடிவில் படிக்க இங்கு அழுத்தவும்.    

100 வது ஆண்டில் சோசலிசம் - இலக்கு வைத்துப் பயணிக்கும் மக்கள் சீனம்!

02 ஜூலை 2025 உங்கள் நூலகம் - ஜூன் 2025

ஆர்தர் கிரோபர் 2002 ஆம் ஆண்டில் பெய்ஜிங்கில் சீனா-சார்ந்த ஆராய்ச்சி சேவையான டிராகனோமிக்ஸை கூட்டாக நிறுவினார். 2017 வரை அதன் முதன்மை இதழான சீனா எகனாமிக்...

கருத்துரிமையை மறுப்பதற்கா நீதித்துறை?

02 ஜூலை 2025 சிந்தனையாளன் - மே 2025

நடிகர் கமலகாசன் நடித்த திரைப்பட நிகழ்ச்சியில் பேசியஅவர், அந்த நிகழ்வில் கலந்துகொண்ட கன்னட திரைப்படநடிகர் சிவராஜ்குமாருக்கும் தனக்குமுள்ள அன்புறவை...

உயர்கல்வி நிறுவனங்களில் மேல்சாதியினரின் ஆதிக்கம்

02 ஜூலை 2025 சிந்தனையாளன் - மே 2025

2006ஆம் ஆண்டு ஒன்றிய அரசின்கீழ் உள்ள உயர்கல்வி நிறுவனங்களில் பிற்படுத்தப்பட்டவர்களுக்கு 27 விழுக்காடு இடஒதுக்கீடு முதன்முதலாக வழங்கப்பட்டது. 1970கள் முதல்...

வானில் இருந்து தூவப்பட்ட நூறு மில்லியன் விதைகள்

02 ஜூலை 2025 சுற்றுச்சூழல்

சூழல் நட்புடன் ஒரு வான் சாகசம். ஸ்கை டைவிங் (Sky diving). ஸ்கை டைவிங் என்பது வானில் விமானத்தில் இருந்து பாராசூட் மூலம் பாதுகாப்பான ஒரு குறிப்பிட்ட உயரம் வரை...

சிகரம் ச.செந்தில்நாதனின் அமர படைப்பு

02 ஜூலை 2025 உங்கள் நூலகம் - ஜூன் 2025

தமிழ் மொழி மற்றும் இலக்கிய வளர்ச்சியில் பக்தி இலக்கியங்களுக்கும் பெரும் பங்குண்டு, மதங்கள் உருவாக்கிய பக்தியும் அவற்றுக்கிடையே நடந்த போர்களும் பல்வகைப்பட்டவை;...

ரொட்டித் துண்டுகள்

02 ஜூலை 2025 கவிதைகள்

நல்ல உறக்கத்தில் சங்கிலி என் கனவினில் வந்து இரண்டு ரொட்டித் துண்டுகளும் கொஞ்சம் தண்ணீரும் கொடு என்றது மறுபேச்சின்றிகுளிர் சாதனப் பெட்டியிலிருந்துஇரண்டு...

கீற்றில் தேட...

திருமணங்கள் சொர்க்கத்தில் நிச்சயிக்கப்படுவதாக கூறப்பட்டாலும், திருமணம் செய்து கொண்டவர்கள் வாழ்வதென்னவோ இந்த பூவுலகில்தான். திருமண வாழ்வும் சொர்க்கமாகவோ, நரகமாகவோ மாறுவதும் அவரவர் கைகளிலும், சுற்றுப்புறத்தில் உள்ளவர்களின் கைககளிலும்தான் இருக்கிறது. சமூகரீதியில் திருமணம் என்ற நிகழ்வு பல்வேறு பெயர்களில் புனிதமாக கருதப்பட்டாலும், உரிய வயதடைந்த இரு எதிர்பாலினர் இணைந்து வாழ்வதற்கான ஒரு ஒப்பந்தமாகவே திருமணம் விளங்குகிறது.

Marriage திருமணம் என்பது இருவேறு மனம் மற்றும் உடல்களில் சங்கமமாக மட்டும் அல்லாமல் இருவேறு சமூகங்களின் பிணைப்பாகவும் மாறுகிறது. மேலும் இந்த நிகழ்வு புதிய உயிர்களை, உறவுகளை, உடைமைகளை தோற்றுவித்தல் போன்ற வேறுபல நிகழ்வுகளுக்கும் காரணமாகிறது. எனவே திருமணம் என்ற நிகழ்வை சட்டரீதியாக புரிந்து கொள்வது அவசியம். திருமணத்தின் முக்கிய நிர்பந்தமாக மணம் செய்துகொள்ளும் இருவரின் வயது, மணவுறவுக்கான உடல்நிலை, மனநிலை, மணநிலை ஆகியவை முக்கிய இடம் வகிக்கின்றன.

திருமணம் செய்துகொள்ளும் நபர்கள் எந்த சமூகம் சார்ந்தவர்களாக இருப்பினும் அவர்களின் திருமணத்தை சட்டரீதியாக பதிவு செய்வது மிகுந்த முக்கியத்துவம் பெறுகிறது. குடியுரிமை, சொத்துரிமை, குழந்தைகளின் வாரிசுரிமை போன்ற பல்வேறு சட்டம் தொடர்பான விவகாரங்களுக்கும் திருமணத்தை பதிவு செய்தல் என்பது அவசியமாகிறது. இந்த திருமணப்பதிவு, மதப்பழக்க-வழக்கங்களுக்கேற்ப அமைக்கப்பட்டுள்ளது.

மதநம்பிக்கை இல்லாதவர்கள், மதங்களைப் பற்றிய அக்கறை இல்லாதவர்களுக்கான திருமணப்பதிவு “சிறப்பு திருமணச் சட்டம்” (Special Marriages Act) என்ற பிரிவில் விளக்கப்பட்டுள்ளது.

சாதிகளாலும், மதங்களாலும் பிரிக்கப்பட்டிருந்தாலும், மனங்களால் ஒன்றுபட்டவர்களின் திருமணங்களுக்கு அங்கீகாரம் வழங்குவதே இந்த சிறப்புத் திருமண சட்டத்தின் நோக்கம். இந்து, இஸ்லாமிய, கிறிஸ்தவ சட்டங்கள் மதம் கடந்த திருமணங்களை ஏற்பதில்லை. குறிப்பாக (பழைய) இந்துச் சட்டம் சாதிகள் கடந்த திருமணங்களை ஏற்பதில்லை. எனவே சாதிகளையும், மதத்தினையும் கடந்து திருமணம் செய்ய விரும்புபவர்கள் இந்த சட்டத்தின்கீழ்தான் திருமணம் செய்ய முடியும்.

திருமணம் செய்வதற்கான நிபந்தனைகள்-தகுதிகள்:

1. திருமணம் ஆகாத ஆண்/பெண்களும், கணவனை/மனைவியை இழந்தோரும், சட்டரீதியான மணவிலக்கு செய்தோரும் இந்த சட்டத்தின்கீழ் திருமணம் செய்ய தகுதி படைத்தவர்கள். திருமணம் செய்யவிருக்கும் ஆணுக்கோ, பெண்ணுக்கோ உயிருடன் வாழும் வாழ்க்கைத்துணைவர் இருக்கக்கூடாது.

2. திருமணம் செய்து கொள்ளவிருக்கும் இரண்டு பேரும் மண வாழ்வுக்குத் தேவையான ஆரோக்கியமான மனநிலையோடு இருக்க வேண்டும். உரிய மூளை வளர்ச்சி அடையாதோரும், மனநிலை குன்றியவர்களும் திருமணம் செய்ய முடியாது.

3. திருமணம் செய்து கொள்ளவிருக்கும் இருவரும் திருமண வாழ்வுக்குத் தேவையான உடல்நிலையை பெற்றிருக்க வேண்டும். மகப்பேறுக்கான தகுதியும் அவர்களுக்கு இருக்க வேண்டும். இதற்கான தகுதி பெறாதவர்கள் திருமணம் செய்ய இயலாது.

4. திருமணம் செய்யவிருக்கும் மணமகனுக்கு குறைந்தது 21 வயதும், மணமகளுக்கு 18 வயதும் நிறைந்திருக்க வேண்டும்.

5. திருமணம் செய்யவிருக்கும் மணமக்கள் இருவரும் தடுக்கப்பட்ட உறவுமுறையினராக இருக்கக்கூடாது. எனினும், அவ்வாறான உறவுமுறை திருமணம் அவர்களின் சமூகத்தால் அங்கீகரிக்கப்பட்டால் சட்டமும் அங்கீகரித்ததாகவே கொள்ளப்படும்.

திருமண அறிவிப்பு:

திருமணம் செய்வதற்கான உரிய தகுதிகளை கொண்ட மணமக்கள், அவர்கள் சிறப்புத் திருமணச் சட்டத்தின் கீழ் திருமணம் செய்து கொள்ளவிருப்பது குறித்து அவர்களில் எவரேனும் ஒருவர் வசிக்கும் மாவட்டத்தில் உள்ள திருமணப் பதிவு அதிகாரிக்கு எழுத்து மூலமாக தெரிவிக்க வேண்டும்.

அதனைப் பெற்றுக் கொண்ட திருமண அதிகாரி, திருமணம் செய்துகொள்ள இருப்பவர்களின் தகுதிகள் குறித்த ஆய்வை மேற்கொண்டு அதில் திருப்தி அடைந்தால், அவர்களின் திருமண அறிவிப்பை உரிய பதிவேட்டில் எழுதுவார். மேலும் அந்த அறிவிப்பின் நகல் ஒன்று அந்த அலுவலகத்தில் அனைவரின் பார்வையிலும் இடம் ஒன்றிலும் வைக்கப்படும்.

இந்த திருமணத்திற்கு சட்டரீதியான மறுப்பு கொண்டுள்ள எவரும், இந்த அறிவிப்பு வெளியான 30 நாட்களில் மறுப்பை தெரிவிக்கலாம். அந்த மறுப்பு ஏற்கப்படாத நிலையிலும், மறுப்புகள் ஏதும் பதிவு செய்யப்படாத நிலையிலும், அறிவிப்பு வெளியிடப்பட்டு 30 நாட்களுக்குப்பின் அந்த திருமணம் பதிவு செய்யப்படும். தவறான காரணங்களுக்காக எவரேனும் மறுப்பு தெரிவிக்கப்பட்டு அது விசாரணையில் தெரியவந்தால், அந்த மறுப்பை தெரிவித்தவருக்கு ஆயிரம் ரூபாய்க்கு மேற்படாத வகையில் அபராதம் விதித்து, அந்த தொகையை முழுமையாகவோ மணமக்களுக்கு திருமண அன்பளிப்பாக அளிக்க உத்தரவிடப்படும்.

திருமண நிகழ்வு:

திருமண அறிவிப்பு வெளியிடப்பட்டு 30 நாட்கள் நிறைவடைந்தபின் எந்த ஒரு நாளிலும் திருமணம் நடைபெறலாம். அன்றைய தினத்தில் மணமக்கள் விரும்பும் முறையில் திருமணத்தை நடத்திக்கொண்டு, திருமண பதிவு அலுவலகத்தில் அதற்காக வைக்கப்பட்டுள்ள படிவத்தில் கையெழுத்திட வேண்டும். இரு தரப்பிலும் சாட்சியங்கள் கையொப்பம் இட்டதும், திருமணப்பதிவாளர் அந்த திருமணத்தை அங்கீகரித்து கையொப்பம் இடுவார். இதையடுத்து அந்த திருமணம் சட்டரீதியாக அங்கீகரிக்கப்பட்டதாக கருதப்படும். இதற்கான சான்றிதழும் வழங்கப்படும்.

இந்த சட்டத்தின் கீழ் திருமணம் செய்யாமல் மதம் சார்ந்த வேறு முறைகளில் திருமணம் செய்துகொண்டோரும், இந்த சிறப்புத் திருமணச் சட்டத்தின்கீழ் தங்கள் திருமணத்தைப்பதிவு செய்யலாம்.

- சுந்தரராஜன் இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.

(நன்றி: மக்கள் சட்டம்)