ஊர்த்தலைவர் ஆகவிரும்பும்

யாராக இருப்பினும்

வரகூர் நாராயணசாமி

வரலாற்றைப் படிக்கனும்!              - ஊர்

பதவிதனைத் தேடாமல்

பகட்டுதனை நாடாமல்

பகைவருக்கும் ஓடாமல்

மக்கள்பணி செய்தவர்!         - ஊர்

பதவியிவரைத் தேடிவர

பகைவருமே பணிந்துவர

நேர்வழியில் தலைவராகி

ஊர்உயர உழைத்தவர்!          - ஊர்

ஊரினிலே தீவிபத்து

உண்டானக் காலத்திலே

நேரினிலே அண்ணாவிடம்

நிதிகேட்டுப் பெற்றவர்!           - ஊர்

வீடும்இன்றி வேதனையில்

வீதியிலே நின்றஅவர்

வந்தநிதியை வீடுகட்ட

வாரித்தந்த பாரிஅவர்!         - ஊர்

சரியாய் இளமையிலே

தன்பயணம் தொடங்கினார்

பெரியார் ஆனைமுத்து

தொண்டராய் விளங்கினார்!   - ஊர்

தாழ்த்தப்பட்ட மக்களிடம்

தயங்காது பழகினார்

சுயநலக் காரரிடம்

மயங்கிடாது விலகினார்!             - ஊர்

மா.பெ.பொ. கட்சியிலே

மாவட்டச் செயலாளர்

மாநாடு கூட்டம்போட

நிதிதிரட்டும் செயல்வீரர்!              - ஊர்

ஊர்ப்பணி செய்துகொண்டே

நாட்டுப்பணி தொடர்ந்தார்

தொண்டுசெய்யத் துடிக்குமவர்

தொண்ணூறு அகவைகடந்தார்!      - ஊர்

வரகூர் மக்களெல்லாம்

வாழ்த்தும் தலைவராவார்

நாராயணசாமி மட்டும்

நாட்டுமக்கள் தொண்டராவார்!        - ஊர்

- கவிஞர் அறிவுமழை

Pin It