இன்று தனிமை இங்கில்லை
கடல் மறுத்த மணல் போல
தாகமுள்ள கனவுகள்
இருக்கும் நிறங்களெல்லாம் வானில்
நீண்டதொரு இரவில்
ஊமையாய் ஒற்றை நட்சத்திரம்
கருப்பும் வெள்ளையுமாய்
உடைந்த நிலவு
சிந்திய புன்னகை போல்
சிதறியிருக்கும் மேகங்கள்
அலைகளற்ற அமைதியின்
ஆரவாரத்தில் ஒரு கடல்
திசைகளறியாமல் திரிகின்ற காற்று
யாருமே செலுத்தாமல்
அலையாடும் படகு
திரைச்சீலையாய்
அசையுமென் நிழல் பார்த்து
ஏதோவொரு தெருவில்
ஏதோவொரு சாலையில்,
ஏதோவொரு நகரத்தில்
என்னைப் பார்த்து கையசைத்த
யாரோ சுமந்து சென்ற
ஒரு தலையில்லா உடல்
நான் நினைவுகளில் வடித்ததைக்
கவிதையென்றது
கவிதையே ஆனேன் நான்
இன்னும் எத்தனை இருக்கிறது
எழுதியவற்றின் மிச்சமாய்
நானே விரும்பாத கவிதைகள்.
- விதூஷ்
கீற்றில் தேட...
தொடர்புடைய படைப்புகள்
அண்மைப் படைப்புகள்
- புதிய இட ஒதுக்கீட்டுக் கொள்கை நியாயத்தின் பாற்பட்டதா?
- ஜனநாயகத்தின் சவக்குழியில் நடப்பட்ட செங்கோல்
- தமிழ்ப் பதிப்பு வரலாற்றில் வ.உ.சி. அவர்களின் தொல்காப்பியப் பதிப்புகள்
- மாதவிடாய் விடுப்பு
- சிதம்பரம் பிள்ளை தியாகப்பூக் கொல்லை
- அநீதி கொய்யவும் நீதியை நெய்யவும் வாழ்ந்த தன்மானப் புலவர்
- மரம்
- இராணுவம்
- நரசிம்மராவ் அரசின் EWS இட ஒதுக்கீடு ஆணையின் வரலாறு
- தூக்கு தண்டனையை நிறைவேற்ற மாற்று முறை காண்பதா மாண்பு?
அகநாழிகை - அக்டோபர் 2009
- விவரங்கள்
- விதூஷ்
- பிரிவு: அகநாழிகை - அக்டோபர் 2009