இன்று தனிமை இங்கில்லை
கடல் மறுத்த மணல் போல
தாகமுள்ள கனவுகள்
இருக்கும் நிறங்களெல்லாம் வானில்
நீண்டதொரு இரவில்
ஊமையாய் ஒற்றை நட்சத்திரம்
கருப்பும் வெள்ளையுமாய்
உடைந்த நிலவு
சிந்திய புன்னகை போல்
சிதறியிருக்கும் மேகங்கள்
அலைகளற்ற அமைதியின்
ஆரவாரத்தில் ஒரு கடல்
திசைகளறியாமல் திரிகின்ற காற்று
யாருமே செலுத்தாமல்
அலையாடும் படகு
திரைச்சீலையாய்
அசையுமென் நிழல் பார்த்து
ஏதோவொரு தெருவில்
ஏதோவொரு சாலையில்,
ஏதோவொரு நகரத்தில்
என்னைப் பார்த்து கையசைத்த
யாரோ சுமந்து சென்ற
ஒரு தலையில்லா உடல்
நான் நினைவுகளில் வடித்ததைக்
கவிதையென்றது
கவிதையே ஆனேன் நான்
இன்னும் எத்தனை இருக்கிறது
எழுதியவற்றின் மிச்சமாய்
நானே விரும்பாத கவிதைகள்.
- விதூஷ்
கீற்றில் தேட...
தொடர்புடைய படைப்புகள்
அண்மைப் படைப்புகள்
- பாஜகவை ஏன் வீழ்த்த வேண்டும்?
- விண்வெளியில் தொழிற்சாலைகள்
- திருப்பூர் சங்கீதா மீது பாஜகவினர் தாக்குதல்!
- அடாவடித்தனத்தின் மறுபெயர் அண்ணாமலை!
- அண்ணல் அம்பேத்கர் அவர்களே!
- வேண்டாம் கருவேலமும், மோடியின் ஆட்சியும்!
- ஷண்முகமும் ஒட்டவாவும்
- பெரியார் முழக்கம் ஏப்ரல் 18, 2024 இதழ் மின்னூல் வடிவில்...
- கருஞ்சட்டைத் தமிழர் ஏப்ரல் 13, 2024 இதழ் மின்னூல் வடிவில்...
- மோடியின் உறுதியளிப்பும், செய்த மோசடிகளும்
அகநாழிகை - அக்டோபர் 2009
- விவரங்கள்
- விதூஷ்
- பிரிவு: அகநாழிகை - அக்டோபர் 2009