டி.டி.எச். சேவைக்கான சிறிய டிஷ் ஆன்டெனாவை ரேடியோ தொலைநோக்கியாக பயன்படுத்தி மழை மேகத்தை கண்டறியும் புதிய வசதியை உருவாக்கியுள்ளார் சென்னையைச் சேர்ந்த வானியல் ஆய்வாளர் ஜெ. பெனலன் (69).

Radio Telescopeஇவரது இந்த புதிய கண்டுபிடிப்புக்கு தேசிய அளவிலான அமைப்புகளின் அங்கீகாரம் கிடைத்துள்ளது.

சென்னை அம்பத்தூர் அருகில் உள்ள பாடியில் வசித்து வருபவர் ஜெ. பெனலன். மோட்டார் மெக்கானிக் பிரிவில் பட்டம் பெற்ற இவர் பள்ளி பருவத்தில் பொ. திருகூடசுந்தரனார் எழுதிய அறிவியல் ஆய்வுகள் குறித்த புத்தகத்தைப் படித்தது முதல், அறிவியல்பால் ஈர்க்கப்பட்டார்.

1953-ம் ஆண்டு முதல் இவருக்கு வானியல் ஆய்வில் ஈடுபாடு அதிகரித்தது. இதன் காரணமாக பல்வேறு முக்கிய விண்ணியல் ஆய்வு நிகழ்வுகளில் பங்கேற்றார் பெனலன். வானியல் ஆய்வுகளை அனைத்துத் தரப்பினரும் அறிந்து கொள்ளும் வகையில் அவற்றை எளிமைப்படுத்துவதற்கான வழிமுறைகளை கண்டறியும் வழிகளைத் தேடினார் இவர். இந்த தேடலின் விளைவாக வானியல் ஆய்வில் முக்கியமானதாக கருதப்படும் ரேடியோ தொலைநோக்கியை எளிமைப்படுத்தும் வழிகளை கண்டுபிடிக்கும் பணிகளில் அவர் ஈடுபட்டார்.

வானியல் ஆய்வில் பொதுவாக கண்ணாடி தொலைநோக்கி மற்றும் ரேடியோ தொலைநோக்கி ஆகியவை பயன்படுத்தப்படுகின்றன. கண்ணாடி தொலைநோக்கி மூலம் நட்சத்திரங்கள், கோள்கள் ஆகியவற்றை கண்களால் காண முடியும். மேகக் கூட்டம் அதிகமாக இருக்கும் சமயங்களில் இதனைப் பயன்படுத்த முடியாது.

நட்சத்திரங்கள், கோள்கள் ஆகியவை பிரதிபலிக்கும் ஒளி அளவின் அடிப்படையில் பெறப்படும் எண்களை அடிப்படையாகக் கொண்டு செயல்படுபவை ரேடியோ தொலைநோக்கிகள்.

ஒரு குறிப்பிட்ட திசை நோக்கி வைக்கும்போது அந்த திசையில் கடந்து செல்லும் நட்சத்திரங்கள், கோள்கள், சூரியன் ஆகியவற்றின் நிலைகளை அறிந்து கொள்ளலாம். ரேடியோ தொலைநோக்கிகளை உருவாக்குவது மிகுந்த செலவு மிக்கதாகவும் உருவத்தில் பெரிதானதாகவும் இருப்பதால் இதனை எளிமைப்படுத்த வேண்டிய அவசியத்தை பெனலன் புரிந்து கொண்டார்.

பல ஆண்டுகள் ஆய்வுக்குப் பின்னர் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை செயற்கைக்கோளில் இருந்து நேரடியாக பெற உதவும் டி.டி.எச். ஒளிபரப்பு முறையில் பயன்படுத்தப்படும் டிஷ் ஆன்டெனா இதற்கு உதவும் என தெரியவந்தது.

டிஷ் ஆன்டெனாவில் இருந்து வரும் வயரை செட்டாப் பாக்ஸ்-க்கு கொண்டு சென்று அதில் இருந்து வயரை இதற்காக மிகக் குறைந்த செலவில் உருவாக்கப்பட்டுள்ள கருவிக்கு கொண்டு வந்து அதில் இருந்து மல்டி மீட்டருடன் வயரை இணைக்க வேண்டும். டிஷ் ஆன்டெனா எந்த திசை நோக்கி வைக்கப்பட்டுள்ளதோ அந்த திசையில் வானில் நிகழும் மாற்றங்களை எண்களின் மூலம் தெரிந்து கொள்ள முடியும்.

மழை மேகம், சூரியன், வானியல் நிகழ்வுகள் மட்டுமல்லாது, வானில் ஏற்படும் ஹைட்ரஜன் மேகங்களையும் இதன் மூலம் ஆய்வு செய்ய முடியும். இதன் மூலம் வானில் உருவாகியுள்ள மேகக் கூட்டம் மழை தரும் மேகமா? அல்லது மழை தராத மேகமா? என்பதை தெரிந்து கொள்ள முடியும்.

நட்சத்திரங்கள், கோள்களுக்கு உள்ள எண்களைப் போன்று மேகத்துக்கும் உள்ள எண் மதிப்பீடு அடிப்படையில் துல்லியமாக கண்டறிய முடியும். இதன் மூலம் வானிலைத் துறை பணிகளையும் எளிமைப்படுத்த முடியும். இந்த எளிய முறையில் பெரிய அளவில் ரேடியோ தொலைநோக்கி அமைத்தால் ஆகும் செலவில் மிகக் குறைந்த அளவே இதற்கு செலவாகும். மேலும், பள்ளிகளில் இவற்றை உருவாக்குவதன் மூலம் மாணவர்களுக்கு வானியல் நிகழ்வுகளை மிகக் குறைந்த செலவில் எளிய முறையில் கற்பிக்க முடியும்.

அதிகபட்சம் ரூ. 150க்குள் இந்த முறையில் ரேடியோ தொலைநோக்கியை உருவாக்க முடியும் என்பது தற்போது உறுதி செய்யப்பட்டுள்ளது.

அங்கீகாரம்: ரேடியோ தொலைநோக்கி தயாரிப்பில் முக்கிய மைல் கல்லாகக் கருதப்படும் இந்த முறை சரியானது என ஊட்டியில் உள்ள டாடா அடிப்படை ஆய்வு மையத்தின் வானியல் மையம் அங்கீகரித்துள்ளது. இதேபோல ஹைதராபாத்தில் உள்ள ஒஸ்மானியா பல்கலைக்கழகத்தின் விண்ணியல் ஆய்வு மையமும் இது சரியானது என பாராட்டி அங்கீகரித்துள்ளது.

இந்த இரு நிறுவனங்களின் அங்கீகாரத்தின் மூலம் டிஷ் ஆன்டெனாவை ரேடியோ தொலைநோக்கியாக பயன்படுத்துவதற்கு தேசிய அளவில் அங்கீகாரம் கிடைத்துள்ளது.

சுமார் 20 கிலோ மீட்டருக்கு ஒன்று வீதம் இதுபோன்ற அமைப்பை நிறுவி, மிகப்பெரிய அளவிலான விஎல்ஏ எனப்படும் ரேடியோ தொலைநோக்கியை உருவாக்கலாம்.

2009-ம் ஆண்டு அமெச்சூர் ரேடியோ தொலைநோக்கி ஆண்டாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து பள்ளிகளுக்கு நிதி உதவி அளித்து இத்தகைய ரேடியோ தொலைநோக்கியை பெரிய அளவில் உருவாக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன என்றார் பெனலன்.

இன்னும் படிக்க:http://www.viparam.com/index.php?news=14927

http://del.icio.us/post?url=http://www.viparam.com/index.php?news=14927&title=மழைமேகத்தைகண்டறியபுதியவசதி: சென்னைவிஞ்ஞானிக்குதேசியஅங்கீகாரம் 

- மு.குருமூர்த்தி

Pin It

காலனி ஆதிக்க நாடுகள் சந்திரனிலும் கால் ஊன்றவேண்டும் என்று ஆசைப்படலாம். ஆனால் அந்த ஆசை நிறைவேறுவது அவ்வளவு எளிதல்ல.

சந்திரனில் வசிக்கவேண்டுமென்றால் சுவாசிக்க காற்று வேண்டும்...
குடிக்க நீர் வேண்டும்...
உண்ண உணவுவேண்டும்...
சரியான காற்றழுத்தத்தில் வசிப்பிடம் வேண்டும்...
எரிபொருள் வேண்டும்...

இவ்வளவு வசதிகளையும் சந்திரனிலேயே தேடிக்கொள்ள வேண்டும். ஏனென்றால் பூமியிலிருந்து சந்திரனுக்கு கொண்டு செல்லும் ஒவ்வொரு பவுண்டு எடைக்கும் 50,000 டாலர்கள் செலவு பிடிக்கிறது. ஒரு காலன் தண்ணீரின் எடை எட்டு பவுண்டுகள். ஒரு காலன் தண்ணீரை பூமியிலிருந்து சந்திரனுக்கு கொண்டு செல்ல ஆகும் செலவு 400,000 டாலர்கள்.

சந்திரனில் உள்ள பாறைகளில் ஆக்சிஜன் அடக்கம். வெப்பத்தையும் மின்சாரத்தையும் பயன்படுத்தி ஆக்சிஜனை எளிதாக பெற்றுவிடலாமாம். சந்திரனில் தண்ணீர் அவ்வளவு எளிதாக கிடைத்துவிடாது. சந்திரனின் தென் துருவத்தில் பனிக்கட்டி வடிவத்தில் நீர் இருப்பதாக சொல்லப்படுகிறது. இந்த தண்ணீர் சுரங்கங்களை வெட்டி நீரை எடுத்துக் கொள்ளலாம். நீரை ஹைட்ரஜனாகவும் ஆக்சிஜனாகவும் பிரித்து ராக்கெட்டுகளுக்கு தேவையான எரிபொருளை சம்பாதித்துக் கொள்ளலாம்.

சந்திரனில் தண்ணீர் கிடைக்காமற்போனால் பூமியிலிருந்துதான் நீரைக் கொண்டு செல்லவேண்டும். திரவ ஹைட்ரஜனை பூமியிலிருந்து கொண்டு போகவேண்டும். அதனுடன் சந்திரனின் பாறைகளில் இருக்கும் ஆக்சிஜனைக் கலந்து, நீரை தயாரித்துக் கொள்ளலாம். இந்த நீர் தயாரிக்கும் முயற்சியின் போதே மின்சக்தியையும் பெற்றுக் கொள்ளமுடியும் என்பது மகிழ்ச்சியான செய்தி.

இவையனைத்தும் சாத்தியமாகக் கூடிய செலவில் அமைந்தால், சந்திரனிலும் அமெரிக்கா தனது காலனி ஆதிக்கத்தை விரிவாக்கும்.

மேலும் படிக்க: http://science.howstuffworks.com/what-if-moon-colony.htm

- மு.குருமூர்த்தி இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.

Pin It

Space Stationநூறு நபர்களை சந்திரனில் குடியமர்த்த என்ன செலவாகும்? 15 பில்லியன் டாலர்கள் செலவாகுமாம்.

ஒரு மனிதன் ஓர் ஆண்டில் சாப்பிடும் உணவின் எடை 450 பவுண்டுகள். 100 பேர்களுக்குத் தேவையான உணவை சந்திரனுக்கு கொண்டு செல்ல அதிகம் செலவாகும் என்பதால் சந்திரனிலேயே உணவை விளைவித்துக்கொள்ள முடியுமா? முடியும்.

விவசாயம் செய்வதற்கு கார்பன், நைட்ரஜன், ஆக்சிஜன், ஹைட்ரஜன், பொட்டாசியம், பாஸ்பரஸ் ஆகிய தனிமங்கள் தேவை. இந்த தனிமங்களை ஒருமுறை சந்திரனுக்குக் கொண்டு சென்று விவசாயம் செய்துவிட்டால் போதுமாம். சந்திரனில் குடியிருக்கும் மனிதர்களின் கழிவுகளில் இருந்து மறு சுழற்சி முறையில் அடுத்தடுத்த சாகுபடிகளுக்கு இந்த தனிமங்களை பெற்றுக் கொள்ளலாம் என்கிறார்கள் விஞ்ஞானிகள்

காற்றடைத்த குடியிருப்புகள்தான் தொடக்கத்தில் பயன்படுத்தப்படுமாம். செராமிக் மற்றும் உலோகங்களைப் பயன்படுத்தி வீடுகளை அமைக்க ஆராய்ச்சிகள் நடைபெற்று வருகின்றன.

சந்திரனில் மின்சக்தி தட்டுப்பாடு இருக்காது போல் தோன்றுகிறது. சூரிய ஒளியில் இருந்து பெறப்படும் மின்சாரமும், ஹைட்ரஜன் ஆக்சிஜன் சேர்க்கையால் பெறப்படும் மின்சாரமும் தடையின்றி கிடைக்க வாய்ப்பு இருக்கிறது. சந்திரனில் கிடைக்கக்கூடிய யுரேனியத்திலிருந்து அணுமின்சக்தி பெறவும் வாய்ப்பு இருக்கிறது.

இவ்வளவு வசதிகள் இருந்தும் சந்திரனில் மனிதன் குடியேற இன்னும் என்ன தடை?

முதல் குடியிருப்பை தொடங்குவதில்தான் தடை.

சந்திரனுக்கு போகும் மனிதனின் எடை 200 பவுண்டுகள்.

முதன்முதலாக உணவிற்காக கொண்டு செல்லப்படும் தனிமங்கள் 500 பவுண்டுகள்.

தங்குமிடமும், கருவிகளும் 1,000 பவுண்டுகள்.

உற்பத்தி செய்யும் கருவிகள் 1,000 பவுண்டுகள்.

ஏறத்தாழ ஆள் ஒன்றுக்கு 3000 பவுண்டு வீதம் 100 பேருக்கு 300,000 பவுண்டு எடை சந்திரனுக்கு கொண்டு செல்லப்படவேண்டும். ஒரு பவுண்டு எடையை சந்திரனுக்கு சுமந்து செல்ல 50,000 டாலர்கள் செலவு பிடிக்கிறது. ஆக, 15 பில்லியன் டாலர் இருந்தால் சந்திரனில் நூறுபேர்கள் கொண்ட ஒரு காலனி அமைப்பதைப் பற்றி சிந்திக்கலாம்.

செலவுக்கணக்கு இத்துடன் முடிந்து விடவில்லை. விண்வெளி நிலையத்தை ஏற்றி இறக்குதல், ஆட்களைத் திரட்டுதல், பயிற்சியளித்தல், நிர்வாகம், விலைவாசி ஏற்றத்தாழ்வுகள், அனாமத்து செலவினங்கள் என்று எல்லா செலவுகளையும் கூட்டிக் கழித்துப் பார்த்தால் பலநூறு பில்லியன் டாலர்கள் செலவழித்தால் தான் சாத்தியப்படும்.

அதனால்தான் தாமதம்.

இன்னும் படிக்க... http://science.howstuffworks.com/what-if-moon-colony.htm

- மு.குருமூர்த்தி இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.

Pin It

விசிறியுடன் கூடிய ஆடைகள் (the fan jacket) என்ற ஜப்பானிய கண்டுபிடிப்பு வெயில் காலத்தில் மக்களை குளிர்ச்சியுடன் வைத்திருக்க உதவுகிறது. ஒவ்வொரு நாளும் வெப்பநிலை அதிகரித்துவரும் நிலையில், பாரம்பரிய ஆடைகள் உடலுடன் ஒட்டிக்கொண்டு உடற்சூட்டை அதிகப்படுத்தும்போது, வெளியில் வேலை செய்பவர்கள் ஃபேன் ஜாக்கிட்டோ (Fan-jakketo) என்று அழைக்கப்படும் இந்த குளிரூட்டும் ஆடைகளை நாடுகின்றனர்.

இந்த ஆண்டு வெளிவந்துள்ள டெரிகூர் ஜாக்கெட் (De rigueur jacket) உடலின் பின் பகுதியில் இரண்டு மின்விசிறிகளுடன் உருவாக்கப்பட்டுள்ளது. வழக்கமாகவே ஜப்பானில் கோடையில் வெப்பநிலை மிக அதிகமாக இருக்கும். இந்நிலையில் இந்த ஆடைகள், அணிந்து கொள்பவர்களின் உடலை குளிர்ச்சியுடன் வைத்திருக்க உதவுகிறது. கோடையின் கொடுமையில் இருந்து பாதுகாப்பு தருகிறது.

குளிர்ச்சியான காற்று ஆடைக்குள் வீசியபடி இந்த விசிறிகள் அணிபவருக்கென்று ஒரு நுண் சூழலை உருவாக்குகிறது. இதன் மூலம் அணிபவர்கள் வெளிப்புறத்தில் கடுமையான வெப்பமும் மோசமான ஈரப்பதமும் நிலவும்போது உள்ளுக்குள் குளிர்ச்சியை அனுபவிக்கிறார்கள். சோனி நிறுவனத்தின் முன்னாள் பொறியியலாளர் ஹிரோசி இக்கிகயா (Hiroshi Ichigaya) 1988ல் தென்கிழக்கு ஆசியா வழியாக பயணம் செய்தபோது மனதில் உருவான கருத்தின் அடிப்படையில் பணியில் இருந்து முன்கூட்டியே ஓய்வு பெற்ற பின் இந்த ஆடைகளைக் கண்டுபிடித்து உருவாக்கத் தொடங்கினார்.fan jacketஒவ்வொரு பிரதேசத்திலும் நகரங்கள் துரிதமாக வளர்ந்து கொண்டிருக்கும் சூழ்நிலையில் குளிர்சாதன வசதிகள் எல்லா புதிய கட்டிடங்களிலும் பொருத்தப்படுகின்றன. இது மிகப் பிரம்மாண்டமான ஆற்றல் பயன்பாட்டுக்கு வழிவகுக்கிறது. இதனால் புவியின் வெப்பநிலை மேலும் அதிகரிக்கும் என்பதை அவர் உணர்ந்தார். இதற்குத் தீர்வாக ஆற்றல் திறனுள்ள குளிரூட்டும் ஆடைகளை உருவாக்கினார்.

இவற்றை 2004ல் அவர் புதிதாகத் தோற்றுவித்த குளிரூட்டப்பட்ட ஆடைகள் (air conditioning clothes) என்று ஜப்பானிய மொழியில் பொருள்படும் கூச்சஹூக்கூ (Kuchofuku) என்ற நிறுவனத்தின் மூலம் சந்தைப்படுத்தத் தொடங்கினார். வியர்வை பெருக்கெடுத்து ஓடும் கோடையில், இதற்கு முன்பு வந்த இதே வசதியுடைய ஆடைகளில் பொருத்தப்பட்ட மின்கலங்கள் (battery) நீண்ட நேரத்திற்கு ஆற்றலை சேமித்து வைக்க முடியவில்லை. வேறு சில குறைபாடுகளும் அதில் இருந்தன.

மேம்படுத்தப்பட்ட ஆடைகள் மீண்டும் 2009ல் வெளிவந்தபோது பெரும்பாலோரின் வரவேற்பைப் பெற்றது. 2015ல் மக்கீட்டா (Makita) என்ற நிறுவனம் இதே போன்ற புதிய வசதிகளுடன் கூடிய குளிரூட்டும் ஆடைகளை வெளியிட்டது. இந்த நிறுவனத்தின் வாடிக்கையாளர்களில் பெரும்பாலோர் கட்டிட வேலை செய்பவர்கள், விவசாயிகள், வெளிப்புற வெய்யிலில் வேறு பல வேலைகளைச் செய்பவர்களே.

இவர்களுக்கு இந்த ஆடைகள் பேருதவியாக அமைந்திருக்கின்றன என்று கருவிகளை உருவாக்குவதில் அனுபவம் மிக்க இந்நிறுவனத்தின் பொதுவிவகாரங்கள் பிரிவு மேலாளர் டெசூக் சேக்கி (Daisuke Seiki) கூறுகிறார். தனிப்பட்ட கருவிகளின் விற்பனை பற்றிய விவரங்களை இந்த நிறுவனம் வெளியிடுவதில்லை என்றாலும் கடந்த சில ஆண்டுகளாக அதிக வெப்பம் நிலவுவதால் இந்த வகை ஆடைகளுக்கு நல்ல கிராக்கி இருக்கிறது என்று சேக்கி கூறுகிறார்.

குளிரூட்டும் ஆடைகள் பலவிதம்

சந்தையில் இந்த நிறுவனம் இப்போது பல மாடல் ஆடைகளை விற்பனை செய்கிறது. இவற்றில் திறம்பட்ட ஆற்றல் பயன்பாடுடைய சிறப்பு வடிவமைப்புடன் கூடிய 60 மணி நேரம் தொடர்ந்து இயங்கும் மின் கலங்கள் பொருத்தப்பட்ட ஆடைகளும் அடங்கும்.

உயர் வடிவமைப்புடன் கூடிய (hivis jacket), ஃபேன் வெஸ்ட் (fan vest) ஆடைகள், தலையைச் சுற்றி காற்று வரும் வசதியுடையவை (hooded jacket), கால்சட்டையில் விசிறிகள் பொருத்தப்பட்ட முழு உடலையும் மூடும் வகையில் வடிவமைக்கப்பட்ட ஆடைகள், வேலைக்குச் செல்லாதபோது அணியும் நாகரீக ஆடைகள் போன்றவை இவற்றில் சில.

இந்நிறுவனம் ஆடையில் காற்றோட்ட வசதியை அதிகப்படுத்துவதற்காக துணியின் வடிவமைப்பில் lining) குளிரூட்டும் பைகளை (cold packs) பொருத்தி தைத்து வெளியிடுகிறது. பல நிறுவனங்களால் தயாரிக்கப்படும் இந்த வகை ஆடைகள் போதுமான அளவிற்கு சந்தையில் கிடைக்கிறது என்று யாஹு ஜப்பான் நிறுவனம் கூறுகிறது. ரியான் பாக்கெட் (Reon pocket) என்பது மிக உயர்ந்த வெப்பத்தை முறியடிக்க ஜப்பான் கண்டுபிடித்துள்ள கையில் எடுத்துச் செல்லக்கூடிய குளிர்சாதன வசதியுடைய மற்றொரு தொழில்நுட்பம்.

அணிந்து கொண்டிருக்கும் ஆடைக்குள் கழுத்தைச் சுற்றி பொருந்தும் வகையில் இது வடிவமைக்கப்பட்டுள்ளது. சோனி நிறுவனத்தால் உருவாக்கப்பட்ட புதிய தொழில் முனைவோர் திட்டத்தின் கீழ் இந்த ஆடையின் முதல் மாதிரி 2019ல் வெளிவந்தது. ரியான் பாக்கெட்4 என்பது இதன் மிகப்புதிய மாதிரி. ஜப்பானில் இப்போது இவை மிக அதிக அளவில் விற்பனையாகின்றன.

இதில் சிறிய உணரியுடன் கூடிய குளிரூட்டும் வசதியை மாற்றிக் கொள்ளும் தொழில்நுட்பம் (cool mode) உள்ளது. இந்த உணரிகள் பொருத்திக் கொண்டுள்ளவர்களின் நடத்தல் போன்ற செயல்பாடுகளை உணர்ந்து அதற்கேற்ப தங்கள் குளிரூட்டும் நிலையை (cooling leval) தானியங்கி முறையில் மாற்றிக் கொள்கின்றன. இது அணிபவருக்கு மேம்பட்ட சௌகரியத்தைக் கொடுக்கிறது. இதன் மூலம் மின் கலத்தின் ஆயுள் கூடுகிறது.

இந்த நவீன தொழில்நுட்பங்கள் வருவதற்கு முன்பு, வெயிலை சமாளிக்க ஜப்பானியர்களுக்கு கோடையில் பேய்க்கதைகள் சொல்லிக் கேட்கும் வழக்கம் இருந்து. இது வெப்பத்தில் இருந்து தப்ப உதவும். பேய்க் கதைகளைக் கேட்கும்போது பயம் தோன்றினால் இரத்தத்தை உடல் உள்ளுறுப்புகளுக்கு வேகமாக செலுத்தும்.

இந்த இரத்தம் அதிக அளவுக்கு தோலுக்கு அருகில் இருக்கும் இரத்தக்குழாய்களில் பாயும். இதனால் உடல் முழுவதும் வியர்வை பெருகும். இது உடலைக் குளிர்ச்சியடையச் செய்யும் என்று ஆய்வாளரும் விரிவுரையாளரும் பல்வேறு பருவநிலைகளில் ஜப்பான் மக்களின் கலாசாரம் பற்றி எழுதும் நிபுணருமான யசூகோ மியுரா (Yasuko Miura) கூறுகிறார்.

ஆபன் (Obon) என்ற கோடைகால புத்த மதத் திருவிழாவின்போது இரத்தத்தை உறைய வைக்கும் பேய்க் கதைகள் சொல்லப்படுவது வழக்கம். அந்தந்த பிராந்தியத்திற்கு ஏற்ப இத்திருவிழா ஜூலை அல்லது ஆகஸ்ட் நடுப்பகுதியில் ஜப்பான் முழுவதும் கொண்டாடப்படுகிறது. தாங்கள் வாழ்ந்த மண்ணிற்கு வருவதாகக் கருதப்படும் மூதாதையர்களுக்கு மரியாதை செலுத்துவதற்காக இந்த விழா கொண்டாடப்படுகிறது.

ஈடோ வம்ச ஆட்சியில் தொடங்கிய பாரம்பரியம்

பல கதைகள் நிம்மதியில்லாமல் அலையும் ஆவிகளைப் பற்றியே கூறுகிறது. வரவேற்க, உபசரிக்க இந்த ஆவிகளுக்கு சொந்தபந்தங்களோ குடும்பமோ கிடையாது என்பதால் இத்திருவிழாவின்போது அவை வரவேற்கப்படுகின்றன, உபசரிக்கப்படுகின்றன. 1603-1867 காலகட்டத்தில் ஜப்பானை ஆண்ட ஈடோ (Edo) வம்ச ஆட்சியின்போது கோடையில் பேய்க் கதை சொல்லும் இந்த பாரம்பரிய விழா தொடங்கி இப்போதும் நடைபெறுகிறது.

இன்றும் பல இளம் வயதினர் இதன்படி இத்திருவிழாவை கடைபிடிக்கின்றனர். தங்கள் துணிச்சலை சுயமாக பரிசோதிப்பதற்காக சிலர் வெப்பம் மிகுந்த கோடைகால இரவில் கல்லறைகளுக்கு விஜயம் செய்கின்றனர்.

ஒரு பக்கம் கதை கேட்கும் விழா நடந்தாலும் உயர்ந்துவரும் வெப்பநிலையை சமாளிக்க நவீன தொழில்நுட்பங்கள் எவ்வாறு உதவும் என்பதற்கு இந்த குளிரூட்டும் ஆடைகள் சிறந்த எடுத்துக்காட்டு.

சிதம்பரம் இரவிச்சந்திரன்

Pin It