Sunசூரியன் ஒரு முழுக்கோளம் என்கிற நம்பிக்கை அண்மையில் தகர்க்கப்பட்டிருக்கிறது.

சூரியனின் கோளத்தன்மையை நாசா விஞ்ஞானிகள் அண்மையில் துல்லியமாக அளந்துள்ளனர். இப்படி அளவீடு செய்வதற்கு Reuven Ramaty High-energy Solar Spectroscopi Imager என்னும் விண்தொலைநோக்கி பயன்பட்டுள்ளது. சூரியப் புள்ளிகள் தீவிரமாக இயங்கும் நாட்களில் சூரிய நடுக்கோட்டின் ஆரம், துருவ அச்சின் ஆரத்தைக் காட்டிலும் சற்றுப் பெரியதாக இருக்கிறதாம். சூரியனைச் சுற்றிலும் பழத்தோல் போன்ற ஒரு பொருள் உருவாவதால் துருவப் பகுதிகளில் நசுங்கிப்போன கோளமாக சூரியன் தோற்றமளிக்கிறதாம். சூரியனின் இடுப்பு சற்று பருத்திருக்கிறது என்பதுதான் இதன் பொருள்.

இந்த "பழத்தோல் பிதுக்கம்" காரணமாக சூரியன் ஒரு முழுமையான கோளம் இல்லை என்கிற கருத்து உறுதிப்படுகிறது. சூரியனின் தீப்பிழம்புகளை ஆராய்வதற்காக 2002ல் Reuven Ramaty High-energy Solar Spectroscopi Imager என்னும் விண்தொலைநோக்கி ஏவப்பட்டது. எக்ஸ் கதிர்களையும், காமா கதிர்களையும் பயன்படுத்தி இந்த விண்தொலைநோக்கி அளவீடுகளை செய்துள்ளது.

விண்மீன்களில் சூரியன் மட்டுமே மிக அதிகமான ஈர்ப்புவிசையைப் பெற்றிருக்கிறது. சூரியனின் கோள வடிவம் 0.001 சதவீதம் என்று இது நாள் வரையில் நம்பப்பட்டு வந்தது. நிமிடத்திற்கு 15 சுற்றுகள் வீதம் சுழலக்கூடிய விண்தொலைநோக்கியின் பொருளருகு துளை வழியாக சூரிய வட்டத்தையும், தீப்பிழம்புகளையும் கண்காணித்தபோது, சூரியன் முழுமையான கோளம் இல்லை என்கிற உண்மை தற்செயலாக அறியப்பட்டுள்ளது.

இந்த பழத்தோல் பிதுக்கம் காந்தப்பண்புகளைக் கொண்டதாம். சூரியப்பரப்பில் குமிழ்களாகப் படரும் இந்த மேற்பரப்பிற்கு supergranules என்று பெயரிட்டுள்ளனர். பானையில் கொதிக்கும் நீர்க்குமிழ்களைப் போன்று பிறப்பெடுக்கும் இந்த supergranules மெள்ள மெள்ள விண்மீன்களின் அளவிற்கு உருப்பெருக்கம் அடைகின்றனவாம். supergranules ன் அளவு பூமியைப்போல் இருமடங்கு என்றும் கணக்கீடுகள் காட்டுகின்றன. இவை முழுக்க முழுக்க காந்தப்புல பிளாஸ்மாவால் ஆனவையாம்.

supergranules ன் மையத்தில் தோன்றும் காந்தப்புலம் மெதுவாக மேற்பரப்பை அடைகிறது. சூரியனில் ஏற்படும் காந்தப்புல மாற்றங்களால் g-mode எனப்படும் சூரிய ஈர்ப்பு விசையில் அலைவுகள் ஏற்படுகின்றன. சூரியனின் காந்தப்புல ஏற்றத்தாழ்வுகள், பூமியின் காந்தப்புலத்தை நிச்சயமாக பாதிக்கக்கூடியவை.


- அனுப்பி உதவியவர் மு.குருமூர்த்தி

Pin It

 Sun

 

பூமியின் மேலோட்டுக்குக் கீழே உருகிய குழம்புநிலையில் உள்ள நிலம் எந்நேரமும் புயலாக சுழன்று கொண்டிருப்பதால் அதன் தாக்கம் மேலே நில நடுக்கமாக வெளிப்படுகிறது. கிட்டத்தட்ட இதே போல சூரியனின் உள்ளும் நிகழ்கிறது. இதன் பாதிப்பு சூரிய மேல் பரப்பில் சீற்றத்துடன் பாய்ந்து வீசும் பிழம்பு (Solar Flares) களாக வெளிப்படுகிறது.

பூமியின் நிலநடுக்கம் போலவே சூரியனின் மேல்புறத்திலும் அதிர்வுகள் ஏற்படுகின்றன. " 5 நிமிட அதிர்வு" என்று அழைக்கப்படும் ( 5 minute oscillation) அதிர்வில் 3 மில்லி ஹெர்ட்ஸ் அதிர்வு ஏற்படும். இது கோயில் கண்டாமணி அடித்து ஓய்ந்தும் தொடர்ந்து கேட்கும் ரீங்காரம் போன்றிருக்கும்.

சோலார் அண்ட் ஹீலியோஸ்பியர் (Solar and Helioshpere Observatory SOHO) ஆப்சர்வேட்டரி என்ற NASA-ESA ஆய்வுக்கூடம் இந்த அதிர்வுகளைக் கவனித்துக் கொண்டு வருகிறது. அதிர்வுகள் சூரியனில் எப்படி வெளிப்படுகிறது என்பதை அறிவதால் அதன் செயல்பாடுகளை அறிய முடியும் என்பது உள்ளக்கிடக்கை.

கலைக்கதிர், ஜூலை 2008

- அனுப்பி உதவியவர் மு.குருமூர்த்தி

 

Pin It

கேலக்ஸி எவலூஷன் எக்ஸ்ஃப்ளோரர் என்பது ஒரு பெரிய புற ஊதாக்கதிர் தொலைநோக்கி. நியூமெக்ஸிக்கோவில் நிறுவப்பட்டுள்ளது. இதன் முக்கிய வேலை கேலக்ஸிகளை ஊன்றி கவனித்து படம் எடுப்பது. கேலக்ஸிகளின் மையங்களில் அதிக அழுத்தமும், வெப்பமும், வாய்த்திரட்சியும் இருப்பதால் அங்கே புதிது புதிதாக விண்மீன்கள் தோன்றியபடி இருக்கும். கேலக்ஸியின் வெளிவிளிம்புகளில் பெரும்பாலும் குளிர்ந்துபோய் மரணமடைந்து கொண்டிருக்கும் விண்மீன்களே காணப்படும் என்பது பொதுவான நம்பிக்கை.

மையத்திலிருந்து சுமார் 100,000 ஒளியாண்டுகளுக்கு அப்பால், கேலக்ஸியின் மெல்லிய சாட்டைபோன்ற நீட்சிகளில் ஒன்றில் புதிதாக ஒரு சூரியன் பிறந்துகொண்டிருப்பது தெரிந்தது. தெற்கு கதிர்ச்சக்கர கேலக்ஸி (Southern pinwheel Galaxy) என்று அழைக்கப்படும் (M 83 என்பது அதன் விண்ணியல் பெயர்) ஒரு கேலக்ஸி இளஞ்சிவப்பும் நீலமும் கலந்த மிகவும் பிரகாசமான நட்சத்திரக்கூட்டம்.

M 83 ன் விட்டமே 40,000 ஒளி ஆண்டுகள்தான். இதன் மையத்திலிருந்து 140,000 ஒளியாண்டுகளுக்கு அப்பால் புதிய விண்மீன் உதித்துக் கொண்டிருப்பது அதிசயமாக இருக்கிறது. 'இயற்கை இப்படித்தான்' யாராலும் உறுதியுடன் சொல்ல முடியாது போலிருக்கிறது.

கலைக்கதிர், ஜூலை 2008

அனுப்பி உதவியவர்: மு.குருமூர்த்தி


Pin It

சென்ற மார்ச் மாதம் 2 ஆம் தேதி நமது பூமி பெரிய விண்வெளி விபத்திலிருந்து பிழைத்தது. 35 மீட்டர் குறுக்களவுள்ள விண்கல் பூமியின் பாதையில் குறுக்கிட்டுச்சென்றது. மேலும் 72,000 கி,மீ நெருங்கி வந்திருந்தால், 1908 இல் சைபீரியாவில் ஏற்பட்ட துங்குஸ்க்கா விண்கல் மோதல் அளவுக்கு பாதிப்பு நிகழ்ந்திருக்கும்.

கல்லின் பெயர் 2009 45, வேகம் பூமியின் சார்பில் வினாடிக்கு 8.82 கி.மீட்டர். மோதலின் அதிர்வு 15 மெகா டன் வெடிமருந்துக்குச் சமம். அடுத்து 2067 இல் இது பூமியைக் குறுக்கிடலாம். இதுவரை சுமார் 6043 விண்கற்கள் பூமியை நெருங்கிவந்து பயமுறுத்திவிட்டுச் சென்றிருக்கின்றன. 58 ஆண்டுக்கப்பால் மறுபடியும் 2009 45 திரும்பிவரும்போதும் பூமி பிழைத்துக்கொள்ளும் அதற்கப்புறம் எப்படி என்பது இயற்கைக்கே வெளிச்சம்.

- முனைவர் க.மணி

Pin It