மறந்து கொண்டே இருப்பது மக்களின் இயல்பு; நினைவுபடுத்தி தூண்டிக் கொண்டே இருப்பது எமது கடமை!

அண்மைப் படைப்புகள்

நீட் தேர்வு நடத்தும் அமைப்பின் படுதோல்விகள்

05 ஜூன் 2026 பெரியார் முழக்கம் - ஜூன் 2026

ஊழலில் பதவி நீக்கம் செய்யப்பட்ட அதிகாரிக்கு பதவி உயர்வு வழங்கிய மோடி ஆட்சி! 2026 மே 3 அன்று, இந்தியாவின் ஒருங்கிணைந்த மருத்துவ இளநிலைப் படிப்புகளுக்கான...

தமிழ்நாட்டில் மாடு வெட்டத் தடையா?

05 ஜூன் 2026 பெரியார் முழக்கம் - ஜூன் 2026

பொது இடங்களில் மாடுகளை வெட்டத் தடை செய்து மதுரை உயர்நீதிமன்ற கிளை நீதிபதிகள் ஜி. ஆர். சுவாமிநாதன் மற்றும் லட்சுமி நாராயணன் அமர்வு தீர்ப்பு அளித்துள்ளது....

பாஜகவின் மும்மொழித் திணிப்பை தமிழ்நாடு அரசு ஏற்கக் கூடாது!

05 ஜூன் 2026 பெரியார் முழக்கம் - ஜூன் 2026

பி.எம்., சி.பி.எஸ்.சி பாடத்திட்டத்தின் வழியாக ஒன்றிய ஆட்சி திணிக்கும் மும்மொழிக் கொள்கையை தவெக ஆட்சி ஏற்கக்கூடாது என்று வலியுறுத்தி திராவிடர் விடுதலைக் கழகம்...

'திருப்பரங்குன்றம் ஃபைல்ஸ்' ஆவணப்படத்திற்கு தடை ஏன்?

05 ஜூன் 2026 பெரியார் முழக்கம் - ஜூன் 2026

மத நல்லிணக்கத்தை பேசும் "திருப்பரங்குன்றம் ஃபைல்ஸ்" ஆவண படத்தை புதுக்கோட்டையில் திரையிட காவல்துறை மறுத்துள்ளது வன்மையான கண்டனத்திற்கு உரியது. வீதி கலை இலக்கிய...

ஆலங்குளம் அருகே ஜாதிவெறி தாக்குதல்

05 ஜூன் 2026 பெரியார் முழக்கம் - ஜூன் 2026

தமிழ் நாடு அரசு மவுனம் கலைக்க வேண்டும்! 29.05.2026 அன்று தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அருகேயுள்ள நெட்டூர் கிராமத்தில் பட்டியல் இனத்தவர் இல்ல திருமணத்திற்கு...

சமூக மாற்றத்துக்கான சவால்கள் கருத்தரங்கம்

05 ஜூன் 2026 பெரியார் முழக்கம் - ஜூன் 2026

பாபா சாகேப் அம்பேத்கர், தந்தை பெரியார், மார்க்ஸ் அறிவு மேடையின்சார்பாக சமூக மாற்றத்தின் இன்றைய தேவைகளும், எதிர்கொள்ளும் சவால்களும் என்ற தலைப்பில் 24.05.2026...

காங்கிரஸ் பிளவு - மூன்று இடங்களில் அலங்கோலம்

05 ஜூன் 2026 பெரியார்

வீரவாகு பிள்ளையும் பிரிந்தாராம் எங்கும் காங்கிரசுக்கே வெற்றியென்று கூறப்பட்டாலும் காங்கிரஸ் வெற்றியின் யோக்கியதை இப்பொழுதுதான் வெளிவரத் தொடங்குகிறது....

பெரியார் முழக்கம் ஜூன் 04, 2026 இதழ் மின்னூல் வடிவில்...

05 ஜூன் 2026 பெரியார் முழக்கம் - ஜூன் 2026

    பெரியார் முழக்கம் ஜூன் 04, 2026 இதழை மின்னூல் வடிவில் படிக்க இங்கு அழுத்தவும்.    

தமிழ்நாட்டில் வளர்ச்சி அரசியலா? கவர்ச்சி அரசியலா?

04 ஜூன் 2026 கட்டுரைகள்

தமிழ்நாடு இப்போது பதட்டமான நிலையில் இருக்கிறது. ஊடகங்களில் கொலை, கொள்ளை, பாலியல் வன்கொடுமை என்று குற்றச் செய்திகளாகவே வருகின்றன. மின்வெட்டு, தண்ணீர்ப்...

மேற்கத்திய மார்க்சியம், கலாச்சார அதிகாரம் மற்றும் அல்காரிதமிக் மேலாதிக்கத்தின் காலம்

04 ஜூன் 2026 கட்டுரைகள்

மேற்கத்திய மார்க்சியம் என்பது மார்க்சியச் சிந்தனையின் ஒரு விலகலா அல்லது அதன் மறுமலர்ச்சியா என்பது குறித்த விவாதம் பல தசாப்தங்களாகத் தொடர்ந்து வருகிறது....

தத்துவ அறிவியல்

04 ஜூன் 2026 கட்டுரைகள்

முனைவர் பட்டம் என்பதே கல்வியில் மிக உயர்ந்த பட்டமாக திகழ்கிறது. எந்தத் துறை சார்ந்த ஆராய்ச்சி கல்வியில் ஈடுபட்டாலும் தத்துவத்தின் மாமேதை என்றுதான் முனைவர்...

நுண்ணுயிர் எதிர் பொருட்களும் புதை படிவ எரிபொருட்களும்

04 ஜூன் 2026 பொது மருத்துவம்

நுண்ணுயிர் எதிர் பொருட்களும் ஏன் புதை படிவ பொருட்கள் போல என்று கூறப்படுகின்றன? இவை இரண்டும் நவீன உலகை படைக்க உதவின. ஆனால் மிதமிஞ்சிய அளவில்...

நதி உதிர்தல்

04 ஜூன் 2026 கவிதைகள்

நட்சத்திரங்களெல்லாம்நெல்மணிகளென்றுநாம் தவறாக கணித்த போதுநள்ளிரவில் தங்க வயல்களெல்லாம்கருமையாக உருகி வழிந்தன ஒரு தேக்கு இலையைஅரசமரத்து இலையென்றுநாம் தவறாக...

மொட்டைமாடி மொட்டைமாடி

04 ஜூன் 2026 கவிதைகள்

1. வீடு: உன் உலகம் வீட்டிற்குள்ளேஉன் சொந்தம் மட்டுமே உலகம்.வீட்டுக்கு மேல்உலகமே உனக்குச் சொந்தம். 2. மடி தேடும் படிகள் வீட்டுக்கு மேலும் மேலும்சாய்ந்துக்...

சிறார் இலக்கியமா நீ?!

04 ஜூன் 2026 கவிதைகள்

வளைவு வரைகண்கள் வாங்கிப் போகும் நதிஅதன் பிறகுஎன் கவிதை வாங்கிப் போவதைஅடுத்தூர் ஆத்துமேட்டுஅனார்கலிகள்படிக்க நேரிடலாம் *ஆசையாய் கட்டிக்கொண்டதுவாட்ச்...

கீற்றில் தேட...

கருக்கலைப்பு மையங்கள் மீது தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்காததால் ஆண்டுக்காண்டு பெண் குழந்தைகள் பிறப்பு விகிதம் கடுமையாக குறைந்து வருகிறது. மதுரை மாவட்டம் மேலூரில் உள்ள சேக்கிப்பட்டியில் ஆயிரம் ஆண் குழந்தைகளுக்கு 716 பெண் என்ற வகையில் எண்ணிக்கை குறைந்துள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

girls_347கரு உருவாவதற்கு முன்பாக மற்றும் பிறக்கப்போகும் குழந்தைகளின் குறைபாடுகளைக் கண்டறிய உதவும் மருத்துவத்தொழில் நுட்பம் அதிவேகமாக மனித சமுதாயத்தில் இருந்து பெண் இனத்தைக் கறுவறுக்கும் வேலையைச் செய்து வருகிறது. “சமுதாயத்தில் சமமாக இருக்க வேண்டிய பெண் இனம் குறைந்தால் பல கட்ட சீரழிவுகளை வருங்கால சமுதாயம் சந்திக்க வேண்டியிருக்கும். அதிகரித்து வரும் பெண் கருக்கொலை, நாட்டில் பெரும் மாற்றத்தை ஏற்படுத்துவதாக அமையும். அப்படிப்பட்ட சூழ்நிலை உருவானால், குழந்தைகளும், பெண்களும் வன்புணர்ச்சிகளுக்கு ஆளாவார்கள். ஒரு பெண்ணை பலர் மனைவியாக பங்கிட்டு கொள்ளும் நிலையும் உருவாகும்” என்று ஐ.நா.சபையின் எச்சரிக்கை இப்படியாக உள்ளது.

தினமும் 2 ஆயிரம் சிசுக்கள் அழிப்பு

பிறக்கும் முன்பே கருவில் கொல்லப்படும் எண்ணிக்கையில் இந்தியாவில் தினமும் 2 ஆயிரம் சிசுக்கள் அழிக்கப்படுவதாக ஐ.நா. ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் சிசு கொலைக்கு முடிவு கட்ட வேண்டிய மத்திய, மாநில அரசுகளின் போதாமையால், பெண் குழந்தைகளின் பிறப்பு விகிதம் நாளுக்கு நாள் குறைந்து வருவதாக புள்ளி விபரங்கள் தெரிவிக்கின்றன.

கடந்த 2001ம் ஆண்டு பாலின விகிதாச்சாரப்படி 1 முதல் 6 வயதுக்குட்பட்ட குழந்தைகளில் ஆயிரம் சிறுவர்களுக்கு 927 சிறுமிகள் மட்டுமே இருந்தனர். இப்போது வெளியாகியுள்ள 2011ம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பில், ஆயிரம் சிறுவர்களுக்கு 914 சிறுமிகள் மட்டுமே உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 30 ஆண்டுகளில் இந்தியாவில் 1.2 கோடி பெண் சிசுக்கள் கருவில் அழிக்கப்பட்டுள்ளன. இந்தியாவில் மட்டும் ஒவ்வொரு நாளும் 2 ஆயிரம் பெண் சிசுக்கள் சட்டத்துக்கு புறம்பாக கருவில் அழிக்கப்படுவதாக ஐ.நா. வெளியிட்டுள்ள ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஸ்கேன் மையங்களின் செயல்பாடுகள்

மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, தமிழகத்தின் மக்கள் தொகை 7 கோடியே 21 லட்சத்து 38 ஆயிரத்து 958 ஆக உயர்ந்துள்ளது. இவர்களில் 52 சதவீதம் பேர் கிராமப்புறங்களில் வசிக்கின்றனர். சென்னை, மதுரை, கோவை உள்ளிட்ட முக்கிய தலைநகரங்களான நகர்ப்புறங்களில் 48 சதவீத மக்கள் வசிக்கின்றனர். இதில் ஆண்கள் எண்ணிக்கை 3 கோடியே 71 லட்சத்து 89 ஆயிரத்து 229. பெண்கள் எண்ணிக்கை 3 கோடியே 49 லட்சத்து 49 ஆயிரத்து 729 என்ற அளவிலேயே உள்ளது.

தமிழகத்தில் 2011 மார்ச் மாதத்தின்டி 560 ஸ்கேன் மையங்கள் அரசு மருத்துவமனைகளில் செயல்பட்டு வருகிறது. 8 மரபணு சோதனை ஆராய்ச்சி கூடங்கள், 3943 அல்ட்ரா சவுண்ட் மருத்துவமனைகள், 38 செயற்கை கருத்தரிப்பு மையங்கள், 11 ஆம்னியோ சென்டிசிஸ் மையங்கள் ஆகியவை பதிவு செய்யப்பட்டுள்ளன. தமிழகத்தில் மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத்துறையால் மொத்தமாக 4560 மையங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. சென்னை, சேலம், மதுரை, திருச்சி, தஞ்சாவூர், நாமக்கல், கரூர், தர்மபுரி, ஈரோடு, தூத்துக்குடி, வேலூர், விருதுநகர், விழுப்புரம், திருப்பூர், சிவகங்கை, புதுக்கோட்டை, திருவண்ணாமலை, கடலூர் ஆகிய மாவட்டங்களில் செயற்கை கருத்தரிப்பு மையங்கள் செயல்பட்டு வருகின்றன.

கருவுருவதற்கு முன்பு மற்றும் பிறக்கப்போகும் குழந்தைகளின் குறைபாடுகளைக் கண்டறிய உதவும் மருத்துவத்தொழில்நுட்பங்கள் சட்டத்தின்படி பதிவு செய்யாமலேயே இயங்கிக் கொண்டிருக்கின்றன. தாய்மைப்பேற்றின் மகப்பேறு முதற்கட்டமாக அதை உறுதிப்படுத்திக்கொள்ள மகப்பேறு மருத்துவரை கர்ப்பிணிப் பெண்கள் அணுகி ஆலோசனை பெறும்போது அந்த மகப்பேறு மருத்துவர் கருத்தரிப்பு குறித்து பல்வேறு ஆலோசனைகளைக் கொடுக்கக்கூடிய எந்த ஒரு மருத்துவரும், மருத்துவமனையும் மரபணு ஆலோசனை மையத்தின் கீழ் பதிவு செய்ய வேண்டும் என்ற விதிகளை பெருமளவு மதிப்பதேயில்லை.

2 ஆண்டுகள் கூட்டம் நடத்தப்படவில்லை

உதாரணத்திற்கு மதுரை மாவட்டத்தில், மரபணு ஆலோசனை மையம், மரபணு கிளினீக், அல்ட்ரா சவுண்ட் ஸ்கேன் மையம் என 222 உள்ளன. ஆனால், ஏராளமான குழந்தை கருத்தரிப்பு மையங்கள் மதுரையில் இயங்கி வருவது இன்னும் பதிவு செய்யப்படாமல் உள்ளன. இச்சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்டுள்ள சேவை மையங்கள், ஒவ்வொரு மாதமும் 5 ம் தேதிக்குள் சமர்பிக்க வேண்டிய விபரங்கள் உரிய படிவத்தில் சமர்பிக்க வேண்டும் என்று மதுரை மாவட்ட ஆட்சியர் அன்சுல் மிஸ்ரா கூறியுள்ளார். ஆனால், இவற்றைக் கண்காணித்து 60 நாட்களுக்கு ஒரு முறை கூட்டம் நடத்த வேண்டிய ஆலோசனைக்குழு ஒழுங்காக கூட்டத்தைக் கூட கூட்டுவதில்லை.

கடந்த 2009, 2010 ஆம் ஆண்டுகளில் கூட்டமே நடத்தப்படவில்லை. கடந்த ஆண்டு ஒரு கூட்டம் தான் நடைபெற்றுள்ளது. அக்கூட்டத்திலும் 28 புதிய மையங்களுக்கு அனுமதி தருவது குறித்து தான் முடிவு செய்யப்பட்டுள்ளதே தவிர விதிமுறை மீறுபவர்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. மதுரை மாவட்டத்தில் உள்ள 222 ஸ்கேன் சென்டர்களில் 101ல் தான் சோதனை செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. ஆணா, பெண்ணா என பார்த்து சொல்லப்படும் என மேலூரில் விளம்பரம் செய்யும் ஸ்கேன் சென்டர் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இதுவரை தமிழகத்தில் 72 வழக்குகள் பதிவு செய்யப்பட்டதில் எந்த மருத்துவர் மீதும் இதுவரை நடவடிக்கை எடுக்கப்படவில்லை. அபராதம் மட்டுமே விதிக்கப்பட்டுகிறது. பெண் குழந்தைகளின் பிறப்பு விகிதம் குறைவதற்கு பெருமளவு அல்ட்ரா சவுண்ட் மருத்துவமனைகளே காரணமாக உள்ளன.

குறையும் எண்ணிக்கை

girls_tn_380மதுரை மாவட்டத்தில் ஆயிரம் ஆண் குழந்தைகளுக்கு 716 பெண் குழந்தைகள் என்ற நிலைக்கு பெண்களின் எண்ணிக்கை குறைந்துள்ளது. மதுரை மாவட்டத்தில் 2010 ஆண்டு பெண் குழந்தைகளின் பிறப்பு விகிதம் பெருமளவு குறைந்துள்ளது. கள்ளந்திரியில் 897, ஒத்தக்கடையில் 914, சக்கிமங்கலத்தில் 921, காஞ்சாரம்பேட்டையில் 909, குலமங்கலத்தில் 953, மேலக்காலில் 878, கருங்காலக்குடியில் 758, சேக்கிப்பட்டியில் 716, வெள்ளலூரில் 749, திருவாரூரில் 748, ஏ.வல்லாளப்பட்டியில் 740,  உத்தப்பநாயக்கனூரில் 718 என பெண் குழந்தைகளின் பிறப்பு விகிதம் குறைந்துள்ளது. நகராட்சி பகுதியில் திருப்பரங்குன்றத்தில் 885, திருமங்கலத்தில் 889 எனவும் குறைந்துள்ளது. ஒட்டுமொத்தமாக கடந்த 2009 ஆம் ஆண்டு பெண் குழந்தைகளின் பிறப்பு விகிதம் 953 ஆக இருந்தது. அது 2010 ஆம் ஆண்டில் 924 ஆக குறைந்துள்ளது. ஒரு வயதிற்குள் இறக்கும் குழந்தைகளின் விகிதம் கடந்த 2009 ஆம் ஆண்டு 0.1 என்ற நிலையில் இருந்து 1.6 என்ற விகிதத்தில் கூடியுள்ளது.

கருவுற்ற போது கருவின் தன்மையை கணிக்கும் தொழில்நுட்ப முறைகள் சட்டத்தை மீறுபவர்கள் என்று மதுரை மாவட்ட ஆட்சியர் அன்சுல் மிஸ்ரா சமீபத்தில் அறிக்கை ஒன்றில் கூறியிருந்தார். ஆனால், அந்த சட்டங்கள் ஏற்கனவே உள்ளவைகள் தான். மதுரை மாவட்டத்தில் இதுவரை அப்படி எத்தனை பேர் இச்சட்டத்தை மீறியுள்ளனர் என்றோ, யார் மீதாவது நடவடிக்கை எடுக்கப்பட்டது என்ற பதிவோ இதுவரை இருந்த மதுரை மாவட்ட நிர்வாகங்களால் சொல்ல முடியவில்லை. ஆரம்ப சுகாதார நிலையங்களில் ஏன் பெண் குழந்தைகள் பிறப்பு குறைகிறது என்ற ஆய்வையும் மேற்கொண்டதில்லை. இதன் காரணமாகவே ஒவ்வொரு பகுதியிலும் குறையும் பெண் குழந்தைகளின் எண்ணிக்கை மேலும் குறைந்து வருகிறது.

ஆன்லைன் மூலம் பதிவு

திருச்சியில் கர்ப்பிணி பெண்கள் குறித்த பதிவு என்பது கடந்த சில மாதங்களுக்கு முன்பு ஆன்லைன் மூலம் பதிவு செய்யப்பட்டது. இப்படி செய்வதன் மூலம் புள்ளிவிபரக்கணக்கில் தவறு செய்ய முடியாது. ஆனால், தற்போது நிதியில்லை என்று ஆன்லைன் பதிவு நிறுத்தப்பட்டுள்ளது. தமிழகம் முழுவதும் ஆன்லைன் மூலம் கருவுறும் தாய்மார்கள் குறித்த பதிவை மேற்கொள்வதன் மூலம் எத்தனை குழந்தைகள் பிறக்கின்றன என்ற விபரங்கள் முழுமையாகக் கிடைக்கும். அதுவரை அரசு தரும் புள்ளி விபரங்கள் கேள்விக்குள்ளாக்கப்பட்டு தான் வரும் என்று தமிழ்நாடு பெண் கருக்கொலைக்கு எதிரான பிரச்சார அமைப்பின் நிர்வாகி ஜீவா கூறினார்.

ஒரு பெண் முதல்வராக ஆளக்கூடிய மாநிலத்தில் பெண் குழந்தைகளின் பிறப்பு விகிதம் என்பது குறைந்து வருகிறது என்கிற அபாயத்தை அவரிடம் சுட்டிக்காட்ட வேண்டியுள்ளது. பெண்ணை பேதை, பெதும்பை, மங்கை, மடந்தை, அரிவை, தெரிவை, பேரிளம் பெண் என ஏழு பருவங்களாகச் சுட்டிக்காட்டுகின்றனர்.ஆனால், பிறக்கும் முன்பு கொல்லப்படும் இலட்சக்கணக்கான பெண் சிசுக்கள், ஏழு பருவங்களில் ஒன்றைக் கூட அடைய முடியவில்லை என்பது தான் பெரும் சோகம்.

- ப.கவிதா குமார்