வரப்பை நீக்கிய கூட்டுப் பண்ணையில்
தரமிகு வேளாண் பொருளைப் படைக்கவும்
முதலெனும் நுகத்தடி களைந்த தொழிலில்
மதியுடை மக்களின் தேவையை யுணர்ந்து
புவியை அதிகம் பிழியா வண்ணம்
நவிலும் சான்றோர் நல்லுரை கேட்டு
வேண்டிய பொருளை உற்பத்தி செய்ய
ஈண்டு அமைப்போம் உழைப்பவர் அரசை
(வரப்புகளை நீக்கி, கூட்டுப் பண்ணைகளை அமைத்து, அங்கே தரம் மிகுந்த வேளாண் பொருட்களை உற்பத்தி செய்யவும், மூலதனம் என்ற நுகத்தடியை வீசி எறிந்து விட்டு (சுற்றுச் சூழலுக்குக் கேடு வராதபடி) அறிவடைய மக்களின் தேவைகளை உணர்ந்து கொண்டு பூமியன் மூலாதாரங்களை அதிகமாகப் பிழியாமல், நல்லறிஞர்களின் ஆலோசனைகளின்படி (தொழிலாளர்களின் கண்காணிப்பில்) வேண்டிய பொருட்களை உற்பத்தி செய்ய உழைப்பவர்களின் தலைமையில் சோஷலிச அரசை அமைப்போம்.)
- இராமியா
கீற்றில் தேட...
தொடர்புடைய படைப்புகள்
அண்மைப் படைப்புகள்
- இதற்குப் பெயர்தான் சமூக நீதியா?
- குடிஅரசு 100
- பூமியில் வந்து விழும் உயர் ஆற்றல் துகள்கள்
- ஜூன் 4, வரலாறு மாறும்!
- குறிச்சி என்பது?
- பரப்புரை பயணக் காட்சி - பாசிசம் வீழ்வதற்கான சாட்சி
- எச்சங்களிலான நிலம்
- ஜன நாயகமா? பண நாயகமா?
- கருஞ்சட்டைத் தமிழர் மே 04, 2024 இதழ் மின்னூல் வடிவில்...
- ‘குடிஅரசு’க்கு வயது 100
- விவரங்கள்
- இராமியா
- பிரிவு: கவிதைகள்