கேள்வி
நூறா யிரக்கணக் காகச் செலவிட்டு
நூற்றுக் கணக்காய்த் திரைப்படம் ஆக்கினர்
மாறான எண்ணத்தை மட்டக் கதைகளை
மக்களுக் கீந்தனர் அண்ணே - அது
தக்கதுவோபுகல் அண்ணே
விடை
கூறும் தொகைக்காகக் கூட்டுத் தொழில்வைப்பர்
கூட்டுத் தொழில்முறை நாட்டுக்கு நல்லது!
ஏறாக் கருத்தைஇங் கில்லாக் கதைகளை
ஏற்றினரோஅவர் தம்பி? - இது
மாறாதிருக்குமோ தம்பி?
கேள்வி
தன்னருந் தொண்டினில் தக்கதோர் நம்பிக்கை,
தாங்கருந் தீங்கினில் நீங்கிடும் நல்லாற்றல்,
என்னும் இவைகள் திரைப்படத் தேயில்லை
என்றைக்கு வந்திடும் அண்ணே? இங்
கெழுததாளரேஇல்லை அண்ணே.
விடை
சென்னையைக் காட்டிவை குந்தமென் பார்ஒரு
செக்கினைக் காட்டிச் சிவன்பிள்ளை என்பார்கள்
நன்னெறி காணாத மூதேவி தன்னையும்
நான்முகன் பெண்டென்பர் தம்பி - தொலைந்
தேன்என்னும் பொய்க்கதை தம்பி
கேள்வி
செந்தமிழ் நாட்டில் தெலுங்குப் படங்கள்!
தெலுஙகருக்கிங்கு நடிப்பெதற்காக?
வந்திடு கேரளர் வாத்திமை பெற்றார்
வளர்ந்திடுமோ கலை அண்ணே? - இங்கு
மாயும் படக்கலை அண்ணே
விடை
அந்தத் தெலுங்கு மலையாளம் கன்னடம்
அத்தனை யும்தமிழ் என்று விளங்கிட
வந்திடும் ஓர்நிலை, இப்படத் தாலன்றோ
வாழ்த்துகநீ யிதைத் தம்பி - இதைத்
தாழ்த்துதல் தீயது தம்பி
கேள்வி
அங்கங் கிருந்திடும் நாகரி கப்படி
அங்கங் கிருப்பவர் பேசும் மொழிப்படி
செங்கைத் திறத்தால் திரைப்படம் ஆக்கிடில்
தீமை ஒழிந்திடும் அண்ணே - நம்
செந்தமிழ் நேருறும் அண்ணே
விடை
கங்குல், பகல், அதி காலையும் மாலையும்
காலத்தின் பேராய் விளங்குதல் போலே
இங்குத் தமிழ்மலை யாளம் தெலுங்கெனல்
எல்லாம் திராவிடம் தம்பி - இதில்
பொல்லாங்கொன்றில்லையே தம்பி!
கீற்றில் தேட...
தொடர்புடைய படைப்புகள்
அண்மைப் படைப்புகள்
- ஆரியர்கள் பெண்களிடம் கருணை காட்டினார்களா?
- இலட்சியமற்ற வாழ்க்கை
- டால்ஸ்டாயின் மற்றொரு முகம்
- உள்ளாட்சிக்கான புதிய அரசியல்
- ஆதி திராவிடர்களுக்கு பிரைஸ்
- தமிழ்நாட்டை வட நாடாக்கும் பா.ஜ.க. சூழ்ச்சிகளை முறியடிக்க வேண்டும்
- தமிழர்கள் இந்துக்கள் அல்ல
- ‘சரியான பெயர்’
- பேரா.மா.ரா.அரசு: நினைவில் நிழலாடும் நிகழ்வுகள்
- வாடுதல் முறையோ?
- விவரங்கள்
- பாரதிதாசன்
- பிரிவு: பாரதிதாசன்
படத்தொழிலின் பயன்
கீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.
கீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.