பார்த்ததைப் பார்ப்பதும், கேட்டதைக் கேட்பதும்
படத்தின் நோக்கமெனில்
போர்த்த அழுக்குடை மாற்றமும், வேறு
புதுக்கலும் தீதாமோ?
காத்தது முன்னைப் பழங்கதை தான்எனில்,
கற்பனை தோற்றதுவோ?
மாத்தமிழ் நாட்டினர் எந்தப் புதுக்கதை
பார்க்க மறுத்தார்கள்?
பாமர மக்கள் மகிழ்ந்திட வைத்தல்
படங்களின் நோக்கமெனில்,
நாமம் குழைத்திட வோஅறி வாளர்கள்
புற்கலை கண்டார்கள்?
தூய்மைத் தமிழ்ப்படம் செந்தமிழ் நாட்டில்
தொடங்கையில் செல்வரெலாம்
தாமறிந்துள்ள செல்வரெலாம்
தாமறிந்துள்ள தமிழ்ப்புல வோர்களைச்
சந்திப்ப தேனும் உண்டோ?
நேர்மைஇ லாவகை இத்தகை நாளும்
நிகழ்ந்த படங்களெல்லாம்
சீர்மிகு செந்தமிழ்ச் செல்வர்கள் பார்வைத்
திறத்திற் பிறந்திருந்தால்,
ஓர்தமிழ் நாட்டில் உருசிய நாட்டையும்
உண்டாக்கித் தீர்த்திடலாம்
ஆர்செய்யும் பூச்சாண்டி இங்குப் பலித்திடும்?
அடிமையும் தீர்த்திடலாம்!
கீற்றில் தேட...
அண்மைப் படைப்புகள்
- விவசாயக் கூலியின் வயிற்றில் அடி; விவசாயிக்கு கடன் தள்ளுபடி
- மக்களாட்சியில் அரசியல் முதலாளித்துவம்
- வாரிசு
- சிந்தனைகளின் தொகுப்பு
- மூதேவி சாகாளோ
- அறிவிப்பு
- பட்டியல் வெளியேற்றத்தால் இன இழிவு ஒழியுமா?
- திராவிட முன்னேற்ற கழகத்தின் தேவையும் அவசியமும்
- ஆளுநர் வேலை திவசம் செய்வதா?
- தி.மு.கழகம் ஏன் ஆட்சிக்கு வர வேண்டும்?
- விவரங்கள்
- பாரதிதாசன்
- பிரிவு: பாரதிதாசன்
மடமை ஓவியம்
கீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.
கீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.