பரிபாலனத்தின் உயரத்திலிருந்து
ஓங்கி ஒலிக்கிறது
ஆணையின் உரத்த குரல்
நிவாரணம்... நிவாரணம்
உயிர்களைப் பிடித்துக் கொண்டிருந்த
கைகளை வித்து வாங்குகின்றனர்
நிவாரணங்களை மக்கள்
மிதிப்பட்டுச் செத்த
மக்களின் மீது சுமத்தப்படுகின்றன
குற்றச்சாட்டுகள்
‘பொறுமையற்றவர்கள்'
‘பணத்திற்கு அலைபவர்கள்'
‘வதந்திகளை நம்புகிறவர்கள்'
மவுனத்தின் மூடிகளை
அணிந்து கொண்டு தலைகுனிகின்றது
மக்களின் கோபம்
வீட்டுக்குள் நுழைந்த தண்ணீரை
இறைக்கின்றன செத்தவர்களின்
நைந்த உடல்கள்
அரசின் கைகள்
அணைத்துக் கொள்கின்றன - ஆதரவோடு
அடுத்த தேர்தலுக்காய்
உயிரோடிருக்கும் வாக்குகளை
கீற்றில் தேட...
தொடர்புடைய படைப்புகள்
அண்மைப் படைப்புகள்
- சாதி ஆணவப் படுகொலைகளை தடுக்கத் துப்பில்லாத திமுக அரசு
- அப்பட்டமாக வெளிப்பட்ட நடிகர் விஜய்யின் கோர முகம்! ஆர்எஸ்எஸ் பிஜேபியை விஞ்சிய தவெக!!
- தொல்லியல் அறிஞர் வி.கார்டன் சைல்ட் (1892-1957)
- சித்தாவுக்கு முன்பாகவே இராவணன் உருவாக்கிய சிந்தாமணி மருத்துவம்
- மாஞ்சோலை தொழிலாளர்களின் நீதிக்கான போராட்டம்
- துஷ்பிரயோகமெனும் துண்டித்தலும் ஊமையான ஒலிவாங்கிகளும்
- வடிவமற்ற சர்ப்பம்
- சத்தியமூர்த்தியின் தற்கால ஞானோதயம்
- தனிச்சட்டமே தீர்வு!
- அரசின் அலட்சியமே கள்ளக்குறிச்சி மரணங்கள்