தன்னில் தொலைந்த
ஆணைப் பற்றி
அவள் அறிந்தே இருக்கிறாள்...

தொலையாத பெண்ணின்
குறிப்புக்களை அவள்
வாசித்தபடியே இருக்கிறாள்...

வார்த்தைக‌ளின் பின்வாசல்களை
அடைத்தே இருக்கிறாள்...

தொலையாததைக் கொண்டு
தொலைந்ததைத் தேட‌
அவள் என்றுமே
முயன்றதில்லை...

ஈர்ப்பு விசை விதிகளை
அவள் ச‌ரிபார்த்த‌தில்லை...

ஊராரின் முன் ந‌ட‌க்கையில்
செவிக‌ளை அடைக்க‌
அவள் என்றுமே ம‌ற‌ப்ப‌தில்லை...


✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.